Saturday 31 October 2020

கட்சி தாவும் சட்டம் தேவையான ஒன்றூ!

 கட்சி தாவுவதை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுங்கள் என்பதாக வழக்கறிஞர் மன்றம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது!

என்ன தான் கூப்பாடு போட்டாலும் இவர்களுக்கு அது மண்டையில் ஏறுவதில்லை! யாருக்கு? சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு?

என்ன காரணம்? ஐந்து வருடங்கள் இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை,  இப்படித் தாவுவதன் மூலம்,  ஐந்தே மாதங்களில் அதை விடக் கூடுதலாக சம்பாதித்து விடலாம்!

இப்படிக் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் படித்த படிப்பு என்ன? அடேயப்பா! ஒருவன் வழக்கறிஞன் என்கிறான்! ஒருவன் டாக்டர் என்கிறான்! ஒருவன் கணக்காளர் என்கிறான்!  ஆனால் கொள்ளையடிப்பதற்கு எல்லாருமே குருகுலக் கல்வி கற்றிருக்கிறார்கள்!

ஏன் இந்த சட்டம் தேவை? இதற்கு நாம் எங்கெங்கோ தேடி ஓட வேண்டியதில்லை! நமது மலேசிய சரித்திரத்திலேயே இப்போதுதான் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கொண்டு வந்து நடூவீதியில் நிறுத்தி விட்டார்கள் படித்த நமது மாண்புமிகுகள்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இப்படி ஒரு சூழலை நமது நாடு சந்தித்ததில்லை!  அதனால் இப்போது ஒரு நிலையான அரசாங்கம் இல்லை! இப்போது யார் பிரதமர் என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டுவிட்டது! யார் கையில் வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவன் தான் பின்னணியில் இருந்து கொண்டு பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

 ஒரு நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை.  இதற்கு முன்னர் பாரிசான்  கட்சி தான்  ஆட்சியிலிருந்தது.  சாமிவேலு இருந்தார்! நஜீப் இருந்தார்! ரோஸ்மா இருந்தார்! நமக்குத் தேவை இல்லாதது எல்லாமே இருந்தாலும்  ஒரு நிலையான அரசாங்கம் இருந்தது!

ஆனால் இன்று அப்படியா? தடி எடுத்தவன் எல்லாம் தண்டலாகி விட்டான்! எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது!

அதற்குத் தான் நாம் சொல்லுவது கட்சி தாவுதலைத் தடுக்கும் சட்டம் தேவை! தேவை!  இல்லாவிட்டால் நாட்டை துக்ளக் ஆட்சியாக மாற்றி விடுவார்கள் நமது மாண்புமிகுகள்!

இது அவசியம்! இது உடனடித் தேவை!

Friday 30 October 2020

பொருட்களைப் புறக்கணியுங்கள்!

 மேற்கத்திய நாடுகளுடன் நமக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் உடனே "அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள்!"  அல்லது "அழிக!", "ஒழிக!" என்கிற கோஷங்க்ள் எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம்.  

ஆர்ப்பாட்டங்கள் என்கிற நிலை வரும் போது எதுவும் பேசலாம்! எதுவும் நடக்கலாம்! 

இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் பிரான்ஸ் நாட்டின் மீது என்பது நமக்குத் தெரியும். 

ஒரு வகையில் நான் வித்தியாசப்படுகிறேன்.  புறக்கணியுங்கள் என்று ஏன் மக்களைப் பார்த்துச் சொல்லுகிறீர்கள்?  அதனை அரசாங்கமே செய்யலாமே! அரசாங்கம்,   குறிப்பிட்ட அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்வதும் - அந்நாட்டின் பொருட்கள் இங்குக் கிடைக்காமல் இருக்கச் செய்வதும் - பெரிய பிரச்சனை ஒன்றுமில்லையே!   அரசாங்கமே மிக எளிதாகச் செய்து விடலாமே!

பிரான்ஸ் நாட்டின் பொருட்களை இங்கு வாங்குபவர்கள் யார்?  நாம் என்ன அங்கிருந்து  வெங்காயம், பூண்டு, புண்ணாக்கா வாங்குகிறோம்? அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யாவிட்டால் இங்கு உள்ள ஏழை, எளியவர்கள் எல்லாம் செத்தா  போய் விடுவார்கள்? 

உண்மையில் அவர்களின் பொருட்களை வாங்குபவர்கள் யார்?   கோஷம் போடுபவர்கள்!  பணக்காரர்கள்! இங்கு இல்லை என்றால் அங்கு போய் வாங்குபவர்கள்!  இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள்! அவர்கள் வீட்டுப் பொம்மனாட்டிகள்! அவர்கள் வீட்டு வாரிசுகள்!  அப்படி அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்தால் இவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் தருவது? இன்றைய நிலையில் ஒரு தொழிலதிபரை விட அரசியல்வாதி தானே பெரும் பணக்காரனாக இருக்கிறான்!

ஏதோ ஒரு நோக்கதிற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம்.  அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு! அது நடக்கப்போவதில்லை!  எல்லாம் வெளி வேஷம் தான்!  காலங்காலமாக இது நடந்து கொண்டிருக்கிறது!  அரசியல்வாதிகள் இருக்கும் வரை எந்த நாட்டின் பொருட்களையும் புறக்கணிக்க முடியாது!

பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.  சும்மா பொருட்களைப்  புறக்கணியுங்கள் என்று  அள்ளி விடாதீர்கள்!

இப்படிப் பேசினால் தான் நமக்குச் சாதகமாக இருக்கும் என்று அனைத்தையும் அரசியல் ஆக்காதீர்கள்!

Thursday 29 October 2020

பிரதமர் முகைதீன் தப்பித்தார்!

 வருகிற நவம்பர் 6 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கியிருந்த பிரதமர் முகைதீன் இப்போது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார் என எதிர்பார்க்கலாம்!

நமது பேரரசர்  பிரதமருக்குக் கைக் கொடுத்திருக்கிறார்!

நாட்டி நலனைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.  வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் மிக மிக முக்கியம்.  குறிப்பாக கொரோனா தொற்று நோய் மேலும் மேலும் பரவாமலிருக்க அதனைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது அவசியம். அதற்கான செலவுகளும் அதிகம்.

இது நாட்டு நலன் சார்ந்தது.  இந்த நேரத்தில் பதவிப் போராட்டம்,  நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது போன்றவை நாட்டுக்கு எந்த நல்லதையும் கொண்டு வரப்போவதில்லை>   மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.

அது மட்டும் அல்லாமல் இது போன்ற நடவடிக்கைகள் நமக்குப் புதிது.  இன்றைய சூழலுக்குக் காரணமானவர்களில் நமது பிரதமரும் ஒருவர்!  என்ன செய்வது? பிரதமர் பதவி என்பது அதிகாரம் மிக்க ஒரு பதவி.  யாருக்குத்தான்  அந்தப் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்கும். இப்போதும் அந்த அதிகாரத்தை வைத்துத் தானே பதவியிலிருக்கிறார்!

ஆனாலும் நாட்டில் அமைதி முக்கியம். மக்களின் அன்றாட வாழ்க்கை முக்கியம்.  அதுவும் இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று நோயை முற்றிலுமாக ஒழிப்பது முக்கியம்.  வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது.  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். 

அதனால் தான் நாட்டு நலனை முன் நிறுத்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் மாமன்னர். மன்றத்தில் உள்ளவர்கள் அனைவருமே படித்தவர்கள்.  மூளையைப் பயன்படுத்துவார்கள்  என நம்பலாம்.

ஆனால் அம்னோ போன்ற பெரிய கட்சிகள் இன்னும் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் போகலாம்! இது தான் அரசியல்! யார் யாரையும் நம்பும்படியாக இல்லை!

இவர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேரரசரின் சொல் அம்பலம் ஏறுமா என்பதைப் பார்ப்போம்!

Tuesday 27 October 2020

வயது ஒரு பொருட்டல்ல! (5)

 உடற்பயிற்சி செய்வதற்கு வயது ஒரு தடையா?

'ஆமாம்!"  என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். "வயதானப் பிறகு எந்தப் பயிற்சியைச் செய்வது?  பெரிய இரும்புகளை எல்லாம் தூக்கவா முடியும்? வயசாச்சி! சும்மா கிடந்தாவே போதும்! அதுவே பயிற்சி தான்!" என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள்1

சும்மா கிடந்தாவே பயிற்சியா? அப்படி என்றால் நினைத்த நேரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலே பயிற்சி தான்! 

அப்படி இல்லை,  நண்பர்களே!  வயதானவர்களுக்கென்று சில பயிற்சிகள் இருக்கின்றன. உங்களை யாரும் வெட்டி முறிக்கச் சொல்லவில்லை! சும்மா நடந்தாலே போதும் .  அது போதும் அதுவே பயிற்சி தான்!

டாக்டர்கள்,  ஒர் அரை மணி நேரம் நடங்கள் அது போதும். அதுவே பயிற்சி தான் என்கிறார்கள். 

நாம் செய்யாததற்குச் சாக்குப் போக்குகள் வழக்கம் போல  நிறையவே வைத்திருக்கிறோம். அதில் ஒன்று தான் "வயசாச்சி!" 

நான் வசிக்கும் தாமானில் ஒரு மலாய்க்காரப் பாட்டி ஒருவரைத் தெரியும். காலையில் தாமனைச் சுற்றி  சைக்கிளில்  வலம் வருவார். பல ஆண்டுகளாக அவர் இந்தப் பயிற்சியைச்  செய்து வருகிறார். 

அவருக்கு ஏறக்குறைய தொண்ணூறு வயதுக்கு மேல் இருக்க வேண்டும். முகம் சுருக்கம் விழுந்து, முதுகுக் கூன் விழுந்து ஆனாலும் பாட்டி அது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை! தனது கடமையைத் தவறாமல் தினசரி செய்து வருபவர்!

தீடீரென நேற்று பாட்டியைப் பார்த்த போது கொஞ்சம் ஏமாற்றம் தான்.  பாட்டியால் முழுமையாக சைக்கிளை ஓட்டிக் கொண்டு போக முடியவில்லை. சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவது, ஓட்ட முடியாத இடத்தில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போவது  இப்படித் தான் அவர் இப்போதெல்லாம் செய்து கொண்டு வருகிறார். 

இருந்தாலும் பாட்டியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  சைக்கிளை ஓட்டிக் கொண்டு போக முடியவில்லையா, உருட்டிக் கொண்டாவது போ என்கிற அந்தப் பாட்டியின் வைராக்கியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியுமா! ஆமாம், ஓட்டிக் கொண்டு போ! இல்லன்னா உருட்டிக் கொண்டு போ!  இன்னும்  இருக்கிறோம் என்பதற்கு அது தானேஅடையாளம்!

நாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் தான் என்ன? செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.  அவ்வளவு தான்!

வயதான சீனர்கள் என்றாவது ஓய்ந்து, உட்கார்ந்து கிடந்ததைப் பார்க்க முடியுமா?  நாம் பின்பற்றுவதற்குச் சீனர்கள் சரியான உதாரணம்.

வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்!

மது அருந்தினால் தான் கார் ஓட்ட முடியுமா?

 நீங்கள் மது அருந்தினால் தான் கார் ஓட்ட முடியும் என்கிற மனநிலையில் உள்ளவரா?

உங்களுக்குத் தான் இந்த எச்சரிக்கை!

முடியவே முடியாது என்று நினைப்பவர்களுக்குத் தேவை எல்லாம் கொஞ்சம் விளையாட்டாக கொஞ்சம் பிரம்படி, கொஞ்ச நாள் சிறை, கொஞ்சம் பண விரயம்,  கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே உண்டு! அத்தோடு உரிமமும் பறி போகின்ற நிலைமை!

உங்கள் வீட்டில் இருந்து கொண்டு  எதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். மதுவிலேயே நீச்சல் அடியுங்கள்! கார் ஒட்டுங்கள்!  

சாலைகளில் உங்கள் வீரத்தைக் காட்டாதீர்கள்! அது பொதுமக்கள் பயன்படுத்துகின்ற இடம்.  கார்களை இடித்துத் தள்ளுவது, கார்களை நொறுக்கித் தள்ளுவது,  மோட்டார் சைக்கிள்களில் செல்லுபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது,  பாதசாரிகளுக்கு  மரணம் விளைவிப்பது - இப்படி மரண சம்பவங்கள் குறைந்தபாடில்லை! அதிகரித்துக் கொண்டே போகிறது!

இவைகள் எல்லாம் மது அருந்திவிட்டு கார் ஓட்டுபவர்கள்,  லோரி ஓட்டுனர்கள்  இவர்கள் செய்கின்ற பாதகச் செயல்கள்!

இருக்கின்ற நடப்பு அரசாங்க சட்டங்கள் எதுவும் இவர்களுக்கு உரைக்கவில்லை! உரைத்திருந்தால் இப்படி தொடர்ச்சியாக விபத்துகள் வர வாய்ப்பில்லை!

இப்போது  திருத்தம் செய்த புதிய சட்டம் என்ன சொல்லுகிறது? இது எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுடையதாய் இருக்கும்? 

 அபராதத் தொகை பத்தாயிரம் வெள்ளியிலிருந்து  முப்பதனாயிரம் வெள்ளி வரை,   இரண்டு  ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை,    வாகனம் ஓட்டும் உரிமம் இரண்டு ஆண்டு காலம் அல்லது மேலும்  பறிக்கப்படும்  அபாயத்தையும் இவர்கள் எதிர் நோக்குவார்கள்.

இவைகளெல்லாம் மேம்போக்காக நமக்குத் தெரிந்தவை.  எல்லாருக்கும் இப்படித் தான் தண்டனைக் கிடைக்கும்  என்று சொல்ல முடியாது.   பழைய சட்டம் கூட  அபாயகரமாக கார்  ஓட்டி மரணம் சம்பவித்திருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

இப்போதும் அந்த சட்டங்கள் அல்லது திருத்தப்பட்ட சட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

மது அருந்துவதே தவறு,  அதுவும் மது அருந்திவிட்டு கார், லோரி, மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுவது பெரும் தவறு. 

