Wednesday 29 August 2018

எங்கோ உதைக்கிறது...?

உணவகங்களுக்கு ஆள் பற்றாக்குறை - அது நமக்குப் புரிகிறது. இப்போது மனிதவள அமைச்சர் அதற்காக பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். செய்யட்டும்.  உணவகர்களுக்குத் தேவை எல்லாம் மனித வளத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டும். அப்போது தான் அவர்களால் நிம்மதியாக ஆள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண முடியும்.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்காங்கே புதிய, புதிய உணவகங்களைத் திறந்து கொண்டிருக்கிறார்கள்! யார் இவர்கள்? பெரும்பாலும் கேரள காக்காமார்கள்! இவர்களால் மட்டும் எப்படி ஆள் பற்றக்குறைப் பிரச்சனையைத் தீர்க்க முடிகிறது?  அவர்களிடம் ஆள் பற்றாக்குறை என்கிற பிரச்சனைக்கே இடமில்லையே!  இத்தனைக்கும் இவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. வேலை செய்பவர்கள் அனைத்தும் கேரள இனத்தவர்கள். உணவகத்தை நடத்துபவர்கள் அனைவரும் கேரள இனத்தவர்கள். அவர்களுக்கு உரிமம் என்பது ஒரு பிரச்சனை அல்ல. உணவகம் திறப்பது ஒன்றும் பிரச்சனை அல்ல. அவர்களின் தொழில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது! நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அங்கே சாப்பிட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம்.

அப்படியென்றால் அவர்கள் என்ன மாதிரியான "சிஸ்டம்" கையாளுகிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. வெளியூர்காரர்கள். ஆனாலும் வெற்றிகரமான ஒரு திட்டத்தை வைத்து கொண்டு அவர்கள்  செயல்படுகிறார்கள்.

மனிதவள அமைச்சு இதனை ஆராய வேண்டும். உணவகங்களை இழுத்து மூடிவிட்டு அவர்கள் போவதில்லை. அதெல்லாம் உள்ளூர்வசிகள் செய்கின்ற வேலை!  அவர்களைப் பற்றி நாம் என்னன்னவோ  குறை சொல்லுகிறோம்.' பழையதை'  வைத்து கொண்டே காலத்தை வெற்றிகரமாக ஓட்டுபவர்கள்!  சுத்தம் என்பதெல்லாம் அபத்தம் என்னும் கொள்கையுடைவர்கள்! இன்னும் பல குறைகள். 

ஆனாலும் தொழில் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆள் பற்றாக்குறை இல்லை! சமயல்காரர்கள் பற்றாக்குறை இல்லை!  பற்றாக்குறை என்னும் பற்றாக்குறையே இல்லை!

ஏன் இந்த அளவு பீடிகை? இன்று தான் எனது அருகில் ஒர் உணவகத்தை இந்த  "கேரள மாமாக்கள்" திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு மாமா கடைகள். இப்போது இன்னுமொன்று. அவர்கள் திறந்திருக்கும் வரிசையிலேயே இன்னும் இரண்டு உணவகங்கள். 

அவர்களுக்கு உள்ள துணிச்சலை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment