Pages

Thursday, 29 February 2024

காரணங்கள் வேண்டாம்!

ஒரு காலகட்டத்தில் KLIA  விமான நிலையம் நாட்டிற்குப் பெருமை தரும் விமான நிலையமாக விளங்கியது.

இப்போதோ அதன் தரம் தாழ்ந்து பிற நாட்டவர் மலேசியரைத்  தாழ்ந்த பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  அந்த நிலையத்தில் என்ன தான் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்ய அத்துணை வசதிகள் இருந்தும்  அதனை ஏன் செய்ய்வில்லை என்பது தான் கேள்வி.

நம்முடைய குறைபாடுகள் எல்லாம் யாராவது  கொண்டு வந்து சொல்ல வேண்டும்  என்கிற மனநிலையில் நாம் இருக்கிறோம்.   சொல்லவிட்டால்....?  "குறையேதும் இல்லை கண்ணா" என்று கண்களைப் பொத்திக் கொள்கிறோம்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல வேண்டும்?  அது என்ன மக்கள் பணத்தில் ஜாலி  செய்வதற்கா?  பிற நாடுகளில் உள்ள சிறந்தவைகளை நம் நாட்டிகுக் கொண்டு வரவேண்டும்.  அதன் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்:  மக்கள் பயன் பெற வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால்  அதிகாரிகள் தங்களது  பணத் தேவைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே  தவிர தங்களது கடமை என்னவென்பதையே  மறந்துவிடுகிறார்கள்!  என்ன செய்வது? யாருக்கு என்ன வரும் என்பது தெரியாமல்  எதுவாக இருந்தாலும் பதவிகளைத் தூக்கிக்கொடுத்தால் இப்படித்தான் நாட்டிற்கு அவப்பெயர் வருவதைத் தடுக்க முடியாது.

இதில் என்ன  அதிசயம் என்றால்  பயணிகளுக்கு மிகச் சிறப்பான பயண அனுபவத்தைக் கொடுக்கும் விமான நிலையம் என்றால் அது வியட்னாமின் "நோய் பாய் இண்டர்நேசனல் ஏர்போர்ட் என்று பயணிகளால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது!  வியட்னாம் நாட்டைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? வேலை தேடி மலேசியா வந்தவர்கள், அவர்கள் வசிக்கும் இடங்களில் பக்கத்து வீட்டு நாய்கள் காணாமல் போய்விடும் என்பது தான் நமக்குத் தெரியும்! அவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதும்  நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அவர்களது நாட்டின் விமான நிலையம்  இன்று நம்பர் ஒன் என்கிற பாராட்டைப் பெறுகின்றது என்றால் அவர்கள் உழைப்பாளிகள். ஏன் நமக்கு உழைக்கத் தெரியாதோ?  அப்படித்தானே புள்ளிவிபரங்கள் கூறுகின்றன!

நாம் ஒரு சோம்பேறி கூட்டம் என்பதைத்தான் இந்த செய்தி கூறுகிறது. ஒரு வேளை இவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்களோ!  காரணங்கள் சொல்ல வேண்டாம். இவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இளைஞர் கூட்டத்தை வேலைக்கு அமர்த்துங்கள்.

ஒட்டுமொத்த மலேசியர்களைச் சோம்பேறிகள் என்று சொல்லும் செய்தி!

No comments:

Post a Comment