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்குத் தான் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டத்திருத்தம். 

மதுவும்வேண்டாம்! குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டவும் வேண்டாம்! பொறுப்பற்றத் தனமும் வேண்டாம்!

Monday 26 October 2020

அவசரகாலம் தேவை இல்லை!

 அவசரகாலம் தேவையற்றது என்பதாக மாட்சிமை தங்கிய பேரரசரின் அறிவிப்பினால் நமக்கும் கொஞ்சம் நிம்மதி. 

ஒரு தனி மனிதர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதும். வேறு சான்று தேவை இல்லை!

அரசியல்வாதிக்குப் பதவி தான்  முக்கியம்.   முடிந்தவரை பிரதமர் முகைதீன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு உபாயங்களையும் பல்வேறு அபாயங்களையும் சந்தித்து வருகிறார்!

கொரோனா தொற்று பிரதமருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்!  இதைத்தான் "ஒருவனின் துன்பம் இன்னொருவரின் இன்பம்!"  என்பார்கள்! கொரோனாவை வைத்தே இத்தனை மாதம் தனது ஆட்சியை நீட்டித்திருக்கிறார்  என்றால் அது ஒரு பெரிய சாதனை தான்.  ஆனாலும் அதனையே  அவசரகாலத்திற்கும் உதவும் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். 

ஆனால் பேரரசரின் தலையீடு இல்லை என்றால் கொரோனாவைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்தியிருப்பார், முகைதீன்! அது தான் அரசியல்! முடியாததையும் முடித்துக் காட்ட முடியும்!  ஆனால் மக்களுக்கு நல்லதைச் செய்ய மட்டும் ரொம்பவும் கணக்குப் பார்ப்பவர்கள் அரசியல்வாதிகள்!

அடுத்தக்கட்ட பிரதமரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?  முதல் அவசரகாலத் தோல்வி  என்பது மக்களின் வெற்றி! அடுத்து விரைவில் நாடாளுமன்றம் கூடுகிறது.  முன்பு எதிர்த்தவர்களை எல்லாம் இப்போது தனது பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு எதிர்பார்த்ததை விட தனது வலிமையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்!

அரசாங்கம் கவிழுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.  அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு என்ன செய்வதாம்? முன்பு "அன்வாரை ஆதரிக்கிறோம்!"  என்று சொன்னவர்கள்  இப்போது "அள்ளித்தருபவரை ஆதரிக்கிறோம்!:" என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்!

அப்படியே அரசாங்கம் கவிழ்ந்தாலும் தேர்தலை நடத்துவது என்பது கொரோனாவின் தயவைப் பொறுத்தது! 

இப்போதே நாம் ஏறைக்குறைய ஒரு முடிவுக்கு வரலாம்.  நம் ஊருக்குத் திடீர் தேர்தல் வராது.  அடுத்த தேர்தல் வரும் வரை கொரோனா தொடரும் என நம்பலாம்! அரசியல்வாதிகள் அவ்வளவு சீக்கிரத்தில் அந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரமட்டார்கள் என எந்தவிதமான கூச்சநாச்சமின்றி நம்பலாம்!

சபா மாநிலத்திலிருந்து பொது மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல் இங்கு இறக்குமதி செய்தவர்களே அரசியல்வாதிகள் தான்! அவர்கள் பதவியில் இருப்பதற்காக எந்த  சதிநாச வேலைகளையும் செய்வார்கள் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்!

அதனால் அவசரகாலம் தேவை இல்லை என்பது  சரி.  அதே போல அரசாங்கம் கவிழாது என்பதும் சரி!

அரசாங்கம் கவிழ வேண்டாம்! அதே போல திடீர் தேர்தலும் வேண்டாம்!  அரசாங்கம் கவிழ வாய்ப்பில்லை என்பதால் தான் இப்போது பலர் முகைதீனை ஆதரிக்கின்றனர்.

கவிழ்ந்தால் நாட்டைக் காப்பாற்ற கொரோனா உண்டு!

Sunday 25 October 2020

மீண்டும் டாக்டர் மகாதிரா?

 மூன்றாவது முறையாக  டாக்டர் மகாதிர் பிரதமராக வர வேண்டும்  என்கிற ஆசை ஒரு சிலருக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது!

முதல் முறை அவர் பிரதமராக இருந்த போது அவரால்  வந்த வினைகள் ஏராளம்! எல்லாவற்றிலும் கை வைத்தார். நாட்டை நாசமாக்கினார்  என்னும்பெயர் அவருக்குண்டு. நல்லது செய்கிறேன் என்று அதிகமாகக் கெடுதல் செய்தவர் அவர்!

கெடுதலுக்கு உதாரணம் இன்றைய அரசியல்வாதிகள். எல்லாம் அவரிடமிருந்து பாடம் கற்றவர்கள்!   நாட்டைக் கொள்ளையடிக்க வகை வகையாக வழிகளைக் கண்டு பிடித்தவர்கள். அவர் தான் இவர்களுக்கெல்லாம் ஆசான்!

இவர் இரண்டாவது முறையாக பிரதமராக வந்தது  ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்.   சென்ற பொதுத் தேர்தலின் போது எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்னவோ  அன்வார் இப்ராகிம் தான். அவர் சிறையில் இருந்ததால் டாக்டர் மகாதிர் முன் நிறுத்தப்பட்டார்.   பாரிசான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற கோபம் மக்களிடையே எல்லை மீறி இருந்தது!  எதிர்கட்சி வெற்றி பெற்றதால் டாக்டர் மகாதிர் பிரதமரானார்.

ஆனால் இவர் இரண்டாவது முறை பிரதமரானது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய சோகம். அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி அவருக்கு இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம்! வயதானவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல என்பதை நிருபித்துவிட்டார்! வயதானால் எப்பேர்ப்பட்ட மனிதனும் திருந்துவான் என்பதை பொய்யாக்கிவிட்டார்! திருந்துவார் என்று நினைத்தால் வன்மத்தை அதிகமாக்கிக் கொண்டார்!  கடைசியில் யாருக்கும் பிரயோஜனமில்லாத மனிதராக இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்!

 நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு இவர் தான் காரணம் என்பதை மலேசியர்கள் அறிவர். எந்தவொரு காலத்திலும் இப்படி ஒரு நெருக்கடியை இந்த நாடு சந்தித்ததில்லை. 

எதிர்கட்சி அரசாங்கம் அமைந்த பிறகு ஒப்பந்தப்படி அவர் அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை.  காலத்தைக் கடத்தினார்.  கடைசியில் "உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! உனக்கும் பேப்பே! உங்கப்பனுக்கும் பேப்பே!"   என்கிற நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்!

இப்போது நாட்டில் என்னன்னவோ, எப்பப்படியோ  அனைத்தும் திசை மாறிவிட்டன! நாட்டில் நிரந்தர ஆட்சீயில்லை. இன்றோ என்றோ ஆட்சி கவிழலாம் என்கிற  நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. பேரரசர் தலையிட்டால் ஒழிய தீர்வு இல்லை என்பதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் இவர் மூன்றாவது முறையாக பிரதமரா? கேட்கவே சகிக்கவில்லை!

முதலில் இப்போதுள்ள நிலையை சரிசெய்வோம்.  இதற்கு ஒரு முடிவு காண்பது மிக மிக முக்கியம்,

மீண்டுமா டாக்டர் மகாதிர்?  ஐயோ! வேண்டவே வேண்டாம்!  வேண்டாத ...........  விலை கொடுத்து வாங்குவானேன்!

Saturday 24 October 2020

நம்மாலும் முடியும் (4)

 மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். இது கொரோனா தொற்று நோயின் காலம்.

சோதனைகள் ஏராளம்.  வேதனைகள் ஏராளம்.  

இந்த சோதனைகளும் வேதனைகளும் நமக்கு மட்டுமல்ல. உலகெங்கிலும் தான்.

இந்த சோதனையான நேரத்தில், பல வெளிநாடுகளில், ஏழைகள் வேறு வழியில்லாமல் எலிகளைத் தின்கின்றனர்.  பாம்புகளைத் தின்கின்றனர்.  தவளைகளைத் தின்கின்றனர். கைக்கு என்ன கிடைக்கிறதோ "புடி அதை" என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். 

இனி நாய், பூனைகள் கூட மனிதர்களைப் பார்த்து ஓடி ஒளியலாம்! நமது நாட்டில்கூட,  வெளிநாடுகளிலிருந்து வந்த, வியட்னாமியர், நாய் மாமிசம் சாப்பிடுகின்ற பழக்கம் உடையவர்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வசிக்கும் பகுதிகளில்  நாய்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தனவாம். இப்போது அவர்கள் அதனை செய்யத் துணியவில்லை! கட்டுக்குள் இருக்கின்றனர்!

நம் நாட்டில் அப்படி ஒரு நிலை வராது என நம்பலாம்.  ஆனால் அதற்கான முயற்சிகளை இப்போதே நாம் எடுக்க வேண்டும். இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் நமது இனத்தவராகத் தான் இருக்க முடியும்.

அதற்காகத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்.  நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவரா தள்ளிப் போடுங்கள் அந்த குடிப்பழக்கத்தை! இன்று உள்ள உங்கள் குடிகார நண்பன் நாளையே தொற்றுநோயால் தொற்றிக் கொண்டுப் போய் விடலாம்!    நீங்கள் ஏன் அந்த அபாயத்தை வருவித்துக் கொள்ளுகிறீர்கள்?

வேண்டாம்! அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் உடல் நலம் முக்கியம். உங்கள் குடும்ப நலன் முக்கியம். உங்கள் குழந்தைகள் சாப்பிட வேண்டும். அது முக்கியம். உங்கள் பெற்றோர்கள் சாப்பிட வேண்டும்.  அது முக்கியம்.  உங்கள் பிள்ளைகள் பள்ளி போக வேண்டும். அது முக்கியம். அவர்கள் உடல் நலனைக் கவனிக்க வேண்டும்.  அது முக்கியம்.

உங்களுக்கு நிறைய முக்கியங்கள் உள்ளன.  நிறைய பொறுப்புகள் உள்ளன.  மற்றவர்கள் சாப்பிடும்போது உங்கள் பிள்ளைகள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அப்படி பட்டினிக் கிடந்தால்  அதற்குப் பொறுப்பாளி நீங்கள் மட்டும் தான்.  வேறு யாருமில்லை! 

உங்கள் பொறுப்பை நீங்கள் அலட்சியம்செய்ய வேண்டாம்.  வேதனைகள்   வரலாம். சோதனைகள் வரலாம். எல்லாவற்றையுமே நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்!

சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுங்கள்!  நம்மாலும் முடியும்!

Friday 23 October 2020

ஒரு வழி தானா? எத்தனையோ வழிகள் உண்டு, நண்பா!

 "விடாக்கண்டன் கொடாக்கண்டன்" என்பார்களே அது தான் இப்போது நமது அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது!

"உனக்கு என்ன ஒரு வழி தானே! எனக்குப் பல வழிகள்,  நண்பனே!"  என்கிற எக்காளம் தெரிகிறது!

இவர்களைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கலாம்.  விழுந்து விழுந்தும் சிரிக்கலாம்! ஆனால் நட்டம் என்னவோ நமக்குத் தான்.! அவதிப்படப் போவது ஏழை எளியவர்கள் தான்.

இரு பக்கத்தினருமே கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதான் அவர்கள் நில நடுக்குத்துக்கும் தாங்கக் கூடிய தங்க மாளிகையில் வசிப்பவர்கள் ஆயிற்றே!

"என்ன சொல்லுங்கள்,  இப்போது எனது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நான் கூப்பிட்டால் யாரும் என் கூட வருவார்கள். நான் யாரையும் சந்திக்கலாம். நான் என்ன சொன்னாலும் 'ஆம்!' போட ஆள்கள் இருக்கிறார்கள்!  அது போதாதா எனது செல்வாக்கையும், எனது பதவியையும் தற்காத்துக் கொள்ள! இல்லையா நண்பனே!" 

"நான் சர்வாதிகாரியா? இருந்துவிட்டுப் போகட்டும்! டாக்டர் மகாதிர் தனது 22 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? அவரைப் பள்ளக்கில் தானே சுமந்து கொண்டு போனீர்கள்? எதிர்கட்சிக்காரர்களையெல்லாம் துவம்சம் பண்ணினாரே அது என்ன ஜனநாயகமா? நீதித்துறையை நீச்சல் அடிக்கவைத்தாரே  அது என்ன ஜனநாயகமா?"

"நண்பனே! ஜனநாயகம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குக் குட்டை என்றால் என்னவென்று தெரியும்.  மட்டை என்றாலும் என்னவென்று தெரியும். நாம் மட்டை அடித்து கோட்டைக்கு வந்தவர்கள்! மாட்டையும் அடிக்கலாம்! கோட்டையும் உடைக்கலாம்!  யார் கேட்கப் போகிறார்? குட்டையைக் கோபுரம் ஆக்குவது எப்படி என்று நமது தலைவர் சொல்லிக் கொடுத்த பாடம்! அதனால் குட்டையைக் குழப்பலாம்! குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்! குழப்பத்தை ஏற்படுத்த கைக்கூலிகள் இருக்கிறார்கள்! எனக்குப் பயமில்லை!"

"நண்பா! ஜனநாயகத்தை மலரச்  செய்ய எத்தனையோ வழிகள்! உமக்கு ஒரே வழி மட்டும் தான்! இப்போது நான் தான் ஆட்சி! அதிகாரம்! அதனால் எனக்கு எத்தனையோ வழிகள்!"

