ஒரு காலகட்டத்தில், அன்றைய சிரம்பான் பட்டணத்தில் , பல் சொத்தையாகப் போய்விட்டால் பல் பிடுங்குவதில் நிறைய பிரச்சனைகள் எழும் என்பது இப்போது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
மருத்துவமனைகளுக்குப் போனவர்கள் கூட அவதிப்பட்ட கதைகள் தான் அதிகம். வெளியே போலி பல் மருத்துவர்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். இவர்கள் பரவலாகப் பல இடங்களில் தொழில் செய்து வந்தனர். ஆனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
எனக்கு 21 வயதில் பூச்சிப்பல குடைந்தெடுத்தது! அப்போது முறையாக தொழில் செய்து வந்தவர் Dr.Cheah எனகிற பல மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். அவர் ஒருவர் தான் உண்மையான பல் மருத்துவர். போய் அவரிடம் பல்லைக் காட்டினால் போதும் பல்லைப்பிடுங்கி விட்டுத் தான் மறுவேளை! ! நான் முதன் முதலில் பிடுங்கிய பல் கடவாப்பல் அப்போது ஒரு பல்லை பிடுங்குவதற்கு ஐந்து வெள்ளி கட்டணம். . தொடர்ந்தாற் போல என் பற்களை அவர் தான் பிடுங்கினார்! ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நமது இந்திய மருத்துவர்கள் வர ஆரம்பித்தனர். என்னுடைய இருந்த பற்களைக் காப்பாற்றினர்! இது தான் நிலை.அன்றைய சிரம்பானில்!
இப்போது பல் மருத்துவர்களுக்குக் குறைச்சல் இல்லை. கட்டணம் வசூல் பண்ணுவதிலும் குறைச்சல் இல்லை!
அறிவோம்:சிரம்பானைச் சேர்ந்த நாடறிந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் பாவலர் ஐ.இளவழகு அவர்கள் கடந்த 10-6-2025 அன்று இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்தைற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
No comments:
Post a Comment