Saturday 23 April 2016

விமான அபகரிப்பா? இந்தியரின் வேதனை!


"ரயானி ஏர்"  என்னும் விமான நிறுவனம் இன்னும் பெரிய அளவில் மலேசியர்களால் அறியப்படாத ஒரு நிறுவனம்.

அதன் நிறுவனர்கள் (ர)வி அழகேந்திரனும்  அவர் மனைவி கார்த்தி(யா)யி(னி) கோவிந்தன் ஆவர்.

நிறுவனம் ஆரம்பித்து இன்னும் நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அதனுடைய பயணங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.

அந்நிறுவனத்தைப்  பற்றி வருகின்ற  செய்திகள் நம்பத்தக்கதாக இல்லை என்றாலும்  விமான நிறுவனம் என்னவோ மூடுவிழாவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

விமான நிறுவனம் தனது 400க்கு மேற்பட்ட பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்னும் குற்றச்சாட்டு அதன் மேல் சுமத்தப்படுகிறது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொடங்கப்படுகிற ஒரு விமான நிறுவனம் இரண்டு, மூன்று மாதங்களில் தனது பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பது நம்பக்கூடிய செய்தியாக இல்லை.

இந்த நிறுவனம் ஒர் இந்தியர்க்குச் சொந்தமான நிறுவனம் என்பதால் தான் இப்படி ஒரு நிலை அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பது பொதுவாக முன் வைக்கப்படும்  குற்றச்சாட்டு.

அதன் நிறுவனர் ரவி தனது விமான நிறுவனத்தை அங்குப் பணிபுரியும் பணியாளர்களே அபகரிக்க முயலுவதாகக் குற்றம் சாட்டுகிறார். தனியே ஒரு விமான நிறுவனத்தை நிறுவி அதனை நடத்த அருகதை இல்லாதவர்கள்   குறுக்கு வழியில் தனது நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கான திட்டம் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்!

ஆனால் சொல்லுப்படுகின்ற குற்றச்சாட்டுக்களோ ரவி  வான் போக்குத்துறையில் அனுபவம் இல்லதவர் என்னும் குற்றச்சாட்டு! இன்னொரு பக்கம் ரயானி விமான நிறுவனத்தின் உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்னும் பயமுறுத்தல்.

ரவி,  இந்த விமான நிறுபவனத்தை மிக எதிர்பார்ப்புடன், இஸ்லாமிய முறைப்படி பணியாளர்களுக்கான சீருடைகள், விமானம் புறப்படுகையில் இறைவழிபாடு என்று சிறப்பாக வழி நடத்தினார். உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்று கனவு கொண்டிருந்தார். அது நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியர்களின் பொருளாதாரம் நசுக்கப்படுகிறதா?

.


No comments:

Post a Comment