Friday 31 August 2018

அட! இப்படியும் ஒரு மனிதரா...!

வேட்டி கட்டுவது என்பது நமது பாரம்பரியம். அந்தப் பாரம்பரியத்தை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது விழாக்காலங்களிலும். திருமண நிகழ்வுகளிலும்  வேட்டி கட்டுவது என்பது தொடரத்தான் செய்கிறது.



ஆனாலும் அமெரிக்காவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் "நான் விமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்!"  என்று அடம்பிடித்து எல்லா நடைமுறைகளையும் தகர்த்தெறிந்து வேட்டியைக் கட்டிக்கொண்டு விமானம் ஓட்டிய அந்த இளைஞரைப் பற்றியான செய்தியைப் படித்த போது  "அந்தத் தமிழன் என்கின்ற திமிர்" நம் அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றே  நினைக்கிறேன்.  சாக்குப் போக்குச் சொல்ல வேண்டாம். நம்மால் முடியும்.

அந்த இளைஞரின் பெயர் ரவிகரன் ரணேந்திரன்.   பொறியியல் மாணவரான  இவர் பேசுகின்ற தமிழும் பிறமொழி கலவா தூய தமிழில் பேசுகிறாராம். வாழ்த்துகிறோம்!  மற்றவர்களுக்கு நாம் அறிவுரை சொல்லும் முன்னமே நாமே மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக  இருப்பது  அவசியம் தானே!


இவரைப் போன்று பல இளைஞர்கள் தமிழன் என்கிற தனித்த அடையாளத்தோடு நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்களை வாழ்த்துவோம்! வரவேற்போம்!

No comments:

Post a Comment