"நம் தலைவர் செய்யாத கோமாளித்தனமா! அவரை யாரும் கோமாளி என்று சொல்லவில்லையே! நானும் அப்படித்தான்! இந்த கோமாளித்தனத்தோடு அடுத்த தேர்தல் வரை  பதவியில் இருந்துவிட்டால் போதும்!  பிரதமராக நானும் இருந்தேன் என்கிற திருப்தியே போதும்!"

"மக்களைத் திருப்தி படுத்த முடியாது. அவர்களே அவர்களின் புத்தியைப் பயன் படுத்த வேண்டும், என்னைப் போல! "

"எவ்வழி கோணல் வழி அதுவே என் வழி!"

நம்மாலும் முடியும் (3)

 கொரோனா தொற்று நோய் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இத்தனை ஆண்டு காலம் வயிற்றை நிரப்பினோமே தவிர புத்தியை நிரப்பவில்லை! 

புத்தியை நிரப்பாத காரணத்தினாலேயே இப்போது துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நன்றாக வாழ்ந்த காலத்தில் நாம் எதனை முக்கியமாக நினைத்தோம்?  எதுவுமே முக்கியமாக நமக்குத் தோன்றவில்லை!  

எல்லாவற்றுக்குமே போட்டா போட்டி.   வீட்டில் கல்யாணம் என்றால் கையிலிருக்கும்  காசு,  அம்மாவின் சேமநிதியில் உள்ள காசு  - எதனையுமே விட்டு வைப்பதில்லை! எல்லாவற்றையுமே வழித்தெடுத்துக் கல்யாணத்திற்குச் செலவு செய்வது நமது வழக்கமாகிப் போய்விட்டது!  கல்யாணம் செய்யும் இளைஞனோ, இளைஞியோ வேலை செய்கின்ற காலத்தில் ஏன் தனது கல்யாணத்திற்காக ஒரு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை?

சிக்கனம் என்பதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்வதில்லை. தேவை இல்லாமல் காதுகுத்து என்று சொல்லி பணத்தைச் செலவு செய்கிறோம். பிறந்த நாள் என்று சொல்லி அதற்கும் பணத்தை - அளவுக்கு மீறி - வாரி  வாரி இறைக்கிறோம். நீங்கள் பிறந்த நாள் கொண்டாடவில்லை என்றால் இந்த உலகம் உருண்டு உருண்டு சுருண்டா போய்விடும்?  அதற்காக இந்த அளவு செலவு செய்ய வேண்டுமா என்பது தான் கேள்வி. ஏன் வீட்டுக்குள்ளயே, நாலு சுவற்றுக்கள்,  நமது உறவுகளுடன் கொண்டாடுவதில் என்ன தவறு?

இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறோம். குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் அதற்கு ஒர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!  பணத்தைச் சேமிக்க வேண்டிய காலத்தில் சேமித்து வைக்கவில்லை என்றால் பிற்காலத்தில் கஷ்டப்படும் போது யாரும் உங்களுக்குப் பணம் கொடுத்து உதவப்போவதில்லை என்பதை மறக்கவே வேண்டாம்!

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இது கொரோனா காலம் மட்டும் அல்ல. இனிப்பு நீர், இருதயக்கோளாறு என்பது சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள நோயாக மாறிவிட்டது. அப்போது டாக்டர்கள் கௌரவமாக உங்களின் கைகளையோ, கால்களையோ வெட்டி எடுக்க வேண்டும் என்பார்கள்! அதற்குப் பின் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது!

இந்த நேரத்தில் உலகமே உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.  உங்கள் பணம் தான் உங்களுக்கு உதவும். மற்றவர்கள் உங்களுக்கு அனுதாபம் தான் தெரிவிப்பார்கள்! வேறு என்ன செய்யப் போகிறார்கள்?

வேலை செய்கின்ற காலத்தில் உங்கள் சேமிப்புக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் பாடுப்பட்டு சம்பாதித்த பணத்தை குடித்து, கும்மாளமடித்து குப்பைத் தொட்டியில் கொட்டாதீர்கள்!

உங்களுடைய பணம் மட்டும் தான் உங்களுக்கு உதவும்! அதனைப் பிடித்து வையுங்கள்!  அது தான் உங்களுக்குக் கௌரவத்தைக் கொடுக்கும்!

Thursday 22 October 2020

நமக்கு அது நல்ல செய்தி அல்ல!

 பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்தியினைப் படித்த போது  நமக்கு மகிழ்ச்சிதான்!

 ஆனால் இது போன்ற செய்திகளை நம்மால் உறுதியாக நம்புவதற்கில்லை. சொல்லுவதொன்று செய்வதொன்று என்கிற ரீதியில் தான் விடுதலைப்புலிகள் மீதான செய்திகள் வருகின்றன.

ஆனாலும் இந்த செய்தியை நம்புவோம். நல்ல செய்தியாகவே இருக்கட்டும்!

இந்த நேரத்தில் கொஞ்சம் நமது பக்கம் திரும்புவோம்.

நமது அரசாங்கத்தின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் விடுதலைப்புலிகளைப் பற்றி என்ன செய்திகள் வந்தாலும், எந்த நாட்டிலிருந்து வந்தாலும் நமது காவல்துறை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!  அப்படி ஒரு கொள்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள்!

எந்த நாடுகள் தடை நீக்கம் செய்திருக்கின்றன என்பது பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை! எந்த நாடுகள் இன்னும் தடை நீக்கம் செய்யவில்லை என்பதைத் தான் அவர்கள் தங்களது வரவாக வைத்துக் கொள்வார்கள்!  அந்த நாடுகளின் செய்திகளுக்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்!

ஏன் நமது காவல்துறையினர் இப்படி ஒரு நிலையை இன்னும் சுமந்து கொண்டுத் திரிகிறார்கள்? 

காரணமாகத்தான்!   சென்ற ஆண்டு காவல்துறை "விடுதலைப்புலி ஆதரவாளர்கள்!" என்று சொல்லி ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது!  அவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது இந்த உலகத்திற்கே தெரியும்! அது காவல்துறைக்கும் தெரியும்! ஆனால் அவர்களைச் சிறையில் அடைத்து ஏதோ  பயங்கரவாதிகளைப் போல அவர்களை நடத்தினார்கள்! கடைசியில் ஏதோ உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறினார்கள்! அவர்களின் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் படங்களை வைத்திருந்தார்களாம்!  இப்படியும் ஒரு காவல்துறை இங்கு உண்டு என்பதை உலகத்திற்குக் காட்டிவிட்டார்கள்!

எப்படியோ நமது நாட்டில் இது போன்ற சட்டங்கள் நீக்கப்படுவதற்கு வழியில்லை! அவ்வப்போது தமிழ் அரசியல்வாதிகளை, ஈழத்தமிழர்களின் அனுதாபிகளை மாட்டிவிட அரசாங்கத்திற்குத் தேவையாக இருக்கின்றன!

நமக்கு அது மகிழ்ச்சியான செய்தி அல்ல!

அன்வாரின் பிடி தளர்கிறதா?

 பிரதமர் ஆகும் அன்வார் இப்ராகிம் கனவு,  கனவாகவே ஆகிவிடுமோ என்கிற கேள்வி எழுந்தள்ளது! 

ஆமாம், அவரின் பிடி தளர்கிறது என்றே தோன்றுகிறது!

அரசியலில் எதுவும் நடக்கலாம்.  அரசியலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. அது போலவே அன்வார்  இப்ராகிம் நல்லவரா, கெட்டவரா என்பதும் நமக்குத் தெரியாது.

பதவிக்கு வந்த பிறகு தான் ஒருவரின் உண்மைத் தன்மை நமக்குத் தெரிய வரும். அன்வார் விஷயத்தில் அவரைப்பற்றி நம்மால் அதிகம் தெரிந்த கொள்ள முடியவில்லை. எந்த அளவுக்கு அவரால் அனைத்து இனத்தவரையும் அணைத்துச் செல்ல முடியும் என்பது இன்னும் நமக்குப் புரியாத புதிர் தான். அதற்காகவாவது அவர் பிரதமராக வந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் பிரதமர் பதவிக்கு வரமுடியாத அளவுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் சரியான கிடுக்குப்பிடியைப் போட்டு வைத்திருக்கிறார்! அதனால் தான் இன்றுவரை அவரால் பிரதமர் பதவியைத் தொட முடியவில்லை!

சாதாரணமாக அம்னோ கட்சி அன்வாருக்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அந்த ஆதரவை அவ்வளவு சீக்கிரத்தில்  நம்பிவிட முடியாது! அப்படியே அவர்கள் ஆதரவு கொடுத்து அன்வார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் அவர்களின் அடுத்த நடவடிக்கை எப்படி அன்வாரை கவிழ்ப்பது என்பதாகத்தான் இருக்கும்! நிச்சயமாக அவர்கள் அடுத்த தேர்தல் வரை அன்வாருக்கு ஆதரவு கொடுக்க மாட்டாரகள் என உறுதியாக நமபலாம்! அந்த அளவுக்கு அம்னோ கட்சியினர் நம்பத்தகாதவர்கள்!  அதில் எந்த சந்தேகமுமில்லை!

இது நாள் வரை அம்னோவினரை நம்பித்தான் அன்வார் ஆட்சி அமைக்க தன்னால் முடியும் எனக் கூறி வந்தார். இப்போது அது நடக்காது என்றே செய்திகள் கூறுகின்றன.

அம்னோ,  தொடர்ந்து பிரதமர் முகைதீன் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று, முகைதீனுடனான சந்திப்பிற்குப் பிறகு,  இப்போது கூறி வருகின்றனர்.  ஆமாம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது முகைதீனால் கொடுக்க முடிந்தால் அவர்கள் ஏன் அன்வாரை ஆதரிக்கப் போகிறார்கள்? என்பது சரியான கேள்வி தானே!

 ஒன்று மட்டும் நிச்சயம்.   அம்னோவின் வெற்றி என்பது மக்களின் நஷ்டம்! மீண்டும் கொள்ளைக்காரர்கள் தலை தூக்குவார்கள் என்பதில் உறுதியாக நம்பலாம்!

ஏமாற்றுக்காரர்கள் கையில் நாடு போகும் என்றால் "அது தான் இந்த நாட்டு மக்களின் விதி!"  என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

Wednesday 21 October 2020

நம்மாலும் முடியும் (2)

 இன்று நாளிதழ்களிலே ஒரு சில செய்திகளைப் பார்க்கிறோம். 

வேலை இல்லாமல் வீதிக்கு வந்த குடும்பங்களப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. படிக்க நமக்கு வேதனை தான். 

என்ன செய்வது? நமது இனம், நமது மக்கள். வீடுகளிலே போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வழி தவறிப் போகின்றனர்.

அம்மாவுக்கும் வாழத் தெரியவில்லை! மகளுக்கு அவள் எங்கே வழி காட்டுவது? அப்பன் குடிகாரன்! அவன் எங்கே தனது பிள்ளைகளுக்கு வழிகாட்டப் போகிறான்?

இப்படித்தான் நமது குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு குடும்பத்தை நடத்த வழி  தெரியாதவன் எல்லாம் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்!

இடைநிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவன் அவனோடு படிக்கும் ஒரு மாணவியை இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்கிறான். அது கூட முறையான திருமணமாக இருப்பதில்லை.  குழந்தை பிறந்தால் அதை முறைப்படி பிறந்த சான்றிதழ் எடுக்க வேண்டும் என்கிற அக்கறையும் இருப்பதில்லை!  ஒரு வருடம் ஆனப்பிறகு அவன் ஒரு பக்கம்  இவள் ஒரு பக்கம் பிரிந்து விடுகிறார்கள்! அப்பா அம்மா இவர்களை வீடுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்! இந்த அப்பா அம்மா சரியாக இருந்தால் ஏன் இவர்களைப் போன்ற மாணவர்கள் தவறுகிறார்கள்?

இவர்களைப் போன்றவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்காதவரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்! என்ன செய்யலாம்?

அப்படியே ஒழுங்கீனமான குடிகார குடும்பங்களாக இருந்தாலும் தங்களது  படிக்கின்ற குழந்தைகளுக்கு ஆறுதலாகவும் அணுசரணையாகவும் இருக்க வேண்டும். " நாம் தான் குடித்துக் குட்டிசுவரானோம் அவர்களாவது படித்து நல்ல நிலைமைக்கு வரட்டும்!"  என்று கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.  ஆனால் அவர்கள் குடிப்பதை மட்டும் வீட்டுக்கு  வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் நிபந்தனை!

எத்தனையோ குடிகார தகப்பன்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். இல்லை என்று சொல்லிவிட முடியாது.

தேவை எல்லாம் தங்களது பிள்ளைகள் மீது கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பாசம், அவர்களது எதிர்காலம் பற்றிய சிந்தனை - இதனை மனதில் வைத்து செயல்பட்டாலே போதும் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

"நான் குடிகாரன்! என்னால் எதுவும் ஆகாது!" என்கிற மனநிலையிலிருந்து மீள வேண்டும்.  என்னாலும் முடியும் என்பதை  சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்! 

நம்மாலும் முடியும்!

நம்மாலும் முடியும்! (1)

 என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் எதனையும் சமாளிக்கக் கூடிய திறன் நமக்கு உண்டு  என்பதை மறந்து விடாதீர்கள்!

கொரோனா தொற்று என்பது நமக்குப் ப்திதாக இருக்கலாம். தீடீர் வேலை இழப்பு என்பது புதிதாக இருக்கலாம்.  

மற்ற இழப்புக்களாக இருந்தால் சமாளிக்கலாம் ஆனால் வேலை இழப்பு என்றால் எப்படி சமாளிப்பது?  கையில் பணத்திற்கு எங்கே போவது? என்பதெல்லாம் சரியான கேள்விகள் தான். 

ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்.  வேலை இழப்பு என்பது இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.  இதற்கு முன் இப்படி ஒரு நிலை இல்லை. அதனால் இங்கே இல்லை என்றால் அங்கே என்கிற மனோபாவம் நம்மிடையே அதிகம் என்பதும் உண்மை தான்.

