Wednesday, 5 February 2025

இவர்கள் என்ன முட்டாள்களா?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜாக்கிம்  அமைப்பை ஜோகூர் மாநிலத்திலிருந்து  விரட்டியடித்தவர்  அன்றைய  மாநில சுல்தான் அவர்கள்.  அவர் தான் இன்றைய மாமன்னர்.

நாட்டில மக்கள்  ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற  கொஞ்சம் கூட  அக்கறை இல்லாதவர்கள் தான்  ஜாக்கிம்.  எல்லா நாடுகளும் முன்னேற வேண்டும்  என்கிற துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  "ஏன் முன்னேற வேண்டும்?"  என்று கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பது தான் ஜாக்கிம். 

பல இனங்கள், பல சமய்த்தைச் சார்ந்த மக்கள் வாழும் நாட்டில், இவர்கள் இப்படிப் போக வேண்டும், அவர்கள் அப்படிப் போக வேண்டும், இவர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது அவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது,  என்று முட்டாள்தனமாக, தான்தோன்றித்தனமாக  மக்களைச் சீரழிக்கும்  வேலையில் இறங்கியிருக்கிறது ஜாக்கிம்!

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?  மதத்தின்  மேல் உள்ள பற்றா? அப்படியெல்லாம் நாம் நினைக்கவில்லை. இவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. அலுவலகங்களைக்  கொடுத்திருக்கிறது. அது போதும். அவர்கள் வயிறு நிறைகிறது. குளிரூட்டி  அலுவலகங்கலிலிருந்து கொண்டு  விதவிதமான, கலர் கலரான அறிக்கைகளையும்,  கட்டளைகளையும்  மக்களுக்கு   வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

நடப்பில் ஒரு பழமொழி உண்டு. உன் நண்பன் யாரென்று சொல் உன்னை யாரென்று சொல்லுகிறேன்.  மலேசியாவின் நண்பன் யார்?  எந்த நாடு தான் இவர்களுக்கு நண்பன்?   ஆப்கானிஸ்தான் ...?  அவர்கள் தான் இங்கு வருகிறார்கள் போகிறார்கள்.  பாலஸ்தீனத்தை  இவர்களாக வரச்சொல்லுகிறார்கள் போகச்சொல்லுகிறார்கள்.  எந்த ஒரு நாடும் இவர்களுடன் அணுக்க்மாக இல்லை என்பது தான் உண்மை.

இவர்கள் தனிக்காட்டு ராஜாவாக, சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, வாழ  விரும்புவதாகத் தோன்றுகிறது.  இனி நாம் சாவதற்கு முன்பே  இவர்களிடம் அனுமதி கேட்டுத்தான்  சாக வேண்டும் போல் தோன்றுகிறது!

No comments:

Post a Comment