இந்த பரோட்டா ரொட்டி எனது பள்ளி பருவத்தில் ஏறக்குறைய 1956 களில் மற்றொரு மாணவருடன், சாப்பிட ஆரம்பித்தேன். அதுவே தினசரி மதிய உணவாக மாறிவிட்டது! மத்தியான பள்ளி என்பதால் வீடு போய் சேரும்வரை பசி தாங்கும். தேவையெல்லாம் 10 காசும் வெறும் தண்ணீரும் தான்!
சிரம்பானில் 1956 களில் தான் அதுவும் அலீஸ் கஃபே என்னும் தமிழ் முஸ்லிம் நண்பரின் உணவகத்தில் தான் பரோட்டா விற்கப்பட்டது.அப்போது தான் பரோட்டா சிரம்பானில் அறிமுகம் என நினைக்கிறேன். இப்போதும் அந்த உணவகம் உள்ளது அப்போது பரோட்டாவை புறக்கணித்த இந்திய உணவகங்கள் பின்னர் அள்ளி அணைத்துக் கொண்டன!
இப்போது ரொட்டி சனாய் என்கிற பெயரில் நமது நாட்டின் காலை நேர தேசிய உணவாக மாறிவிட்டது.
அறிவோம்: இன்று மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி நம் மக்களால் பெரிதளவு விமர்சனம் செய்யப்படுகிறது. இது வழக்கமான ஒன்று தான். ஆனாலும் என்ன செய்ய? கல்வி மீதான புரிதல் இன்னும் நம் மக்களுக்கு வரவில்லை. பொது மக்களால் குரல் எழுப்பப்பட்டு ஏதோ கொஞ்சநஞ்ச பிச்சை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் பெற்றோர்களோ 'தூரம்' எனக் காரணம் காட்டி. குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்கள்! யாரைக் குற்றம் சொல்லுவது? கொடுப்பவனுக்கு அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது!
No comments:
Post a Comment