Friday 31 August 2018

கேள்வி - பதில் (86)

கேள்வி

தி.மு.க. வின் நிரந்தர தலைவராக மு.க.ஸ்டாலின் ஆகிவிட்டார். இனி மு.க.அழகிரியின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்

மு.க.அழகிரியின் தலைவர் கனவு, கனவாகப் போய்விட்டது!  அவர் என்ன தான் பேசினாலும் அவர் தலைவராகும் நிலையிலும் இல்லை.  அவரின் உடல் நிலையும் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது.

கட்சியில் தொண்டர்கள் ஸ்டாலின் பக்கம் தான். காரணம் தொண்டர்கள் தலைவர் பக்கம் தான் இருப்பார்கள். தலைவர் வெறும் தலைவராக மட்டும் இல்லை தனவந்தராகவும் இருக்கிறார்! 

அழகரி முடிந்தால் வேறு ஒரு கட்சியில் இணையலாம். அப்படி இணைந்தாலும் அந்தக் கட்சிக்குப் பெரியதொரு பலமாக  அது அமையப்போவதில்லை. அவரால் தனியாக ஒரு கட்சியும் அமைக்க முடியாது. அந்த ஆற்றல் அவரிடம் இல்லை. தொண்டர்களும் தயாராக இல்லை. 

மதுரையையே ஆட்டிப்படைத்த அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நிலை  இப்படியா  ஆக வேண்டும்?

எப்படி  கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் தி.மு.க.வைத் தவிர வேறு போக்கிடம் அவருக்கு இல்லை. அப்படியே தி.மு.க.வின் உறவை அவர் துண்டித்தாலும் அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களை மறந்துவிட வேண்டிய நிலை வரும். அனைத்தையும் ஸ்டாலின் வாரிசுகளுக்கு எழுதி வைத்தது போல் ஆகிவிடும். அது எப்படி முடியும்?

அதனால் அவர் தி.மு.க. வோடு ஒட்டிக் கொண்டு தான் தனது மீதக் காலத்தை ஓட்ட வேண்டும். அப்போது தான் இவருடைய வாரிசுகளுக்கு ஏதாவது தி.மு.க. சொத்துக்களில்  பங்குக் கிடைக்கும்.

ஸ்டாலின் -  அழகிரி சண்டை என்பது திமு,க,வில் உள்ள சொத்து சண்டை தான்.  ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் நிரந்தரத் தலைவர். இனி அந்தப் பதவி அவரின் பிள்ளைகளுக்குத் தான் போகும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் நிலை என்னவென்று பார்ப்போம்!

No comments:

Post a Comment