இலாடங்கள் என்னும் போது நமக்குத் தெரிந்தது எல்லாம் குதிரைக்கு இலாடம் அடிப்பது தான். இப்போது மாடுகளுக்கும் அடிக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.
சரி பள்ளி மாணவர்களுக்கும் இந்த இலாடத்துக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது காலில் தோல் சப்பாத்துகள் அணிவது வழக்கம். இன்றைய நிலை எனக்குத் தெரியவில்லை.
தோல் சப்பாத்துகள் அணியும் போது எங்கள் பள்ளி அருகிலேயே ஒரு சீனர் சப்பாத்துகளுக்கு இலாபம் அடித்துக் கொடுப்பார், இலாடம் என்றால் மேலே படத்தில் உள்ளது போல் இருல்லாது. அது சிறு சிறு துண்டுகளாக இருக்கும். அதில் இரண்டு துண்டுகளை சப்பாத்தின் அடிபாகத்தில் இரு பக்கமும் அடித்துக் கொடுப்பார். நான்கு இடத்திலும் அடித்துக் கொடுதால் நடக்கும் போது சத்தம் பயங்கரமாக இருக்கும்! அதனால் இலாடங்கள் இரண்டே போதுமானவை.
இப்படி இலாடம் அடிப்பது சப்பாத்துகள் நீண்ட நாள் உழைக்கும் என்கிற காரணம் தான். வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் அன்று இடைநிலைப் பள்ளிகள் என்றால் நீண்ட காற்சட்டை அணிவதும், தோல் சப்பாத்துகளை அணிவதும் தொடக்கப் பள்ளிகளூக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கத் தான்..
பின் குறிப்பு: கண்களில் உள்ள குறைபாடுகளினால் சரியாக செயல்பட முடியவில்லை. மன்னிக்கவும். (கோடிசுவரன்)
No comments:
Post a Comment