Thursday 30 November 2017

வாய்த் தவறினேன்!! மன்னியுங்கள்!


கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சூர் எல்லாருக்கும் தெரியும் படியாக "என்னை மன்னியுங்கள்! சமயங்களில் நான் "லூசுத்தனமாக" பேசிவிடுவேன்! பெரிது படுத்தாதீர்கள்!" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்!

பொதுவாக அவர் மன்னிப்பு கேட்கும் நபர் அல்ல. ஆனால் இந்த சமயம் அவர் மலாய்க்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்! அதனால் மன்னிப்புக் கேட்கும் அவசியம் அவருக்கு     ஏற்பட்டுவிட்டது! தேர்தல் வருகிறது என்றாலே இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும். 

ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை! உண்மையைத்தான் பேசினார். அதற்குத் தான் இந்த மன்னிப்பு! 

மாரா கல்லூரி ஆரம்பிக்கபட்டதின் நோக்கம், நிச்சயமாக, ஓர் உயர்வான நோக்கம் தான். அதில் ஏதும் ஐயம் இல்லை. கல்வித் துறையில் மிகவும் பின் தங்கிய சமூகமாக இருந்த மலாய்க்காரர்களுக்கு அன்றைய நிலையில் அரசாங்கத்தின்  உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது என்பது உண்மை. அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து காலி இடங்களையும் நிரப்பும் பணியை இந்த மாரா கல்லுரிகளை வைத்து  நிரப்பட்டது.  தகுதியின் அடிப்படையில் அல்ல, தகுதியே இல்லாத நிலையில் தான் நிரப்பட்டது!  அது ஒரு காலம். அதன் பலாபலனை அப்போதிருந்தே மலேசியர்கள் அனுபவத்திக் கொண்டிருக்கிறர்கள் என்பதும் உண்மை!

ஆனால் இப்போது இந்த மாரா கல்லுரிகளின் நிலை என்ன? இப்போது அதன் கல்வித்தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. எல்லா உயர் கல்வி நிறுவனங்களைப் போல நல்ல சிறப்பான தரமான     கல்வியை இந்தக் கல்லூரிகள் கொடுக்கின்றன. இங்கு  சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு இந்த மாணவர்களால் அந்தக் கல்வியின் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பது தான். அதாவது வேறு தரமான கல்லூரிகளில் படிக்க 'இலாயக்கு' இல்லாத மாணவர்கள்  அனைவரும் இந்தக் கல்லுரிகளில் கொண்டு வந்து குப்பைகளைக் கொட்டுவது போல் கொட்டப்படுகிறார்கள்! கெட்டிக்கார மலாய் மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அல்லது உள்ளுரிலேயே தரமான கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்ப்படுகிறார்கள்.. ஆனால் எதற்குமே தகுதி இல்லாதவர்கள் மாரா கல்லுரிகளை நிரப்புகிறார்கள்.! அதற்குக் காரணம் வழக்கம் போல அரசாங்க பதவிகளை நிரப்ப இவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் அரசாங்க ஊழியர்களின் தரம் எப்போது மாறும் என்று நம்மால் கணிக்கப்பட் முடியவில்லை!

இந்த மாரா கல்லுரிகளின் குப்பைகளைத் தான் துங்கு அட்னான் "மந்தமான மாணவர்கள்" என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்! குப்பைகளைக் கிளரினால் என்ன நடக்கும் என்பதை துங்கு இந்நேரம் புரிந்திருப்பார்! அதனால் தான்  வாய்த் தவறினேன்! மன்னியுங்கள்! என்று மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிவிட்டது!

நாமும் மன்னிப்போம்!


No comments:

Post a Comment