Thursday 2 November 2017

பாலிவூட் உஸ்தாஸுக்குத் தடை!



மலேசிய இஸ்லாமியப் போதகர் உஸ்தாஸ் பாலிவூட் என்று அழைக்கப்படும் ஹாஸ்லிம் பகாரிம்,  ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் பிராச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான ஆணையை ஜொகூர் சுல்தான் நேற்று வெளியிட்டார்.

ஹாஸ்லிமின் பேச்சுக்கள் இனங்களுக்கிடையே கருத்து வேற்றுமைகளை  உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல் மனக்கசப்பினையும் ஏற்படுத்தக் கூடியவை. அவருடைய மதப் பிரச்சாரங்கள் அனைத்தும் மத நல்லிணக்கத்தை தகர்க்கக்கூடியவை. அவருடைய முன்னைய பிரச்சாரங்களை வைத்துப் பார்க்கும் போது அந்தப் பிராச்சாரங்கள் மக்களுக்கு ஏற்றதாக இல்லை என சுல்தான் அறிவித்தார்.

மாநில இஸ்லாமிய இலாக்கவின்  தலைவர் அப்துல் முத்தாலிப்   இது பற்றி கருத்து தெரிவித்த போது ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் போதர்களின் பிராச்சாரங்களைக் கண்காணித்து வருகிறோம்.  பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்துவதை  சுல்தான் விரும்பவில்லை என்றார்.

உஸ்தாஸ் பாலிவூட்டோடு,  ஜிம்பாப்வேயைச் சேர்ந்த முப்தி இஸ்மாயில் மென்க் என்பவரும் ஜொகூரில் இஸ்லாமியப் பிரச்சாரங்களுக்குத் தடைவிதிக்கப் பட்டிருக்கின்றார்.

அதே போல, சிங்கப்பூர் உள்துறை அமைச்சும் இந்த இரு இஸ்லாமியப் போதகர்களை சிங்கப்பூரில் நுழைய தடை செய்திருக்கிறது.  இவர்களால் சிங்கப்புரில்  முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவரிடையே ஒற்றுமைக்குக் கேடு விளையும் என அது விளக்கம் அளித்திருக்கிறது.

மலேசியத் துணைப்  பிரதமரும், உள்துறை அமைச்சருமான      டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமிடி  இந்த இரு போதகர்களும் நாட்டில் இருக்க, போதிக்க எந்தத் தடையும் இல்லை என அறிவித்திருக்கிறார். அவர்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல் படுகிறார்கள் அதனால் அவர்களைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை எனக் கூறுகின்றார்!


No comments:

Post a Comment