வேலை இல்லை என்பதை இப்போது தான் நாம் எதிர்நோக்குகிறோம். இத்தனை ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோமே அதை நாம் மறந்துவிடக் கூடாது.

இத்தனை ஆண்டுகள் நாம் வேலை செய்து சம்பாதித்து,  சேமித்து வைத்த பணத்தை இன்றைய அவசியத்திற்க்காக நாம் செலவு செய்வதில் தப்பில்லை. 

இப்போது மிகவும் ஆபத்தான காலம். பலர் வேலை இழப்பை எதிர்நோக்கின்றனர். பலருக்கு வேலையே இல்லை.  என்ன செய்யலாம்?

ஒன்று,  இந்த நேரத்தில் நமது சேமிப்பு நமக்கு உதவியாக இருக்கும். பலரும் வேலை இழந்த நிலையில் யாரும் நமக்கு உதவப் போவதில்லை. அதனால் நமது பணம் தான் நமக்கு உதவியாக இருக்கும்.

"எனக்குச்  சேமிப்பே இல்லையே! நான் என்ன செய்வது?'  என்று கேட்பவர்களுக்கு  ஒன்றைச் சொல்லலாம்.   சேமிப்பு இல்லை என்பது மற்றவர்களுடைய குற்றம் அல்ல அது உங்களுடைய குற்றம். 

நீங்கள் உடனடியாக ஒரு வேலையைத் தேடி ஆக வேண்டும்.  அது தான் உங்களுடைய தலையாய  உடனடி நிவாரணத்தைக் கொடுக்கும். 

என்ன வேலை கிடைக்கிறதோ, சம்பளம் குறைவோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலில் வேலை தேவை என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். 

எது எப்படிப் போனாலும் "நம்மாலும் முடியும்!" என்பதை மறந்து விடாதீர்கள்!

தூர நில்லுங்கள்!

 தீபாவளி வருகிறது. இன்னும் சில நாள்களே உள்ளன   

ஆனால் தீபாவளி என்பது ஒன்றும் அதிசயமல்ல.  ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதே சமயத்தில் மூன்றாவது பெரிய இனம் என்னும் போது மற்ற பெரிய இரண்டு இனத்தை விட நம்மிடம் தான் ஆர்ப்பாட்டங்கள் அதிகம்!  அதாவது நாம் தீபாவளி கொண்டாடுகிறோம் என்பதை ஊரறிய, உலகறிய ரொம்பவும் அதிகமாக வெளிப்படுத்துபவர்கள் நாம் தான்!

சரி, அதை விடுவோம். இந்த ஆண்டு தீபாவளி என்பது தனியாக வரவில்லை. கூடவே கொரோனா தொற்று நோயும் கூடவே வந்திருக்கிறது! அதனால் எதனையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 

காரணம் நாம் கேளிக்கைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பதெல்லாம் நமக்குச் சாதாரணமான விஷயம்.

ஏன் இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் கூட  நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! இப்போதும் அதே ஜாலி, அதே மப்பு மந்தாரம், அதே அட்டகாசம் - நாம் இன்னும் மாறவில்லை!

இதோ வருகிற வெள்ளிக்கிழமையிலிருந்து குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களுக்கு இன்னும் அதிகமான தண்டனை காத்துக் கிடக்கிறது. மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும். 

நம் இனத்தின் சாபக்கேடு என்றால் மதுவின் பிடியில் நாம் சிக்கி இருப்பது.  அதிலிருந்து நாம் விடுபட முடியவில்லை என்பது தான் உண்மை.

இப்போது, கொரோனா தொற்று நோயின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் நம் இனத்தவர் தான்.  சீனர்கள் பொருளாதார வலிமையினால் வேலை இல்லாப் பிரச்சனை என்பது அவரிடையே குறைவு. மலாய்க்காரர்கள் அரசாங்க வேலை என்பதால் அவர்களிடம் பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது. இந்தியர்கள் மட்டும் தான் அதிகப் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். தனியார் நிறுவனங்களையே சார்ந்திருப்பதால் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்தியர்கள் வேலை இழக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குடிப்பதையே முழு நேர தொழிலாக கொண்ட நம்மவர்கள் தான்!

கடைசியாக, குடிப்பதை நிறுத்துங்கள்! மதுவின் பிடியிலிருந்து விலகி நில்லுங்கள்! தீபாவாளியாக இருந்தால் என்ன?  சாராயம் இல்லாத தீபாவளியாக இருக்கட்டும்! குடித்துச் சிரழிய வேண்டாம்! பிள்ளைகளை நடுத்தெருவில் நிறுத்த வேண்டாம்!

தூர நில்லுங்கள்! குடியிலிருந்து தூர நில்லுங்கள்!

Tuesday 20 October 2020

இதைத் தான் மனிதம் என்கிறோம்!

 காலையில் 'வணக்கம் மலேசியா"  இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி

ஆரம்பத்தில் படிக்கும் போது மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும் கடைசியில் முடிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது1

கொரோனா தொற்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்பு இனி  பெரிய அளவில் வரும் என்றே தோன்றுகிறது.. மற்றவர்களை விட இந்தியர்களின் பாதிப்பு இன்னும் அதிகம் வரும் என்பது தான் சோகம். 

கார்கள் கழுவும்  தொழிலில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவருக்கு,  இருந்த தொழிலையும் இழந்ததால், தந்தையார் வைத்திருந்த ஒரு பாழடைந்த வீட்டில்   அவரும் அவரது  வேலை இழந்த மனைவியும் போக வேண்டிய கட்டாயம். ஆனால் மிகவும் பாழடைந்து போயிருந்ததால் அங்கும் தங்க இடமில்லாமல் கடைசியில் அவர்களுடைய புரோட்டோன் காரிலேயே கடந்த நான்கு மாதங்களாக தங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

நன்றி: வணக்கம் மலேசியா  P. Sivagamiselvan-J.Rajakumari

 இவர்களின் இக்கட்டான பிரச்சனையை அறிந்த துவாலாங் செக்கா, சட்டமன்ற உறுப்பினர்  டத்தோ நோலி அசிலின் முகமட் ரட்ஸி அவருடன் சேர்ந்து அரசாங்க சார்பற்ற இயக்கம் ஒன்று,   பேராக் தீயணைப்பு மீட்புத்துறை  அனைவரும் சேர்ந்து அந்த தம்பதியினருக்கு இரு அறைகள் கொண்ட வீடு ஒன்றைக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். 

அநேகமாக அந்த வீடு தீபாவளிக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டு அத்தம்பதியினர் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த நேரத்தில் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோலியைப் பாராட்டியே ஆக வேண்டும்.   சட்டமன்ற உறுப்பினர் ஒரு காரியத்தை முன்னெடுத்தால் அது தானாகவே நடைபெறும். 

எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இவரைப் போலவே பிரச்சனைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுத்தால் முடியாதது முடிந்து விடும்.

இந்த நேரத்தில் ஒதுங்குவதற்கு என்று ஒரு வீட்டை வைத்திருந்தாரே அந்த நண்பரின் தகப்பனார் அவர் பாராட்டுக்குரியவர்.  ஓட்டைக் குடிசையானாலும் சொந்தக் குடிசை அல்லவா!

தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். மதுவை விட்டுத் தூர நில்லுங்கள்! அதுவே நிரந்தர மகிழ்ச்சி!

Monday 19 October 2020

அதனை நாம் ஏற்க முடியாது!

 அம்னோவுக்கு ஏற்கும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட பிரதமர் முகைதீன் யாசின் முனைப்புக் காட்டி வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதாக அம்னோ கடந்த சில வாரங்களாக அடம் பிடித்து  வருகிறது என்பதை நாம் அறிவோம்.

அம்னோவின் முக்கிய தேவை என்பது ஒன்று:  துணைப் பிரதமர் பதவி.சட்டத்துறைத் தலைவர் பதவி, சட்டத்துறை அமைச்சர் பதவி  போன்ற பதவிகள் அவர்களுக்குத் தேவையானவை. 

இப்போது அம்னோ தலைவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன.  அந்த வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.  அதற்கு ஏற்றாற் போல அமைச்சரவை மாற்றங்கள் செய்ய வேண்டும்.

இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். எதனையும் உறுதிப்படுத்த இயலாது.

ஒரு கட்சியின் நாடாளுமன்ற எண்ணிக்கையை வைத்துத் தான் அதன் வலிமை அளக்கப்படுகிறது.  அந்த வகையில் அம்னோவின் நாடாளுமன்ற எண்ணிக்கை  என்பது அதன் பலம். அதனால் இன்றைய அரசாங்கத்தை அவர்களால் ஆட்டிப்படைக்க முடிகிறது. தொடர்ந்து ஆட்டிப்படைக்க முடியும்.

இன்றைய பிரதமர் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் பார்க்கும் போது அவரது ஆட்சி  நீடிக்க அவர் எதனையும் செய்யத் தயார் என்று நமக்குப் புரிகிறது!

ஆனால் இன்னொருபக்கம் பார்க்கும் போது ஓர் இரண்டு பேரைக் கூடுதலாக வைத்துக் கொண்டு அவரால் இப்படி விருப்பம் போல அமைச்சரைவையில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது! 

இப்படி தனக்குச் சாதகமாக செயல்படுவதைத் தடுக்க பேரரசர் ஒருவரால் மட்டுமே முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.  அரசியல்வாதிகள் அனைவருமே தங்களைச் சுற்றி வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு சித்து விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்! ஆமாம் என்று சொல்லுவதற்கும் ஆளுண்டு! இல்லை என்று சொல்லுவதற்கும் ஆளுண்டு! அதற்கு ஏற்றாற் போல அவர்கள் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள் போலும்!

ஆனால் பிரதமர் முகைதீன் என்ன தான் மாற்றம் கொண்டுவந்தாலும் அம்னோவைச் சேர்ந்த ஒருவரை துணைப் பிரதமராக நியமித்தாரானால் அது ஏற்க முடியாத ஒன்று. அந்த நியமனம் ஏறக்குறைய பிரதமர் அந்தஸ்து உள்ள பதவியாகத்தான் பார்க்க முடியும். அப்படியென்றால் என்ன அர்த்தம்? பொதுத் தேர்தல் மூலம் அரசாங்கம் அமைக்க தோல்வியடைந்த அம்னோ இப்போது கொல்லைப்புற வழியாக அரசாங்கம் அமைத்ததாகவே பொருள்படும்! அது மிகவும்கேவலம்! கொள்ளைக்காரனைக் குளிப்பாட்டி, மகுடம் சூட்டி "நீயே ஆட்சி செய்!" என்று சொல்லுவதாக ஆகும்!

அப்படி நடக்காது என நம்புவோம்!

Sunday 18 October 2020

மேலும் மேலும் குழப்பமா?

 என்னடா1  நமது நாட்டுக்கு வந்த சோதனை!

ஒரு பக்கம் நமது பிரதமர் முகைதீன் யாசின் மக்களைக் குழப்பிக் கொண்டிக்கிறார்!

இன்னொரு பக்கம் அன்வார் இப்ராகிம் "நானே அடுத்த பிரதமர்! எல்லாம் விலகி நில்லுங்கள்!"  என்கிறார்!

இப்போது இன்னொருவர் களத்தில் இறங்குகிறார்.  அவர் தான் கிளந்தான் இளவரசரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா!

ஏதோ ஒரு சக்தி அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆகிவிடக் கூடாது என்று நிரந்தரமாக தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது!

ஆனாலும் துங்கு ரசாலிக்கான ஆதரவு மிகவும் தூக்கலாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவரும் பல தோல்விகளைச் சந்தித்தவர். அவரைப் பற்றியான தவறான அபிப்பிராயம்  என்பதெல்லாம்  ஒன்றுமில்லை. நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். 

 ஆனால் அரசியலில் பெரிய அளவில் அவரால் பெயர் போட முடியவில்லை. அவர் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். 

இப்போது தான் அவருக்கு விடிவு காலம் வந்திருக்கிறதோ என்னவோ! அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் அவருடைய அம்னோ கட்சியினரே அவருக்குப் பக்கபலமாக இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது!

மேலும் அவரின் நோக்கம் வேறாக இருக்கலாம்.  அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதை அவர் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது அதனால் அன்வார் பிரதமராக வரக் கூடாது என்பதால் இப்போது இவர் பிரதமராக வர முயற்சி செய்கிறார் என்பது தான் உண்மை.

துங்கு ரசாலி பிரதமராக வருவதற்கு அம்னோ ஒரு வேளை ஆதரவு கொடுக்கலாம்.  அம்னோவின் நோக்கம் எல்லாம் "அடுத்த தேர்தல்" மட்டும்தான்!  துங்கு ரசாலி பிரதமராக வந்த பின்னர் அவருக்குப் போதுமான ஆதரவு இல்லாமல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அடுத்து தேர்தல் என்பது தான் சரியான தீர்வாக இருக்கும்,  அப்போது பேரரசரின் முடிவும் அடுத்த தேர்தலாகத் தான் இருக்கும். வேறு வழி இல்லை!

துங்கு ரசாலி அடுத்த பிரதமராக  வருவார் என்றால் அடுத்த திடீர் தேர்தலும் நடக்க வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும்!

துங்கு ரசாலி என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு! அன்வார் இப்ராகிம் என்பது நிரந்திர ஏற்பாடு!

இந்த குழப்பங்கள் இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது அந்த குழப்பத்தின் தன்மையைப் பொறுத்தது!

Saturday 17 October 2020

என்ன தான் வேண்டும்?

 அம்னோ கட்சியினருக்கு இப்போது என்ன தான் தேவை?

உண்மையைச் சொன்னால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அரசாங்கம் பாரிசான் கட்சியின் கீழ் வரவேண்டும். இதுதான் அவர்களது குறிக்கோள்.

இந்த குறிக்கோளை அடைய அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் கீழ் அரசாங்கம் அமைப்பது அவர்களுக்கு மிக மிக அவசிய-அவசரத் தேவை! 

