Pages

Monday, 3 February 2025

நுழைவு தேர்வில் தளர்ச்சி!


 நாட்டில் தாதியர் பற்றாக்குறை  மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால்  இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+  -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் எஸ்.பி.எம். தேர்வில் ஐந்து கிரடிட் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக  அறியப்பட்டனர்.  இந்த நடப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் மூன்று பாடங்களில் கிரடிட் பெற்றவர்கள்  தகுதி பெற்றவர்களாக ஏற்கப்படும் என சுகாதார அமைச்சர்   அறிவித்திருக்கிறார். கிரடிட் பெற வேண்டிய அந்த மூன்று பாடங்கள்: மலாய், கணிதம், அறிவியல். சாதாரண தேர்ச்சி பெற வேண்டியவை: ஆங்கிலம் அத்தோடு இன்னொரு பாடம்.

இந்தத் தளர்வு என்பது  இரண்டு  ஆண்டுகள் மட்டுமே என்பதைக் கவனிக்க. எத்தனை இந்தியப்  பயிற்சி  தாதியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்  என்பது தெரியவில்லை.  இங்கும் கோட்டா, மெரிட் அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.  ஏதோ ஒன்று இரண்டு நமக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பலாம்.

ஆனாலும் நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது  என்பதை மட்டும்  மனதில் வையுங்கள்.  கிடைக்கின்ற வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்வது  நமது கடமை.  நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் நாம் இருக்க முடியாது.  அவர்களை நாம் உயரத் தூக்கிவிட்டோம். இனி நம்மை நாமே தூக்கிக்கொள்வது நமது கடமை. 

ஒரு சில மாணவிகளுக்கு இந்தத் தாதியர் டிப்ளோமா பயிற்சி  நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.  அந்தத் தகுதிகள் உங்களுக்கு  இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில்  இந்த வாய்ப்பை விடாதீர்கள்.  இந்தத் தளர்வு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே.   உங்களின் தகுதி இதற்கு ஏற்றமாதிரி இரூக்குமாயின்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் வரும் போது நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. பிறகு குறை சொல்லுகிறோம்.  யாரும் நமக்காக பேசப்போவதில்லை. நமக்கு நாமே தான்  உதவிக்கொள்ள வேண்டும்.

யார் கண்டார்? இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்!

No comments:

Post a Comment