Saturday 24 August 2019

பேரணி தேவையா...?

நாம் விரும்பாத சில நிகழ்வுகள் நாட்டில் நடக்கும் போது நாம் அமைதி ஊர்வலம் நடத்துகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுகிறோம். இன்னும் பெரிய அலவில் பேரணி நடத்துகிறோம். 

ஆனாலும் காவல்துறை ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குவதில்லை. எல்லாருமே அமைதியான முறையில் உர்வலம் நடத்த வேண்டுமென விரும்புகிறோம். அப்படியே செய்யவும் செய்கிறோம்.  ஆனால் ஊர்வலம் நடைபெறுவதை விரும்பாத எதிர்தரப்பு இடையில் புகுந்து அமைதி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றியமைக்கும் சாத்தியம் எதிர்தரப்பினருக்கு உண்டு. அப்படித்தான் பெரும்பாலான அமைதி ஊர்வலங்கள்  கலவரத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. 

இஸ்லாமிய மத போதகர்,ஜாகிர் நாயக்கிற்கு எதிரான பேரணி சமீபத்தில் தலை நகரில் நடந்தது சரியானதா என்று யோசிக்க வேண்டும். அவருக்கு எதிராக பல கோணங்களில் நமது எதிர்ப்பைத் தெரிவித்து விட்டோம். உண்மையைச் சொன்னால் அனைத்துத் தரப்பு மலேசியர்களும் தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்குக் கொண்டு சேர்த்து விட்டனர்.

ஆனால் ஒரு தரப்பு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.  அது அம்னோவும், பாஸ் கட்சியும்,அவர்களை ஆதரிக்கும் அரசு சாரா இயக்கங்களும்  அடக்கமாக இருக்கின்றனர் என்றாலே அது நல்லதற்கல்ல! அவர்களும் ஏதோ திட்டங்கள் வைத்திருக்கின்றனர்.

காவல்துறை விசாரணையில் அவரைப்பற்றி எதுவும்  நல்லதாக வரப் போவதில்லை.  அந்த விசாரணையின் முடிவுகள்  அனைத்தும் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே ஜாகிர் நாயக் மேல் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்  என்று தெரியவரும்.

நாம் நமது எதிர்ப்பை பல வழிகளில் காட்டி விட்டோம். ஆனாலும் பிரதமர் டாக்டர் மகாதிர்,  ஜாகிர் நாயக் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதை விரும்பவில்லை!  ஜாகிர் நாயக் குற்றவாளி என்றாலும் அவர் நாட்டிலேயே தங்குவதற்கு அனுமதி வழங்கப்படலாம்! 

சட்டத்துறை ஜாகிரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தால்  அப்போது தான் இந்த எதிர்தரப்பினர் என்ன நிலை எடுப்பர் என்று சொல்ல முடியாது. ஜாகிரை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாம் பேரணி நடத்தினோம்.  இப்போது அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது என்று பேரணி நடத்துவார்கள்! நம்முடையது அமைதி பேரணி.  அவர்களோ பேரணி என்னும் பெயரில் இனத் துவேஷத்தைக் கிளப்புவார்கள்! 

பேரணிகள் யாருக்கும் நல்லதல்ல.  பிரச்சனைகளைக் களைய அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் பேரணி தேவையில்லை. பேரணி என்பது நமக்கு மட்டும் தானா?  சீனர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்கள் ஆக்ககரமான முறையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.  நாமோ, நமது இயக்கங்களுக்கு செய்ய ஒன்றுமில்லையே என்று பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

பேரணிகள் தேவை இல்லை என்பதே எனது கருத்து! பேச்சு வர்த்தையின் மூலமே  சிறந்த தீர்வைக் காண முடியும்!

No comments:

Post a Comment