இப்போது இருக்கிற சூழல் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. தொடர்ந்தாற் போல இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அது ஒன்றே போதும் அனைத்தும் சாதகமாக இருப்பதாக அவர்களது கணிப்பு.

இப்போது உடனடியாக அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம். ஆனால் கொரோனா தொற்று அவர்களுக்கு இடைஞ்சலாக அமைந்துவிட்டது. அதுவே இன்றைய பிரதமருக்குச் சாதகமாகிவிட்டது!

இப்போதைய நிலைமைக்கு பிரதமர் மொகிதீன் மட்டுமே அம்னோவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்!  இன்னொறு முட்டுக்கட்டையும் அம்னோ சந்தித்தாக வேண்டும். அவர் தான் அன்வார் இப்ராகிம்.

முதலில் அவர்கள் ஒழித்துக்கட்ட வேண்டியவர்  மொகிதீன்.  அதனால் தான் 'நாங்கள் அன்வாரை ஆதரிக்கிறோம்!" என்று சொல்லித் திரிகின்றனர்.! முதலில் முதலாமவரை ஒழித்துவிட்டால் அடுத்தக்கட்ட நகர்வு அன்வாரை நோக்கி இருக்கும்! 

அம்னோவின் நோக்கம் எல்லாம் தேர்தல் மட்டும் தான்!  கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் அடுத்து அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்!

பிரதமர் மொகிதீன் நிலை நமக்குப் புரிகிறது. மிகவும் பலவீனமான அரசாங்கத்தை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் அன்வார் அப்படி அரசாங்கத்தை அமைத்தால் அவருடைய நிலைமை எப்படி இருக்கும்?  அவரும் பலவீனமான அரசாங்கத்தைத் தான் கொண்டிருப்பரா?  காலை வாரிவிட ஆட்கள் இருப்பார்களே! அது மட்டும் அல்ல. அம்னோவிடம் பொருளாதார சக்தி என்பது அதிகம்.  யாரை வேண்டுமானாலும் கவிழ்க்கக் கூடிய சக்தி அதிகம். பணத்தைக் கொடுத்து யாரையும் இழுத்து விடுவார்கள்! 

அது சரி! அம்னோவுக்கு என்ன தான் வேண்டும்?  அவர்களுக்கு அரசாங்கம் வேண்டும்! பதவி வேண்டும்! தங்கள் மீதூள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் முற்றிலுமாக மறைக்கப்பட வேண்டும்! அவர்களுக்குத் தோதானவர்களைப் பதவிக்குக் கொண்டு வரவேண்டும்!

அரசியல் என்பது மிகவும் அதிகாரமிக்கது!  எதையும் செய்யலாம்! எதனையும் செய்யலாம்!  ஓட்டாண்டியை உலக மகா ஊழல்வாதி எனலாம்! ஊழல்வாதியை உலக மகா உத்தமன் எனலாம்!

அதனால் நல்லவர்கள் நாட்டை வழி நடத்தவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை!

 

அரசியல் நிலவரம் எதனை நோக்கிப் போகிறது?

 நமது நாட்டின் அரசியலில் நிச்சயமற்ற சூழல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அரசியலில் நிலைத்தனமை இல்லை என்றால் எந்த ஓர் அரசாங்கமும் நாட்டைச் சரியான பாதையில் வழி நடத்த முடியாது என்பதை இப்போது கண்கூடாக பார்க்கிறோம்.

இன்றைய பிரதமர் முகைதீன் யாசின் ஒரு இக்கட்டான சூழலில் தான் நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.  போதுமான ஆதரவு இல்லாத சூழலில் வலுத்தவன் வைத்தது தான் சட்டம் என்கிற நிலையில் தான் நாடு போய்க் கொண்டிருக்கிறது.

இதுதான் சரியான தருணம் என்று எதிர்பார்த்திருந்த அம்னோ இப்போது குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது!  பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 

இன்றைய அரசாங்கத்தில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சி என்றால் அது அம்னோ தான். அதனால் அவர்களது குரல் உயர்ந்திருக்கத் தான் செய்யும்!  ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது அம்னோவினருக்கு முகைதீன் மேல் சரியான காட்டம் இருக்கிறது.  இருக்கத்தான் செய்யும். 

ஆனால் ஆரம்பத்தில் முகைதீன் அம்னோ கட்சியினருக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்பதற்குக் காரணங்கள் உண்டு.  மக்களின் கருத்து என்பது அம்னோவுக்குச் சாதகமாக இல்லை என்பதும் ஒரு காரணம்.  

அம்னோவினரை "கொள்ளைக்காரர்கள்!" என்கிற அபிப்பிராயம் தாம் மக்களிடையே உண்டு. அது இன்னும் உண்டு!

அன்றைய நிலையில் கொஞ்சம் அடக்கமாக வாசித்தவர்கள் இப்போது "மக்கள் மறந்து விட்டார்கள்!"  என்பதாக நினைத்து பழையபடி தங்களது கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

இப்போது அவர்களது தகுதிக்கு மீறி முக்கியமான பதவிகளை அடைய வேண்டுமென்று  ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்! துணைப்பிரதமர் பதவி என்பது ஒன்று. தங்களின் தலைவர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதற்காகத்தான் இப்போது என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்!

இப்போது முகைதீன் தலை உருண்டு கொண்டிருக்கிறது! அவர் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள யார் யாரோ கேட்பதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்!

அரசியல் நிலவரம் சரியாக இல்லை!  சீக்கிரம் சரியாகும் என நம்புவோம்!

Wednesday 14 October 2020

அம்னோவின் ஆதரவு தேவையா?

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு அம்னோவின் உதவி தேவையா என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன,.

ஒரு சில அம்னோ தரப்பினர் "நாங்கள் அன்வாரோடு கூட்டு சேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!" என்று வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். 

நமக்கு இந்த ஒத்துழைப்பில் சில சங்கடங்கள் இருந்தாலும் அன்வாருக்கு வேறு வழியில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 சென்ற பொதுத் தேர்தலில் அம்னோவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஒரே இலட்சியத்தோடு தான் மக்கள் அவர்களை ஒழித்துக்கட்டினர். ஒரே காரணம் தான். அது ஒரு கொள்ளைக்கார கும்பல் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது!

ஆனால் இப்போது கொள்ளைக்கார கும்பலுடன் கூட்டுச் சேர்வது என்பது நம்மால் ஜீரணிக்க முடியாத ஒன்று. கொள்ளைக்காரக் கும்பல் இப்போது வெள்ளைக்காரக் கும்பலாகிவுட்டதோ!

ஒரு சில காரணங்களுக்காக இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இப்போது தேர்தல் வேண்டாம் என்கிறது  பக்காத்தான். இப்போது தேர்தல் வேண்டும் என்கிறது அம்னோ.  நேரம் நல்ல நேரம் என்கிறது அம்னோ.  "ஆளும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது தொடர வேண்டும்" என்கிறது பக்காத்தான். 

"தேர்தல் என்றால்  கோடிக்கணக்கில் பணம் செலவாகும். தீடீர்த் தேர்தல் தேவை இல்லை!" என்கிறார்கள் பொது மக்கள்.

இந்த கூட்டணியின் மூலம் அம்னோ எதைச் சாதிக்க விரும்புகிறது? தங்களுக்கு  நல்ல பெயர் கிடைக்கும் என நினைக்கிறார்களா? அல்லது இப்போது  ஆளும் பெரிகாத்தானைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது போல, அன்வார் தலைமையில் அரசாங்கம் அமைந்தால்,  தொடர்ந்து பயமுறுத்தி அரசாங்கத்தை முடக்கலாம் என்று நினைக்கிறார்களா? 

அப்படி ஒரு நிலை வராது என்றே நான் நினைக்கிறேன்.  அம்னோவிலிருந்து குறிப்பிட்ட சிலர் தான் அன்வார் பக்கம் வருவார்கள் என நம்பலாம்.  ஆனால் இன்றைய பிரதமர் முகைதீன் படுகின்ற அவஸ்த்தை அன்வாருக்கு வராது என்பது உறுதி.

நல்லது நடக்க இது தான் வழி என்றால் அப்படியே ஆகட்டும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இது அம்னோ ஆதரவு சென்று சொல்ல இயலாது.  ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் அன்வாரை ஆதரிக்கின்றனர். அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே!

Tuesday 13 October 2020

கெரில்லா தோட்டம் - பழைய நினைவுகள்

 கிளந்தான், கெரில்லா தோட்டத்தைப் பற்றி நாளிதழில் படித்த போது மனம் கன கனத்தது.

நான்கு தலைமுறைகளாக அந்த தோட்டத்தில் வாழுகின்ற வயதானவர்கள் என்ன தான் செய்வார்கள்? "நமது தோட்டம்" என்கிற உரிமையோடு வாழ்ந்துவிட்ட அந்த மக்களை வெளியேறச் சொல்வதில் நியாயம் இல்லை தான்.  ஆனால் அது தானே யதார்த்தம்?  நமது மக்கள் வாழ்ந்த தோட்டங்களில் எல்லாம் இதே பிரச்சனையைத் தான் எதிர்நோக்கினார்கள். நமக்குப் பின் வந்த சீனர்கள் தோட்டங்களைச் சுற்றி இருந்த அரசாங்க நிலங்கள்,  ரயில்வே நிலங்களைப் பிடித்துக் கொண்டார்கள்!  நாம் தோட்டங்களைச் சொந்தம் கொண்டாடி அப்படியே தங்கிவிட்டோம்! யாரை நொந்து கொள்வது?

இந்த கெரில்லா தோட்டம் என்பது கொஞ்சம் வித்தியாசமான தோட்டம்.  நான் சில காலம் கிளந்தானில் வேலை செய்தவன்.  அந்த தோட்டத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஒரே காரணம் அந்த தோட்டம் ஒரு தீவில் அமைந்திருந்தது.  அப்போது அதைத் தீவு என்று தான் சொல்லுவார்கள்.  போக்குவரத்து என்றால் அங்குப் போக படகு பயணம்  மட்டும் தான்.  வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

கிளந்தானில் இந்தியர்களைக் கணக்கெடுக்க வேண்டுமென்றால்  அந்த ஒரு தோட்டமே போதும்!  அந்த தோட்டம் தான் இந்தியர்கள் வாழுகின்ற இடம். கிளந்தானில் மற்ற இடங்களில் ஒரு சில இந்தியர்கள்  தான் வாழ்ந்து வந்தார்கள்.

அங்குத் தமிழ்ப்பள்ளி உண்டு.   என்னோடு படித்த ஒரு நண்பர் அங்கு ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.  அந்த காலத்தில் வெள்ளைக்காரர்கள் அந்த தோட்டத்தை நிர்வகிக்க நேரடியாக இங்கிலாந்திலிருந்தே செயல்பட்டர்களாம்!  காரணம் அங்கு வேலை செய்ய யாரும் முன்வரவில்லையாம்!

அந்த தோட்டத்தைப் பூர்விகமாக கொண்ட ஒரு தம்பதியினரை எனக்குத் தெரியும்.  அவர்கள் சொன்ன ஒரு வரலாறு.  அந்த தோட்டத்தில்  ஆரம்பகாலத்தில் தமிழ் நாட்டிலிருந்து ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத்  தான் வேலை செய்வதற்காகக் கூட்டி வந்தார்களாம்.  அவர்களின் சந்ததியினர் தான் தொடர்ந்து அங்கு வேலை செய்து வருகின்றனர். வெளியே உள்ளவர்கள் அங்கு யாரும் போவதில்லை. உள்ளே உள்ளவர்கள் யாரும் வெளியே போவதில்லை! அப்படியே அவர்கள் பழகிவிட்டனர்.

ஆனால் இன்றைய நிலையில் எல்லாம் மாறிவிட்டன.  இப்போது போக்குவரத்துகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இப்போது தாராளமாக அவ்ர்கள் வெளியே செல்லலாம்.  போய் வேலை செய்யலாம். 

இதற்கு மேல் தெரிய வேண்டுமானால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான் சரியான மனிதர்.

இந்த வயதான தொழிலாளர்களுக்காக நாம் அனுதாபப்படுகிறோம். நல்லது நடக்க  இவர்களுக்காக பிரார்த்திப்போம்.

Monday 12 October 2020

நாளை விடியுமா? முடியுமா!

 நாளை (13.10.2020) பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேரரசரை சந்திக்கவிருக்கிறார். 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னாலும் பேரரசரின் நிலை என்ன என்பதை நாம் அறியவில்லை. 

அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. நல்லது கெட்டது என்று பலவற்றை ஆராய வேண்டிய சூழ்நிலையில் அவர் இருக்கிறார்.

இது அரசியல். அரசியலில் எவன் காலை வாறுவான், எவன் தலையை மொட்டையடிப்பான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது!  "ஆதரிக்கிறேன்!"  என்று வருபவன் பதவி கொடுக்காவிட்டால் "போதிக்கிறேன்!" என்று புறமுதுகைக் காட்டுவான்!  

ஆனால் அன்வாரின் நிலை எப்படியோ நமக்குத் தெரியாது!

 திறமையாளர் என்கிற பெயர் அவருக்குண்டு.  திறமையான நிர்வாகி என்கிற பெயர் அவருக்குண்டு. அத்தோடு நேர்மையான குணம், பக்திமான் - என்றும் சொல்லலாம். இப்போது பதவியில் இருப்பவர்களில் பலர் சும்மா ஒப்புக்குச் சப்பாணிகள்! ஆனால் கொள்ளையடிப்பதில் சப்பி எடுக்கும் ஒட்டுண்ணிகள்!

என்ன தான் திறமைகள் இருந்தாலும் அரசியல் என்று வரும் போது அனைத்தும் அடிபட்டுப் போகும்! அரசியலில் பார்க்கப்படுவதெல்லாம் "எனக்கு என்ன கிடைக்கும்!" என்கிற ஒரே மந்திர வார்த்தை தான்!

