Thursday, 20 March 2025

இது தான் 'என்' தோட்டம்! (21)


பிறந்து வளர்ந்த தோட்டங்களை 'நம்' தோட்டம் என்று சொந்தம் கொண்டாடுவதை   நான் விரும்புவதில்லை!

ஆனால் என்ன செய்ய? அப்படி ஒரு சொந்தம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. நான் வளர்ந்த தோட்டம் என்றாலும் இப்போது அந்தத் தோட்டமே இல்லை. செனவாங் தோட்டமே  இப்போது  பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் செயல்படும் பெரும் தொழில்  நகரமாக,  பெரும்  தொழிற்பேட்டையாக மாறிவிட்டது.

நாங்கள் சுற்றித்திரிந்த இடங்கள், என் தாயாருக்காக உதவிக்குப் போன இடங்கள், கோயில்கள், அந்த செட்டியார் கடை, சோங்பாங் சீனர்கடை, தோட்ட வீடுகள், தோட்ட சிப்பந்திகளின் வீடுகள்,  வெள்ளைக்கார தோட்ட நிர்வாகிகளின்  வீடுகள் ஒன்றையுமே காணோம். இருந்ததற்கான அடையாளமே இல்லை!  என் காலத்திலிருந்த  அந்த  இளம் பட்டாளம் ஒருவருமே இல்லை!

எனக்குப் பொது அறிவைக் கொடுத்த அந்த இளம் பட்டாளம்  காணாமற் போயிற்று! பெரும்பாலும் குடித்துச் செத்தவன் தான் அதிகம்.  தோட்டத்தின் அடையாளமே 'சம்சு'  தானே. குடி இல்லாமல் மறத்தமிழனால்  வாழ முடியுமா? எப்படியோ எங்களுக்குப் பின் வந்த சமுதாயம்  ஓரளவு விழிப்புப் பெற்றதே  என்பதில் மகிழ்ச்சி  தான்.



அறிவோம்:  காலம் ஓடுகிறது, நாம் நடக்கிறோம்.  அதனால் தான்,  நம்மால் முன்னுக்கு வர முடியவில்லை.

தமிழ்வாணன்


No comments:

Post a Comment