Pages

Tuesday, 8 November 2022

கல்விக்கு ஏன் தடை?

 

உயர்கல்வி பயில்வதில்  அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்களில் இந்திய மாணவர்களே அதிகம்.

நமது தமிழ்ப்பள்ளிகளை எடுத்துக் கொண்டாலும் அங்கும் அதே பிரச்சனை தான். பள்ளிகளைக் கட்டுவது பின்னர் அதனைப் பயன்படுத்த முடியாமல் தடையாய் இருப்பது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் இருந்தால் அதனைத் தீர்த்து வைக்கும் ஆற்றலும்  கல்வி அமைச்சுக்கு இல்லை. ஒழுங்காகப் பணியாற்றும் ஆசிரியர்களை "வேறு இடத்திற்கு மாற்றுவோம்!"  என்று சொல்லி ஆசிரியர்களைப் பயமுறுத்துவது. இது போன்ற செயல்களால் ஆசிரியர்கள் தங்களது முழு கவனத்தைச் செலுத்த முடிவதில்லை.

இடைநிலைப்பள்ளியிலும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அது சரியில்லை, இது சரியில்லை என்று பலவாறு அவர்கள் அவமானாப்படுத்துகின்றனர்.

இவைகளையெல்லாம் மீறி அவர்கள், சிறப்பாகப் படித்து, பரிட்சைகளில் தேர்ச்சி பெற்று வந்தால்  அதன் பின்னரும் மாணவர்கள் பல்வேறு வகைகளில் அவர்கள் மனம் நோகடிக்கப்படுகின்றனர். நல்ல தேர்ச்சி ,முதன்மையான புள்ளிகளைப்பெற்று வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு மேற்கல்வியைத் தொடர வாய்ப்புக் கொடுப்பதில்லை.

சான்றுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி அவர்களுக்கு மறுக்கப்பாடுகின்றது. பல்கலைக்கழகங்களிலும் கல்வி  மறுக்கப்படுகின்றது. அவர்கள் விரும்புகின்ற துறைகளை அவர்களுக்குக்  கொடுப்பதில்லை. குறிப்பாக மருத்துவம்,  என் ஜினியரிங், வழக்கறிஞர் போன்ற  படிப்புகளில் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகின்றது.

நாம் இங்குக் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் எப்போது, எந்தக் காலகட்டத்தில் இவைகள்  நடந்தன என்பது தான். அனைத்தும் தேசிய முன்னணி ஆட்சியில் நடந்தது.  எப்படிப் பார்த்தாலும் இந்தியர்கள், நமது மாணவர்கள் உடபட, எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக இருக்கும் ம.இ.கா.  எந்தக் காலத்திலும் வாய் திறக்கப் போவதில்லை!  வாய் திறந்தால்  அம்னோ நம்மை விட்டு வைக்காது என்பது அவர்கள் நினைக்கிறார்கள்!  அதனால் கிடைக்கும் எலும்புத் துண்டுகளைப்  பொறுக்கிக் கொண்டு, நம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்  என்பது தான் அவர்களது நோக்கம்!

ஆக, கல்வி மட்டும் அல்ல. நமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றால் தேசிய முன்னணி நமக்கு ஏற்றக்கட்சி அல்ல என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பக்காத்தான் ஹரப்பானே நமது எதிர்காலம்!


No comments:

Post a Comment