Pages

Monday, 16 July 2018

கேள்வி - பதில் (81)

கேள்வி

சேலம் எட்டு வழிச்சாலையை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரே!

பதில்

பத்திரிக்கைச் செய்திகள் அப்படித்தான் சொல்லுகின்றன. அவர் சொல்லுவதாக வெளியிடப்படுகின்ற செய்திகள் எதனையும் நம்ப முடிவதில்லை.  காரணம் அடுத்த நாளே நான் அப்படிச் சொல்லவில்லை. எனது செய்தியை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன  என்பார்!

ஆனால் இந்தச் செய்தியைத் திரித்து எழுவதற்கு ஒன்றுமில்லை. அதனால் அவரின் கருத்து அதுவாக இருக்கலாம். பொதுவாக அவரின் கருத்துக்கள் பா.ஜ.க. வின் கருத்துக்களை ஒட்டியே இருக்கின்றன என்பதும் நமக்குப் புரிகிறது.

அவர் ஏன் பா.ஜ.க. வை ஆதரிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணங்கள் இருக்கலாம். பொதுவாக பா.ஜ.க. இந்துத்துவா கட்சி என்று சொல்லப்படுகிறது. இந்துக்களைத் தவிர்த்து இந்தியாவிற்கு வேறு மதங்கள் தேவை இல்லை என்பது தான் அவர்களின் கொள்கை. அடுத்து பிராமணர்களின் ஆதரவு என்றால் அது பா.ஜ.க. வுக்குத் தான். அதாவது உயர் வர்க்கத்தினரின் கட்சி. ரஜினிகாந்த் தன்னை உயர்ந்த ஜாதிக்காரன் என்று சொல்ல விரும்புகிறாரா? தெரியவில்லை!

ரஜினியை "சுப்பர் ஸ்டார்" என்று எந்த உயர்ந்த ஜாதிக்காரனும் சொல்லுவதில்லை. அவர்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? பெரும்பாலும் சாதாரண , கீழ் நிலையில் உள்ளவன் தான் அவரை கொண்டாடுகிறான்!  பாலாபிஷேகம் செய்கிறான்! 

அவரது இந்த எட்டு வழிச்சாலை ஆதரவு என்பது,  இது சாதாரண மக்களின் பிரச்சனை. விவசாயிகள். இவர்களில் பெரும்பாலும் அவரது ரசிகர்கள். அவர்களின் நிலங்களை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக  பிடுங்கி எட்டு வழிச்சாலையை அமைப்பது என்பது எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை.

இங்கு யாரும் மேம்பாட்டுத் திட்டங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இருக்கின்ற சாலைகளே போதுமே என்பது தான் மக்கள் கொடுக்கின்ற செய்தி. இந்தச் சாலையைப் பயன் படுத்தப் போகிறவர்கள் மிகச் சிலரே. 

ஆனால் ரஜினிகாந்த் ஆதரிப்பது வேறு ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவருக்கு பா.ஜ.க.வின் உதவி ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது. அதாவது அரசாங்க மட்டத்தில். அவர் பிராமணர்களின் குரலாகவே செயல்படுகிறார்!

இருக்கட்டும்! "காலா" பட்ட அடி போதவில்லை என்று தான் தோன்றுகிறது! அடுத்த படம்......?

 

No comments:

Post a Comment