Pages

Thursday, 30 September 2021

இந்தியர்களுக்கான செயல்திட்டம்!

 இந்தியர்களுக்கான செயல்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

நல்லது நடந்தால் நமக்கும் மகிழ்ச்சியே! 

2017-ம் ஆண்டு வரையப்பட்ட அந்தத் பெருந்திட்டம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பேச்சு அளவிலாவது இப்போது பேசப்படுகிறது! 

ஏதோ குறைபிரசவத்தில் பிறந்த ஓர் அரசாங்கம் அது பற்றி பேசுகிறதே என்பதைத் தவிர நமக்கு ஒன்றும் பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. என்னவோ பிரதமர் அறிவித்தார். உடனே அதற்கு ஆ! ஓ! போட சில  தலைவர்களின் குரல் கேட்டது! அவ்வளவு தான்! அதற்கு மேல் எந்த மரியாதையும் இல்லை!

இந்த பெருந்திட்டத்திற்கு நம்மால் ஏன் ஆதரவு கொடுக்க முடியவில்லை? காரணம் பிரதமருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் இந்தியர்களுடைய தேவை என்ன என்பதே தெரியாத போது என்ன ஆதரவை நாம் கொடுக்க முடியும்?

பூமிபுத்ரா  சொத்துடமை 17.2% விழுக்காடு என்பது பிரதமரின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்தியரின் சொத்துடமை அவருக்குத் தெரிய நியாயமில்லை! காரணம் அவருக்கு அது தேவையற்றது! கோவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர் மலேசிய இந்தியர்களின் சொத்துடமை என்பது மிகவும் கீழ் நோக்கிப் போய்விட்டது என்பது சந்தேகமில்லை! பல நடுத்தர குடும்பங்கள் இன்று பி.40 நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

முன்பு 1.3% விழுக்காடாக இருந்த நமது சொத்துடமை அது கீழ்நோக்கி இன்னும் பரிதாபமாக சரிந்திருக்க வேண்டும். இப்போது அது 0.2 விழுக்காடாகக் கூட இருக்கலாம். அரசாங்கம் தான் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இன்றைய அரசாங்கம் 15வது பொதுத்தேர்தலை மையப்படுத்தி தான் தனது 12-வது ஐந்தாவது மலேசிய திட்டத்தில் இத்திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அது பூமிபுத்ரா சார்பு திட்டங்களாகத்தான் இருக்க முடியும். நாம் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது!

அரசாங்கம் அப்படி பெரிய மனதுடன் நமது உரிமைகளைக் கொடுத்தால் நாம் நிச்சயமாக இன்றைய நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கத்தான் செய்வோம்! அதில் எந்த ஐயமில்லை!

No comments:

Post a Comment