Pages

Friday, 23 December 2016

RM 50 மில்லியன் வெள்ளியைக் காணோம்!


சீன ஆரம்பப்  பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வெள்ளி 50 மில்லியனைக் காணோம்!

2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் சீன  ஆரம்பப் பள்ளிகளுக்காகாக ஒதுக்கப்பட்ட 50 மில்லியனைக் காணோம் என்பது தான் இப்போதைய பரப்பான செய்தி!

நம்மைப் பொருத்தவரை நாம் பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்பட்ட -  பணமாக இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி -  பல காணோம்களை   நாம் கண்டுவிட்டோம்.

ஆனால் சீனப்பள்ளிகளைப் பொருத்தவரை இப்போது தான் முதன் முதலாக பெரியளவில் பேசப்படுகிறது! இது போன்று காணாமல் போவது முதல் தடவையாகக் கூட  இருக்கலாம்!

இந்தக் காணாமல் போவதில் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்தவரை காணாமல் போனால் போனது தான்!  அதற்குக் காரணமானவன் ஆளுங்கட்சியில் உள்ள தமிழனாகத்தான் இருப்பான்! அவனுக்கு மொழியைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை! காரணம் அவன் தாய்ப்பால் குடிக்காமல் 'தண்ணி அடிச்சே'  வளர்க்கப்பட்டவன் என்பதால் தாய்மொழி பற்றெயெல்லாம் துறந்தவனாக இருப்பான்!




                (அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளி)


 சீனர்கள் நிலை வேறு.  அவர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இன்று நாட்டில் சீனப்பள்ளிகள் தான் எல்லா இனப் பெற்றோர்களும் விரும்பும் பள்ளிகளாக இருக்கின்றன. சிறப்பான கல்விக்கு அவர்கள் தான் முதலிடம்.

காணாமல் போன பணம் அப்படியே ஓடிவிடாது! அவர்கள் அதனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள்!

இன்று  இந்தப் பிரச்சனையை எதிர்கட்சியில் உள்ளவர் கொண்டுவந்தாலும் அவரைத் தூண்டிவிட்டதே ஆளுங்கட்சியில் உள்ள சீனராகத்தான் இருப்பார்! இது போன்ற பிரச்சனைகளில் அவர்கள் கமுக்கமாக காதும்-காதும் வைத்தால் போல நடந்து கொள்ளுவார்கள்.

ஆனாலும் பயப்பட ஒன்றுமில்லை! அப்படி ஒன்றும் ஏமாந்த சோணகிரிகளோ - ஏமாளிகளோ அல்ல சீனர்கள்! பணம் கைக்கு வரும்வரை அவர்கள் விடமாட்டார்கள்!

இப்படிக் கையாடல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment