Pages

Thursday, 10 October 2024

இது பெருநாள் காலம்!

 

                                        பெருநாள் கால பரிசு பொருள்கள்

இது பெருநாள் காலம். தீபாவளி நேரத்தில் தான் ஏழைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து  பரிசு கூடைகளை அல்லது உணவு கூடைகளை அனபளிப்பாகக் கொடுக்கின்ற பழக்கத்தை அரசியல்வாதிகள்  கொண்டிருக்கின்றனர்.

சரி,  அவர்கள் என்ன நினைக்கின்றனரோ அதை செய்யட்டும்.  நாம் ஒன்றும் அவர்களுக்கு எதிரியல்ல. அவர்களின் கையாலாகாதனத்திற்கு வேறு எதனையும் செய்ய முடியாது  என்பது நமக்கும் தெரியும்.  ஆனால் ஒன்று செய்யலாம்.  கொடுக்கின்ற பரிசு கூடைகளில் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 வெள்ளி வைத்துக் கொடுத்தால், அவர்கள் யாரை ஏழையாக நினைக்கிறார்களோ அவர்கள், பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும்.  அவர்கள் தலைவர்களைப் போல வசதியாகக் கொண்டாட முடியாது என்பது  உங்களுக்குத் தெரிந்து தான் செய்கிறீர்கள்.  அதைக்  கொஞ்ச தாராளமாகச் செய்யுங்கள் என்பது தான் நமது  கோரிக்கை.

உண்மையைச் சொன்னால் பெருநாள் காலங்களில் இது போன்ற பரிசு கூடைகள் தேவை  என்கிற நிலையை  அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டார்கள்.   காரணம் வேறு எதனையும் அவர்களால் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டு "ஏதோ இதையாவது செய்வோம்" என்கிற மனநிலைக்கு  வந்துவிட்டார்கள்.

ஆனால் ஒன்றை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அன்பளிப்பு என்னும் போது  அதனைப் பெறுபவர்கள் மனநிறைவு அடைய வேண்டும். சும்மா ஏனோ தானோவென்று சில பொருள்களை வாங்கிக் கொடுத்து  திருப்தி அடையக் கூடாது.  பெறுபவர்கள் திருப்தி அடைய வேண்டும்.

என்னவோ இது பெருநாள் காலம். ஒரு சிலர் இது போன்ற பரிசு கூடைகளை   எதிர்பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் கஷ்டம் நமக்குத் தெரியவில்லை.  அதற்காக அவர்களை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்.  இந்திய சமுதாயத்தில் வேலை இல்லாதோர் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.  அதனால் எதனையும் வேண்டாம் என்று மறுப்பதற்கு வழியில்லை.

நல்லதைச் செய்யுங்கள். நல்லதையே நினையுங்கள்.

No comments:

Post a Comment