Wednesday 15 August 2018

ஏமாற்றமே...!

நூறு நாள்களுக்குள் இந்தியர்களுக்கு ஏதாவது கணக்கில் காட்ட வேண்டுமே  என்னும்  நோக்கத்தில்  வெளியாகியிருக்கிறது இந்த அறிவிப்பு.

பரவாயில்லை, இது ஆரம்பமாக இருக்கட்டும்.  அறுபது வயது மேற்பட்டவர்களுக்கு முதலில் நீல நிற அடையாள  அட்டை கொடுப்பதை வர வேற்கவே செய்கிறோம்.

ஆனாலும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அறுபது வயது மேற்பட்டவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. குடும்பத்தைக் காப்பாற்றப் போவதில்லை.  ஏதோ ஓரிருவரைத் தவிர பெரும்பாலும் ஓய்வுப் பெற்றவர்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் அரசாங்கத்தின் உதவி மட்டுமே. கிடைக்கட்டும். வாழ்த்துகிறோம்.

நாம் சொல்ல வருவதெல்லாம் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைமையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது மட்டும் தான்.  இந்த சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள்  ஏதோ அவர்கள், குறைந்த சம்பளத்தில்,  விரும்பாத  வேலைகளைச் செய்து கொண்டு, தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்னும் அக்கறையோடு அவர்களது கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இளம் வயதினர் பலர் இருக்கின்றனர்   அதனால்  அறுபது வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனடியாகக் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் உள்ளவர்களையே முதலில்  கவனிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். வேலை செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கின்றார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் பலர் இருக்கின்றார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு நீல அடையாள அட்டை கிடைப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.

அறுபது வயதுக்கு  மேற்பட்ட சுமார் 3,407 பேருக்கு நீல நிற அடையாள அட்டை கிடைக்கப் பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.   அரசாங்கத்தில் பணிபுரிபவர்களின் திறனற்ற வேலைகளினால் பலர் பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களில் இவர்களும் அடங்குவர்.  அதிலும் இந்தியர்கள் பலர் அடங்குவர்.

வருங்காலங்களில் திறமையற்ற அரசாங்க  ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டும். ஆகக்  கீழ்மட்ட வேலைகளுக்கு அவர்கள் அனுப்பப்பட வேண்டும். தவறுகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இந்த முடிவு ஏமாற்றந்தான்!  ஒர் ஆரம்பம் தேவை. இங்கிருந்து ஆரம்பம். வரவேற்போம்!

No comments:

Post a Comment