முதலில் அன்வார் ஆட்சி அமைக்க பேரரசரின் அனுமதி வேண்டும். 

அப்படியே அனுமதி கிடைத்துவிட்டால் அதன் பின்னர் தான் முதுகில் குத்தும் நாடகம் நடக்கும்! 

ஒன்றுமட்டும் எனக்குத் தெரியும். பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர் வல்லவர்.  அசராத மனிதர். மற்றவர்கள் அவரின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்ற சூழல் உண்டு. அவரால் எவரையும் சமாளிக்க முடியும்.

பிரதமர் பதவிக்கு ஏற்ற மனிதர் என்றால் அது அன்வார் தான். இதில் எந்த குழப்பமும் இல்லை.

நாளை விடியுமா என்று கேட்டால் "விடியும்!" என்றே அழுத்தமாகச் சொல்லலாம்! விடிய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

ஆட்சி நல்லவர்கள் கைக்கு வர வேண்டும். அதனைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம். கண்டவர்கள் கையில் அகப்பட்டு நாடு நாசமாகப் போவதை யாரும் விரும்பமாட்டார்கள்! 

அப்படி ஒரு நிலை நமக்கு வேண்டாம்!

Sunday 11 October 2020

என்ன அவசரம்?

 தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் தைப்பூசம் இருக்குமா, இருக்காதா என்கிற விவாதம் நடத்த ஆரம்பித்து விட்டோம்!

 முடியுமா, முடியாதா என்பதற்குப் பல அளவுகோள்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் சிவப்பு மண்டலங்களில் எதுவும் நடக்காது என்பது நமக்குத் தெரியும். மற்ற இடங்களில் ஒரு சில நிகழ்வுகள் ஒரளவு கட்டுப்பாடுகளோடு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாட்டில் எங்குமே முழுமையாக சமூக இடைவெளி என்பது அகற்றப்படவில்லை.  அப்படியென்றால் நாட்டில் எந்த இடமும் பாதுகாப்பான இடமாக இல்லை!

பத்துமலை என்பது சிவப்பு மண்டலத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. இருக்காது என நினைக்கிறேன். இப்போதும் கூட சுற்றுப்பயணிகள் அங்குப் போய் வரலாம்.  குறைவான பேர் என்பதால் பயப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விழா என்பது வேறு. இலட்சக்கணக்கில் போய் வருகின்ற ஒரு இடம்.  நாடெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்கள் பக்தர்களால் கூடுகின்ற ஓர் இடம். அதுவும் பிள்ளைக்குட்டிகள்  கூடுகின்ற ஓர் இடம். வயதானவர்கள் கூடுகின்ற ஓர் இடம். இப்போது கூட சிவப்பு மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்கப்படக் கூடாது என்கிற நிலை உள்ளது.

கோயில்கள் திறக்கப்பட வேண்டும் - அது பத்துமலை ஆகட்டும் அல்லது மற்ற வழிபாட்டுத் தளங்கள் ஆகட்டும் - நல்ல விஷயங்கள் தான்.  ஆனால் பக்தர்கள் எந்த காலத்தில் கட்டளைகளைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.  மனிதர்கள் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.  பக்தர்களும் மனிதர்கள் தானே!

ஆனால் பத்துமலை என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு திருத்தலம். மக்கள் கூட்டம் என்பது இலட்சக்கணக்கில்.  வெளிநாட்டுப் பயணிகள் எல்லாம் வருவார்கள். 

இந்த ஆண்டு வெளிநாடுகளிலிருந்து பகதர்கள் வர வாய்ப்பில்லை. உள்ளுரிலும் எல்லா இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர வாய்ப்பில்லை. ஆங்காங்கே கட்டுப்பாடுகள் உள்ளன. பல கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் கூட்டமும் குறைவாகவே இருக்கும்.

நடக்கும் என்றாலும் நடக்காது என்றாலும் முன்பு போன்று பக்தர்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. காரணம் கொரோனா தொற்று  எப்போது போகும் என்கிற விவரம் யாரிடமும் இல்லை! முற்றிலும் ஒழியுமா என்பதும் தெரியவில்லை! 

தைப்பூசம் இருக்குமா இருக்காதா என்பது இப்போது தீர்மானிக்க முடியாது. ஜனவரி மாதத்தில் தான் ஓரளவு தெரிய வரும்.

அது வரையில் பொறுமை காக்க!

Saturday 10 October 2020

ஏன் கட்டவில்லை?

 பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேருங்கள் என்று கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் ஒன்றை மறந்து விட்டோம். 

தேசிய மொழிப்பள்ளிகள், சீனப்பள்ளிகளில் இல்லாத, கேட்காத சில பிரச்சனைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சான்றாக இன்றைய செய்தியில் பகாவ், நெகிரி செம்பிலானில் ஒரு பள்ளி இணைக்கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருக்கின்றது!

என்ன செய்வது? ஆட்சி மாறிவிட்டதால் கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை என்கிறார்கள்!  இதெல்லாம் ஒரு காரணமா? நம்ப முடியவில்லை!

ம.இ.கா. காரன் ஆரம்பித்து வைத்தான்.  அத்தோடு அது சரி! அவனால் முடித்து வைக்க ,முடியவில்லை! அடுத்தவனும் வந்தான் அவனாலும் முடித்து வைக்க முடியவில்லை1 நாம் என்ன சொல்ல?  இரண்டு தவணைகள் பதவியில் இருந்தார்கள் அவர்களால் முடியவில்லை! 

பேரு பெத்த பேரு என்பார்கள்!  மாநிலத்தின் ஆட்சிக்குழு பதவி வேறு!  ஆனாலும் ஒன்றையும் கிழிக்க முடியவில்லை! அதிலும் இவர்கள் எல்லாம் முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்! ஒரு காரியத்தை முன்னெடுத்தால் அதை முடிக்கும் வரை  "பசி நோக்கார், கண் துஞ்சார்,  கருமமே கண்ணாயினார்" என்றல்லாவா  இருக்க வேண்டும்?  இவர்களின் அரசியல் குரு என்னத்தைக் கற்றுக் கொடுத்தார்? இப்போது கொஞ்சம், நாளை கொஞ்சம், இந்த ஆண்டு கொஞ்சம், அடுத்த ஆண்டு கொஞ்சம் இப்படி ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவதற்கா இவர்கள் பதவியில் இருக்கிறார்கள்?

தமிழ்ப்பள்ளிகளில் புதிதாக சேருகின்ற பிள்ளைகளுக்கு என்னத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்? என்ன தெரிந்து கொள்கிறார்கள்? இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டடங்கள், கரையான் அரித்த கட்டடங்கள், கட்டடம் கட்டவில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் - இவைகளையெல்லாம் படிக்கவா நாம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்? 

சே! அரசியலில் இருப்பவனுக்கு இனப்பற்றும் இல்லை, மொழிப்பற்றும் இல்லை! அட! அவன் குடும்பத்தின் மீதாவது அவனுக்குப் பற்று இருக்கிறதா, தெரியவில்லை!

ஒன்று மட்டும் நிச்சயம். வருங்காலங்களில் இவர்கள் எல்லாம் "மெண்டல்" லாகத்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்! அப்போது அவனே "ஏன் கட்டவில்லை?" என்று நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பான்!

தேசிய முன்னணியிடம் பேசுங்கள்!

 கெடா மந்திரி பெசாரிடமிருந்து ம.இ.கா.வுக்கு நல்லதொரு பதில் கிடைத்திருக்கிறது!

அது சரியா, தவறா என்பது பற்றி நான் இங்கு பேசவில்லை. 

மந்திரி பெசார் சொல்லுவது போல ம.இ.கா.வினருக்கு தேசிய முன்னணியிடம் பேசுகின்ற அளவுக்குத் துணிச்சல் இல்லை. அது முன்பும் இருந்ததில்லை! இனி மேலும் இருக்கப்போவதில்லை! 

பாஸ் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும் நடந்த முதல் நிகழ்ச்சி ஓர் இந்து கோயிலை உடைத்தது தான்.  அப்போது அனைவரும் "வால் வால்,  வீல் வீல்!"  என்று கத்தினோம்! 

ஆனால் இப்போது  மந்திரி பெசார், ம.இ.கா. வினருக்குக் கொடுத்த பதிலடியில் ஒன்று நமக்குப் புரிகிறது.  கோயில் உடைக்கப்பட்டதற்கு பாஸ் கட்சியினர் காரணம் அல்ல என்பது தான். 

அப்படியென்றால் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் தேசிய முன்னணியினர் தான்.  தேசிய முன்னணி என்றால் இப்போது நாம் யாரைக் குற்றம் சொல்லுவோம்? நிச்சயமாக அது ம.சீ.சா. வாக இருக்க முடியாது.  அம்னோ அல்லது ம.இ.கா. வாகத்தான் இருக்க முடியும்.

அம்னோ இப்படி செய்யுமா அல்லது ம.இ.கா. இப்படி செய்யுமா என்று பார்க்கும் போது ம.இ.கா. இப்படிச் செய்யாது என்று மேலோட்டமாக நாம் நினைத்தாலும் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

பாஸ் கட்சி மாநில ஆட்சிக்கு வரும் முன்னர் அந்த மாநிலம் பக்கத்தான் ஆட்சியில் இருந்தது.  அது ம.இ.கா. வினருக்கு வேண்டாத கட்சி. பக்காத்தான் எதிர்கட்சியினர் என்றாலும் அவர்கள் ஆட்சியில் அந்த குறிப்பிட்ட கோயில் உடைக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  ஆனால் பாஸ் கட்சியினர் பதவிக்கு வந்ததும் அது உடைக்கப்பட்டது.  பாஸ் அரசாங்கம் என்றாலும் அந்த அரசாங்கத்தில் ம.இ.கா.வினருக்கும் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ம.இ.கா.வினருக்கு அந்த கோயில் உடைப்பு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுக்க முடியாது. அது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் முறையான பேச்சுவார்த்தை மூலம் அதனை தவிர்த்திருக்கலாம்.  அதனை அவர்கள் செய்யமாட்டார்கள்! செய்ய முடியாது! 

ஒரே காரணம் தான்.  அவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. நின்றாலும் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு இருப்பது ஒரே வழி தான். பட்டம், பதவி வேண்டுமென்றால் "ஆமாம்!" போட்டுக் கொண்டே போக வேண்டியது தான். அப்படி செய்தால் செனட்டர் பதவி கிடைக்கலாம், அரசு சார்ந்த அமைப்புக்களில் பதவிகள் கிடைக்கலாம்.

இது தான் நம்மைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லுகின்ற ம.இ.கா. அரசியல்வாதிகளின் நிலை! 

மந்திரி பெசார் சொல்லுவது போல இவர்கள் தேசிய முன்னணியிடம் பேசுகின்ற அளவுக்கு இன்னும் அறிவில் வளரவில்லை!

Friday 9 October 2020

ஆமாம், என்னவாயிற்று?

 ஆமாம்,  என்னவாயிற்று? என்று தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!

அரசாங்கம் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி செய்து வருகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அது அந்த காலமோ அல்லது இந்த காலமோ  உதவிகள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் கிடைக்கின்ற உதவிகள் முழுமையாகப் பள்ளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை!

அரசாங்கத்திலிருந்து பள்ளிகளுக்குக் கிடைக்கப் பெற்ற பணத்தைக் கிடைக்க முடியாத வகையில் இடைத் தரகர்களான ம.இ.கா. தலைவர்கள் சூரையாடினர் என்பது வரலாறு!

எப்படியோ அது ஒரு சோகக் கதை.  பிரச்சனை,  அது இன்னும் தொடர்கிறது என்பது தான் இன்னும் சோகம்.  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ......?

இப்போதும் தலைவர்கள் அந்த வரலாற்றை விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்களே என்பது தான் நமக்குள்ள ஆதங்கம்/  இங்கு தலைவர்கள் என்று சொல்லும் போது அவர்களோடு கூட ஒரு சில தலைமை ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் சில்லறைகள் - இப்படி ஒரு  கூட்டு முயற்சி!  பணம் கொள்ளையடிப்பதில் மட்டும் இந்த கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படுகிறது என்பது தான் வியப்பாக இருக்கிறது! என்ன செய்வது? அவனவன் தங்களது பிள்ளைகளைச் சட்டம் படிக்க வைத்து தங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுகிறான்,   மாட்டிக் கொள்ளமல் இருக்க! 

இதில் என்ன ஆச்சரியம் என்றால் படிக்காதவனுக்குக் கூட தன் இனத்தின் மீது தன் மொழி மீதும் பற்றுடையவனாக இருக்கிறான். ஆனால் படித்த நாதாரிகளுக்கு எதுவுமே இல்லை! இனப்பற்று இல்லை!மொழிப்பற்று இல்லை!  பணப்பற்றைத் தவிர வேறு பற்று எதுவுமில்லை!

ஆனால் இந்த பணப்பற்று, என்ன தான் அள்ளி அள்ளி வைத்து வீட்டில் குவித்தாலும், அவன் வீட்டார் அவனது கடைசி காலத்தில் ஒரு முட்டாளாகத்தான் நடத்துவார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்! தப்பவே முடியாது!   தெய்வம் நின்று  தானே கொல்லும்?

பாரிசான் ஆட்சி காலத்தில் நடந்த இந்த கொள்ளைகள் பக்காத்தான் ஆட்சியில் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது! 

மீண்டும் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் இந்த கொள்ளைகள் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

அப்போது இந்த "என்னவாயிற்று?"  என்று கேட்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதை மட்டும் நம்பலாம்!

எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும்? எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு.  அந்த முடிவை பக்காத்தான் ஆட்சியில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆமாம்? என்ன ஆயிற்றூ? ஒன்றும்  ஆகவில்லை! தற்காலிக விடுமுறை, அவ்வளவு தான்!

Thursday 8 October 2020

இடைத் தேர்தல் வேண்டாமே!

 மீண்டும் ஒர் இடைத் தேர்தல் வருவதற்கான  கட்டாயம் வந்துவிட்டது!

எங்கிருந்து  மூன்றாம் அலை கொரோனா தொற்று,  மேற்கு மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதோ அதே சபாவில் இப்போது ஒரு நாடாளுமன்ற தொகுதி காலியாயிருக்கிறது. 

பத்து சாப்பி,  வாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர், லியு வூய் கியோங் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் 60 நாள்களுக்குள் தேர்தல் நடந்தாக வேண்டும் என்பது தேர்தல் விதி. அவர் கடந்த 2-ம் ததி அக்டோபர் மாதம் காலமானார்.

சட்டப்படி என்று சொல்லும் போது அந்த இடைத் தேர்தல் நடந்தாக வேண்டும்.  ஆனால் நாட்டின் சூழல் சரியாக இல்லை. கொரோனா தொற்று பரவுகின்ற வேகத்தைப் பார்க்கின்ற போது சட்டத்தை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை! 

சட்டம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ தேர்தலை நடத்த முடியாது என்பது தான் யதார்த்தம். அப்படியே நடக்க வேண்டும் என்றால் இங்கிருந்து அங்குப் போவதும், அங்கிருந்து இங்கு வருவதும் துண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. அங்கு சபாவிலும் அதே நிலைமை தான்!  அங்கேயும் போக்குவருத்துகள் தடை செய்யப்பட வேண்டும்!

தேர்தல் கூட்டங்கள் போடுவதற்கு வழியில்லை. அரசியல்வாதிகள் சுற்றுவதை நிறுத்த வேண்டும். பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது! இவைகள் எல்லாம் சமீபத்தில் நடந்தேறிய சட்டமன்ற தேர்தலிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தேர்தலா? வேண்டவே வேண்டாம் என்பது தான் நமது ஒருமித்த குரல்.   "பட்டது போது பகவானே!"  என்று சொல்லத் தோன்றுகிறது! 

சமீபத்தில் அம்னோ இளைஞர் தலைவர் கூட "அங்கு தேர்தல் வேண்டாம்   அது வாரிசான் தொகுதியாகவே இருக்கட்டும்!" என்று கூறியிருக்கிறார்.  நாம் கொஞ்சம் வித்தியாசப்படுகிறோம்.  வாரிசான் தொகுதியாகவே இருக்கட்டும் என்றால் அந்த தொகுதியில் பிரதிநிதித்துவம் இருக்காது என்பது பொருள். நாம் சொல்லுவது: வாரிசானின் தலைவரோ, செயலாளரோ அல்லது யாரோ ஒரு வாரிசான் பிரதிநிதி, தேர்தல் இன்றி,  அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக  தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அது தான் முறையான பிரதிநிதித்துவம் அந்த மக்களுக்குக் கிடைக்கும்.

தேர்தல் வேண்டாம் என்பதே நமது நிலை! தேவைப்பட்டால் சட்டத்தை மீறலாம்! மக்களின் உயிரே முக்கியம்! சட்டம் அல்ல!

Wednesday 7 October 2020

யாரை குறை சொல்லலாம்?

 அரசியல்வாதிகள் செய்கின்ற அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே போகிறது!

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல கொரோனா தொற்றிலிருந்து தேறி வந்த நம்மை திரும்பவும் நம்மை பழையநிலைக்கே இழுத்துக் கொண்டு போய்விட்டனர்.

சபா செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்களின் தேர்தலை  அங்குள்ள அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா?  இவர்கள் போய் தான் கிழிக்க வேண்டுமா!

மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை அங்கு யாரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கவில்லை!  உண்மையில் இவர்களின் தலையீட்டை அவர்கள் விரும்பவில்லை!

அமைதியாக இருந்த மாநிலத்தை மண்ணை வாரி இறைத்துவிட்டனர்!

அங்கு கோரோனா தொற்று பெரிய அளவில் இல்லாத நிலையில் இவர்கள் போய் பெரிய அளவில் அதனை பரப்பிவிட்டு அங்கிருந்து இங்கும் கொண்டு வந்து விட்டனர்!

அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்லாதீர்கள் என்று ஒரு தற்குறி புலம்புகிறது!   அப்புறம் யாரைக் குற்றம் சொல்லுவது?  உங்களுக்கு பதவி வேண்டும்! பட்டம் வேண்டும்! அதிகாரம் வேண்டும்! அனைத்தும் வேண்டும்! அத்தோடு தொற்று நோயையும் தொற்ற வைப்பீர்கள். ஆனால் உங்களை யாரும் குறை மட்டும் சொல்லக் கூடாது! காரணம் நீங்கள் மக்களுக்கு இலவசமாக தொண்டு,  சேவை செய்கிறீர்கள்!

இந்த தொற்று நோயினால் மக்கள் படுகின்ற அவதி என்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல.  வேலை இழப்பு, குடும்பங்களில் குழப்பம், மாதாந்திர தவணைகள் கட்ட முடியாத நிலை,  கார், வீடு ஏலம் போகிற நிலைமை - இவைகள் பற்றி எல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கவலை இல்லை.  அவர்கள் எப்போதும் போல ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்! மக்களைப் பற்றி கவலைப்பட  அவர்களுக்கு நேரமில்லை!

இப்போது நாம் சந்திக்கும் இந்த மூன்றாம் அலை கொரோனா தொற்று என்பது நம்மை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே நாம் இரண்டு மூன்று மாதங்கள் வீட்டிலேயே   அடைந்து கிடைந்தோம்.  அதுவே பெரிய தண்டனை.  மீண்டும் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால் நாம் என்ன அதனை வரவேற்கவா முடியும்?

அதனால் தான் நமக்கு இந்த அரசியவாதிகள் மேல் கடுப்பு ஏற்படுகிறது.கோபம் ஏற்படுகிறது. வசைச் சொற்களால் வசை பாடத்  தோன்றுகிறது!

இதில் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என்கிறார் ஓர் அரசியல்வாதி. பின் யாரைக் குறை சொல்லுவது?

அனைத்துக்கும் காரணம் இந்த அரசியல்வாதிகள் தான்! பொறுப்பற்றவர்களைப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிய வேண்டும்!

கொரோனா தொற்று மீண்டும் பரவுவதற்குக் காரணம் அரசியல்வாதிகளே! அவர்களே தான்! மறுப்பார் இல்லை!

Tuesday 6 October 2020

வாக்காளர்களா? கிளைகளா?

 சமீபத்தில் ம.இ.கா. தலைவர் ஒருவர் ம.இ.கா.கிளைத் தலைவர்களுக்கு ஓர் அறிவுரையைக் கொடுத்துள்ளார்.

"கிளைகளை அமைப்பதில் மட்டும் எப்படி ஆர்வம் காட்டுகிறீர்களோ அதே போல கிளைகளில் உள்ள அங்கத்தினர்களை வாக்காளர்களாக பதியவும் ஆர்வம் காட்டுங்கள்" என்பதுதான் அவரின் செய்தி.

நல்ல செய்தி தான். ஒரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு கிளையிலும்  இருநூறு, முன்னூறு   என்று அங்கத்தினர்கள் இருந்தனர். அப்போது நாங்கள் வீடு வீடாகச் சென்று அவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தோம். அப்போது அந்த வசதி இருந்தது. இப்போது அந்தப் பணியைத் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்டது.

ஆனாலும் இப்போது ஐம்பது பேர் இருந்தால் ஒரு கிளையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.  அதிலும் அவர்களில் பெரும்பாலோர் நமது சொந்தங்கள், சுற்றங்கள். அதனால் பணி எளிது. தேவை எல்லாம் அவர்களைக் கண்காணித்து வாக்காளர்களாக பதிந்து விட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வளவு தான்!

நான் ஆதரிக்கும் எதிர்கட்சிகள் அந்த வேலையைச் சரியாகவே செய்கின்றன. ஆகட்டும் பார்க்கலாம் என்றிருப்பதில்லை! அது அவர்களின் கடமையாக எடுத்துக் கொண்டு செய்வார்கள்.

இந்த நேரத்தில் இந்த கருத்தைச் சொன்ன தலைவருக்கு எனது ஆலோசனை ஒன்று உண்டு. 

கிளைத் தலைவர்களுக்குச் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான்: "எந்த கிளைகள் தனது அங்கத்தினர்களை நூறு விழுக்காடு வாக்காளர்களாக பதிவு செய்யவில்லையோ அந்த கிளைகளின் பதிவுகள் ரத்து செய்யப்படும்!" என்று சொன்னால் போதும் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தனது வேலைகளைச் செய்வான்!

என்ன செய்வது? அக்கறை காட்ட வேண்டியவர்கள் அக்கறை காட்டவில்லை என்பது தானே குற்றச்சாட்டு! இவர்கள் மட்டும் என்ன? நக்கீரன் பரம்பரையா!

எப்படியிருப்பினும் ம.இ.கா. கிளைகளுக்கு நல்லதொரு புத்திமதியைக் கொடுத்திருக்கிறார் தலைவர். நடக்க வேண்டியது நடக்க வேண்டும். சாக்கு போக்குகள் தேவை இல்லை!

நல்லது நடந்தால் சரி! கிளைகளை விட வாக்காளர்கள் தான் நாட்டுக்கு முக்கியம்! நடக்கும் என எதிர்பார்க்கிறோம்!

Monday 5 October 2020

இது என்ன முட்டாள் தனம்?

 கொரோனா தொற்று நோய் சமபந்தப்பட்ட  தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்திற்கு பக்காத்தான் ஆளும் மாநிலங்கள் அழைக்கப்படவில்லை என்பது செய்தி!

உண்மையில் இது நமக்கு வியப்பைத் தருகிறது.  தங்களுக்கு எதிரான கட்சிகள் மாநிலங்களில்  ஆட்சி செய்கின்றன என்பதற்காக அந்த மாநிலங்களைப் புறக்கணிப்பது ஒரு சரியான அணுகுமுறை அல்ல என்பது தான் நமது நிலை.

பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் போன்ற மாநிலங்கள் அழைக்கப்படவில்லை. இன்றைய நிலையில் அவை எதிர்கட்சிகளின் மாநிலங்கள். 

அரசியல் ரீதியில் அவை எதிர்கட்சி மாநிலங்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். 

இப்போது தொற்று நோய் அனைத்து மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறக்கிறது.  தொற்று நோய்க்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பேதங்கள் இல்லை. பேதம் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தொற்றுக்கு இல்லை.  

இது போன்ற சிறிய விஷயத்தைக் கூட தெரியாத அரசியல்வாதிகள் நம்மை ஆளுவதற்கு நாம் இன்னும் அவர்களை விட்டு வைத்திருக்கிறோம்!

இந்த அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக நினைக்கின்றனர் என்பதைத் தவிர வேறு என்ன நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.  நோய் என்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றா பார்த்துக் கொண்டிருக்கிறது?  அது எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லா வகையிலும் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது!

ஐயோ பாவமே!  அரசியல் என்றால் என்ன,  நோய் என்றால் என்ன என்பது கூட அறியாத அசிங்கங்கள் எல்லாம் நாட்டை ஆளுவது மக்களுக்கு எத்துணைப் பெரிய அழிவை உண்டாக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களால் மக்களுக்கு என்ன நல்லது நடந்து விடப் போகிறது?

இறைவா! நாட்டை  ஆளுபவர்களுக்கு  சராசரி அறிவு கூட இல்லை என்றால் நாம் என்ன செய்ய?  மக்களின் நலனைப் பற்றி அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் ஏன் இன்னும்  இருக்க வேண்டும்?  கொரோனா இவர்களை எப்போது கொண்டு போகும்!

இது முட்டாள்களின் முட்டாள் தனம்! அவ்வளவு தான்!

Saturday 3 October 2020

இலவு காத்த கிளி தானா?

 ஐ.பி.எப். கட்சி தேர்தலில்  போட்டியிடுவது பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை! 

ம.இ.கா. வே துணிந்து போட்டியிடுவோம் என்று சொல்லும் போது ஐ.பி.எப். சொன்னால் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை!

ஆனால் ம.இ.கா.விற்கு அவர்களின் கூட்டணி கட்சிகளிடையே இன்னும் கொஞ்ச  நஞ்ச  செல்வாக்கு உண்டு. அவர்களால் ம.இ.கா.வை உதறித் தள்ளிவிடவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது! காரணம் எல்லாக் கட்சிகளுமே, மக்களின் செல்வாக்கைப் பொறுத்தவரை,  ஏறக்குறைய சமநிலையில் தான் இருக்கின்றன!

ஐ.பி.எப். கட்சிக்கு செல்வாக்கு என்று எதுவும் இல்லை. மாநில மந்திரிபெசார்களிடம் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம் என்பதால் அவர் மூலம் காரியம் சாதிக்க நினைக்கின்றனர். ஆனால் மந்திரி பெசார்களுக்கு ம.இ.கா. வினரிடம் அவர்களின் அதிகாரத்தைக் காட்ட முடியாது! அது அவர்களின் கூட்டணிக்கு விரோதமானது.

ஐ.பி.எப். கட்சி எந்த வகையில் வலிமையாய் உள்ளது?  ஒரு வகையிலும் இல்லை! ம,இ,கா, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஒழிய  அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. ம.இ.கா. மூலம் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கும் என்பதும் சாத்தியமில்லை. 

தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அவர்கள் ம.இ.கா.வுடன் இணைய வேண்டும். அதுவும் சாத்தியமில்லை!  இங்குத் தலைவனாக இருந்துவிட்டு அங்குத் தொண்டனாகப் போக அது மானப் பிரச்சனையாகி விடும்! தொடர்ந்து இங்குத் தலைவனாக இருந்தால் ஒரு வேளை செனட்டர் ஆகக் கூடிய வாய்ப்புண்டு.

அரசியலில் இருந்தால் "நமக்கு என்ன கிடைக்கும்" என்பது ஒன்று தான் இன்றைய இலக்கு!  சேவை? தொண்டு? இதெல்லாம் எனது வயிறு நிறைந்த பிறகு என்பான் இன்றைய அரசியல்வாதி!

நமது சமுதாயத்தினர் எந்த அரசியல்வாதியையும் நம்ப வேண்டாம் என்பது தான் எனது வேண்டுகோள். நம்மைப் பிரதிநிதிப்பதாக சொல்லுபவர்கள் பெரும்பாலும் நம்மை இளிச்சவாயனாகத் தான் பார்க்கிறார்கள்! மறந்து விடாதீர்கள்!

ஐ.பி.எப். நிலை தான் என்ன? இலவு காத்த கிளி கதைதான்!

யார் சொல்லுவதை ஏற்பது?

 இப்போது நமக்கு ஒரு கேள்வி. அது கொஞ்சம் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது!

அம்னோ முதியவர்கள் உடனே தேர்தல் வைக்க வேண்டும் என்று பிரதமர் முகைதீனிடம் கூப்பாடு போடுகின்றனர். அது ஒரு பக்கம்.

அம்னோ இளைஞர்கள்,   பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவி ஏற்பதை தள்ளிப்போட வேண்டும் என்று அறிக்கை விடுகின்றனர்.  இது ஒரு பக்கம்.

இப்போது அம்னோவின் நிலைப்பாடு என்ன?  

தீடீர் தேர்தல் வேண்டுமா, வேண்டாமா?  இது ஒரு கேள்வி. தேர்தல் வேண்டாம் என்று சொல்லுவதற்குக் கொஞ்சம் வலுவான காரணங்கள் உண்டு.  அது கடவுள் மேல் உள்ள பயம் என்று சொல்லி விட முடியாது. கொரோனாவின் மேல் உள்ள பயம்! இன்று மனிதர்களுக்குக் கொரோனாவின் மேல் உள்ள பயம் போன்று வேறு யாரிடமும் கிடையாது!

தீடீர் தேர்தல் வைத்தால் பிரச்சாரம் செய்ய இயலாது. நாடெங்கும் சுற்றி வர முடியாது. மேலும் கொரோனா தொற்று மூலம் எத்தனை பேர் மருத்துவமனையில் சுருண்டு கிடப்பார்களோ! எத்தனை பேர் போய்ச் சேர்வார்களோ!  தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்குமா என்கிற பயம் வேறு! இப்படித்தான் அம்னோ பெருந்தலைகள் சிந்திக்கின்றனர்1 

இவ்வளவுக்கும் காரணம் சபா மாநிலத் தேர்தல். சின்னப் பிள்ளைகள் என்றால் "சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை!" என்று காதைப் பிடித்து திருகலாம்!  இவர்களை என்ன செய்ய முடியும்! வளர்ந்து விட்ட பிள்ளைகள்!  கோடி கோடியாய் கொள்ளையடித்து வளர்ந்து விட்ட பிள்ளைகள்!  இன்னும் ஆசை அடங்கவில்லை! அதனால் தான் இந்த சபா தேர்தல்!

அம்னோ இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்?  அவர்கள் ஒன்றும் நினைக்கவில்லை. பெரியவர்கள் செய்ய முடியாததை இவர்கள் மூலம் செய்ய நினைக்கிறார்கள். அவ்வளவு தான்! அன்வார் இப்ராகிமை இப்போது பதவி ஏற்க வேண்டாம் என்கிறார்கள். பதவி ஏற்றால் அவர்களுடைய கோட்டைகள் அனைத்தும் சரிந்து விடும்!  பதவி ஏற்காமல் இன்னும் சில மாதங்கள் அல்லது இன்னும் சில வாரங்கள் இழுத்தடித்தால் அதற்குள் அவர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள்!  தேர்தல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! எல்லாமே சுயநலம் தான்! என்ன செய்வது? அது தான் அரசியல்!

இப்போது  யார் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது?  தேர்தல் வேண்டாம். காரணம் கொரோனா தொற்று நம்மைச் சுற்றி வருகிறது! அம்னோ சொல்வது சரி. புத்ரா ஜெயா கைப்பற்றுவதை அன்வார் ஒத்தி வைக்க வேண்டும். அம்னோ இளைஞர் சொல்வது சரியல்ல. அது ஒன்றும் மேடை போட்டு, கனல் தெறிக்க பேச ஒன்றுமில்லை.  அமைதியாக உள் அரங்கத்தில் செய்யப்படுகின்ற சில சாங்கியங்கள்.  

பிரதமர் மாற்றம் நிகழ வேண்டும்! அதுவே சரி!

ஓநாய் அழுகிறது!

 ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுததாம் என்பதாக ஒரு ஓநாய் பழமொழி!

அம்னோ இளைஞர் தலைவர் இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார் போல!  

சபா-வில் நடந்த தேர்தலையே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனாலும்  தேர்தல் நடந்தது. அதுவும் அரைகுறையான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது!  தேர்தலில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்பட்டதாக இப்போது செய்திகள் வெளியாகின்றன! 

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  கொரோனா தொற்று இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாம் அரசியல்வாதிகள் செய்த கொடூரங்கள்! சபா தேர்தல் கொண்டு வந்த சீதனங்கள்!

இப்போது தான் அம்னோ இளைஞர் தலைவர் காணாததைக் கண்டு விட்டது போல் துள்ளிக் குதித்திருக்கிறார்! 

ஆமாம், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டத்தை அன்வார் ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை! தேர்தலை இப்போதே வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை!  காரணம் அவர்களுக்குத் தீடீர் தேர்தல் தான் முக்கியம் என்பதாக ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்! கொரோனா வந்தால் எத்தனை வேட்பாளர்கள் அதில் சிக்குவார்களோ என்கிற பயம் இப்போது தான் வந்திருக்கிறது!

கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதனை நாம் விரும்பவில்லை.

ஆனால் அதனை அம்னோ இளைஞர் தலைவர் சொல்லுகிறார் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது!

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டம் என்றால் பெரிய புரட்சி எல்லாம் ஏற்படப்போவதில்லை! ஆயிரக்கணக்கான மக்கள் கூடப் போவதில்லை! எல்லாம் உள் அரங்கத்தில் நடக்கப்போகிற சடங்குகள். அதனை ஏதோ ஒரு மாபெரும் நிகழ்வாக காட்டிக் கொள்ள அவசியமில்லை. இந்த கொரோனா காலத்தில் பதவியேற்பை மிக எளிமையாக செய்தாலே போதும்.  

நிலையற்ற ஓர் அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். நல்லதொரு வழிகாட்டுதல் இன்றி நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது! பயமுறுத்தல் நாடகம் தொடர்கிறது.  பிரதமர் முகைதீன் தடுமாறுகிறார்! எப்படி அரசாங்கம் இயந்திரம் சுமுகமாக இயங்கும்?

ஆடு நனையட்டும்! ஓநாய் அழுவட்டும்!  மாற்றம் நிகழட்டும்!

Friday 2 October 2020

குழப்பத்தில் இருக்கிறாரோ!

 சமீபகாலமாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்!

அவர் கடைசியாக அன்வார் இப்ராகிமைப் பற்றிப் பேசியிருப்பதைப் பார்க்கின்ற போது கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் முன்னும் பின்னும் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது!

அன்வார் சிறையிலிருந்து வேளியான பின்னர் தன்னைச் சந்திக்க வரவில்லை என்று கூறியிருப்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை!  இதிலும் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எத்தனை முறை அன்வார் அவரைச் சந்தித்தார் என்கிற சரியான கணக்கு நம்மிடம் இல்லை. ஆனால் அவர் சந்தித்த போதெல்லாம் அந்த சந்திப்பு பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின என்பதை நாம் அறிவோம்.

அன்வார் ஒரு நன்றி கெட்ட மனிதர் என்பதாகவே டாக்டர்  மகாதிர் சொல்லி வருகிறார் என்றே நான் நினைக்கிறேன். இவருக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பது நமக்குத் தெரியும்.

ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரியும்.  அன்வார் இப்ராகிம், டாக்டர் மகாதிருக்கு தொடர்ந்தாற் போல மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்தவர். அன்வாருக்கு ஏற்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் டாக்டர் மகாதீரே காரணம் என்பது மக்களுக்குத் தெரியும்.

இருப்பினும்,  தனது பிரச்சனைகளுக்கு, மகாதீரே காரணம் என்று தெரிந்தும்  சென்ற தேர்தலில் அவருடன் கைகோர்த்தவர் அன்வார். அதை நாம் மறந்து விட முடியாது. ஒன்றா, இரண்டா எத்துணைப் பிரச்சனைகளை டாக்டர் மகாதீர் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.  அப்படி இருந்தும் கூட நாட்டின் நலன் கருதி அன்வார் தனது ஒத்துழுப்பை அவருக்குக் கொடுத்திருக்கிறார் என்பது நாடறியும்.

இந்த நிலையில் டாக்டர் மகாதிர் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி  அன்வாரை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருப்பது நமக்கு வியப்பைக் கொடுக்கிறது. 

இன்றைய அரசியல் குழப்பத்துக்குக் காரண கர்த்தாவே டாக்டர் மகாதிர் தான். தனது குற்றத்தை மறைக்க யார் யாரையோ இப்போது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்! 

சென்றப் பொதுத் தேர்தலின் போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி டாக்டர் மகாதிர்  செயல்பட்டிருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்க நியாயம் இல்லை.  அவர் அப்படி செய்யவில்லை. முடிந்தவரை அவர் இழுத்துக் கொண்டே போனார். பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கும் நோக்கம் அவரிடம் அறவே இல்லை என்பது பிறகு தான் தெரிந்தது.

அப்போது ஏற்பட்ட  குழப்பத்தில் பதவியை இழந்தார்!  எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன.  பதவியை இழந்த பின்னர் இப்போது ஏதேதோ சொல்லிக் கொண்டு புலம்புகிறார்!

என்ன செய்வது?  யாரையும் குற்றம் சொல்லுவதில் புண்ணியமில்லை. எல்லாம் கை மீறிப் போய்விட்டன!

இப்போது டாக்டர் மகாதிர் என்ன செய்யலாம்?  ஒன்றுமே செய்ய வேண்டாம்! அவர் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது! யாரும் அவரைச் சட்டைச் செய்யப் போவதில்லை!  ஒரு வயதானவரின் உளறல் என்பதைத்  தவிர யாரும் அவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

கௌரவமான முறையில்  அவர் விலகி இருக்கலாம்.  அது நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. 

அவர் பேசாமல் இருந்தாலே போதும்! அது தான் அவருக்கு மரியாதை! அவருக்குக் குழப்பமே வேண்டாம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவில் எந்த குழப்பமும் இருக்காது!

Thursday 1 October 2020

ஏன் இந்த குழப்பம்?

 நம் நாட்டில் ஏதோ ஓரு மகா பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சில அரசியல்வாதிகள்!

ஒரு பக்கம் உடனடித் தேர்தல் நடத்த வேண்டுமென்று அழுகுரல்!  அவர்களுக்குத் தான் இப்போது வய்ற்றுவலி அதனால் இப்போதே "தேர்தல், தேர்தல்" என்று அமர்க்களப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இப்போது தேர்தல் வேண்டாம். காரணம் கொரோனா தொற்று நோய். அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எச்சரிக்கை ஒரு பக்கம். 

இன்னொரு பக்கம் தீடீர்த் தேர்தல் நடத்தி கோடிக் கணக்கில் பணத்தை வீணடிக்க வேண்டுமா என்கிற குரல் எங்கள் பக்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது! 

தேர்தல் நடத்த வேண்டுமென்று யார் அதிக அக்கறை காட்டுகிறார்கள்?  சொல்ல வேண்டியதே இல்லை! சாட்சாத் அம்னோ கட்சியினர் தான்! இப்போது அவர்களுக்கு நல்ல நேரம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்! கொரோனா பற்றி அவர்கள் கவலைப்படவில்லை!  கோடிக்கணக்கில் பணம் செலவு ஆகிறதே என்கிற கவலையில்லை!

அப்படி அவசியம் நடத்தித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் இன்றைய நிலையில் அம்னோ தரப்பு தான் கொள்ளையடித்து பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள்! அவர்களின் முன்னாள் தலைவரிடம் இல்லாத பணமா? கொண்டு வந்து கொட்டலாமே!  கொரோனா வந்தால் என்ன, மக்கள் செத்தால் என்ன?

மக்களைப் பற்றி அம்னோ அல்லது ம.இ.கா.வோ எந்த காலத்தில் கவலைப் பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியெல்லாம் எழுவது சகஜம் தானே!  ஆனால் ஒன்று ம.இ.காவினர் இப்போது தேர்தல் வேண்டாமென்று தான் சொல்லி வருகின்றனர்.  அவர்களுக்கு இப்போது நேரம் சரியில்லை. அப்படியே அவர்கள் அதனை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! 

சமீபத்தில் சபா தேர்தல் மூலம் மேற்கு மலேசியாவில் இன்னும் பலருக்குக் கொரோனா தொற்று பரவிக் கொண்டு வருகிறது. மக்கள் பலர் தங்களது வேலைகளை இழந்து வருகின்றனர். பிழைப்புக்கே பிரச்சனை.

இந்த நேரத்தில் தேர்தலா முக்கியம்? தேர்தல் முக்கியம் என்று சொல்லுபவர்கள் வயிற்றை எப்போதும்,  எந்நேரமும் நிரப்பி வைத்திருப்பவர்கள்! அவர்களுக்காக தேர்தலா? மக்களுக்காக தேர்தலா?

தேர்தல் வேண்டாம்!  இது சரியான தருணம் அல்ல! மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்! அது தான் வேண்டும்!

அரசியல்வாதிகளே கொஞ்சம் பொறுங்கள்.  காலம் வரும் அப்போது உங்களது வீர தீரத்தைக் காட்டுங்கள்!  இப்போது வேண்டாம்!