Pages

Tuesday, 20 August 2019

ஒரு வரலாற்றுச் சோகம்

"உத்துசான் மலாயு " நாளிதழ் நாளை முதல் (21.8.2019) மூடப்படுகிறது என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம்தான்.

ஒரு நீணட, நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாளிதழ் கடைசியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே என்பதை அறியும் போது நமக்கு அது மகிழ்ச்சி அளிக்கவில்லை. 

இந்தக்  காலக்கட்டத்தில் பத்திரிக்கைத் துறை அல்லது நாளிதழ்கள் அல்லது மாத இதழ்கள் நடத்துவதென்பது சாதாரண விஷயம அல்ல. இன்று அனைத்தையும்  இணையத்தளத்தில் படித்து விடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

இப்போது என்ன மொழி பத்திரிக்கையானாலும் இணயத்தளங்களின் போட்டியைத் தவிர்க்க  முடியாது. அப்படி இருந்து இன்னும் பத்திரிக்கைகள் பேர் முடிகிறது என்றால் பத்திரிக்கைகளின் தரத்தை இணையத்தளங்கள் கொண்டு வர முடியாது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்!

ஆனால் உத்துசாம் மலாயு  இந்த அளவுக்கு அதன் விற்பனை கீழ் நோக்கிப் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம் அதன்    தரமான, பற்றுள்ள வாசகர்கள் தளம் அவர்களுடையது. 

பொதுவாகவே என்று பத்திரிக்கைகளின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படுகிறதோ அன்றே அதன் அஸ்தமகாலமும் ஆரம்பித்து விட்டது எனத் தாராளமாக  நம்பலாம்.  அது தான் எண்பது ஆண்டு கால உத்துசானுக்கும் ஏற்பட்டது. ஒரு நூறூ ஆண்டு காலப் பத்திரிக்கையான தமிழ் நேசனுக்கும் ஏற்பட்டது!

ஆனால் கடைசியாக  கிடைத்த செய்தியின்படி உத்துசான் தனது விற்பனையைத் தொடரும் என்று அறிவித்திருக்கிறது!  அது நல்ல செய்தியாக இருந்தாலும் அது தொடர்ந்து தரமான பத்திரிக்கையாக வெளிவர முடியாது என்பது திண்ணம்.  காரணம் அது அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகத் தான்  இருக்க முடியுமே தவிர தன்னிச்சையாக, சுதந்தரமாக இயங்க முடியாது!  ஒரு தோற்றுப்போன பத்திரிக்கையில் முதலீடு செய்பவர் அவர் அரசியலில் ஏதோ எதிர்பார்க்கிறார் என்பது தான் பொருள்!  பதவிகளை எதிர்பார்த்து முதலீடு செய்பவர்கள்  தரமான  செய்திகளை எதிர்பார்ப்பதில்லை! அதனால் அந்தப் பத்திரிக்கை மக்களைச் சென்று அடைவதும் இல்லை!

எது எப்படி இருந்தாலும் உத்துசான் மலாயு மீண்டும் தனது சிறகுகளை விரிப்பதை வர வேற்கிறோம்! ஆனால் கூண்டுக்குள் இருந்து கொண்டு அதனால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பது தான் கேள்வி.

இனி கொஞ்ச காலம் பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment