இது ஒரு வருத்தத்திற்கு உரிய சம்பவம். எனது நோக்கம் எல்லாம் நமது தமிழ் மக்கள் எப்படியெல்லாம் என்னவென்றே தெரியாத வியாதிகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது தான்.
அப்போது தான் அந்த அண்ணன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். லோரி ஓட்டுநர் வேலை. ஆனல் அவரிடம் ஒரு குறை தெரிந்தது. தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார். தலையை ஆட்டி ஆட்டி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். ஏதோ ஒரு வியாதி. அப்போதெல்லாம் இது என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே மருத்தவர்கள் இல்லை. என்ன செய்ய? அன்றைய தமிழனின் தலைவிதி என்று தான் எடுத்தக்கொள்ள வேண்டும்.
அந்த அண்ணன் நீண்ட நாள் வேலை செய்ய முடியவில்லை. லோரி விபத்தில் இறந்து போனார். எனக்குத் தெரிந்தது இந்த ஒரு சம்பவம் தான், ஆனால் அன்றைய மலாயாவில் எத்தனை பேர் இப்படி இறந்தார்களோ?
எனது நண்பன், கோவிந்தசாமி என்று பெயர். அவன் கூட இரண்டு கால்களிலும் சிறங்கு வந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது அவனுக்கு எல்லாம் சரியாகிவிட்டது. ஒரு வேளை நவீன மருத்துவம் அவனைக் குணமாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.
அறிவோம்: அன்றைய வியாதிகள் எல்லாம் சரியான, சத்தான உணவுகள் இல்லாததால் வந்தவை. விஷக்கடிகளால் வந்தவை. இன்று கூடுதலான சத்தான உணவுகள், குப்பை உணவுகள் - இவைகளால் புற்று நோய், இதயக் கோளாறுகள், இனிப்புநீர் போன்ற வியாதிகளால் அவஸ்தைப் படுகின்றோம். ஆக வியாதிகள் நிரந்தரம். காலத்திற்கு ஏற்ப மாறுபவை!
No comments:
Post a Comment