Friday 1 July 2016

அப்பாடா! அடையாள அட்டை கிடைத்தது!



நமது நாட்டில் அடையாள அட்டைக் கிடைப்பது என்பது சாதாராண விஷயம் அல்ல!

இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து பேரன், பேர்த்திகள் எடுத்தவர்கள் கூட கடைசிவரை அடையாள அட்டை இல்லாமலேயே பலர் இறந்து போனார்கள்! அந்த அளவுக்குக் கடினமான நடைமுறைகள் நடப்பில் உள்ளன.

இப்போது ஒரு பள்ளி மாணவிக்கு அடையாள அட்டைக் கிடைத்திருப்பது அவருக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது. தனது 12-ம் வயதிலிருந்து முயற்சி செய்து இப்போது தனது 18-வது வயதில் அவருக்கு அடையாள அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளியான  எஸ்..பி.எம். தேர்வில் 10ஏ க்கள் பெற்றிருப்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மாணவியின் பெயர் .வோங் நெய் சின். சீனத் தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு இந்தியப் பெண். அவரின் இந்தியப் பெற்றோர்கள் பிறந்த ஒரு மாதத்திலேயே அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு போனவர்கள் போனவர்கள்தான்! குழந்தையின் பிறப்பிதழ் இல்லாத நிலையில் பலவித போரட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் அவர்களுக்கு ஒரு தீர்வு பிறந்திருக்கிறது! வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் பிறந்து ஒரு மாதத்தில் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தை - அடையாள அட்டைக்காக - எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.  காரணம் தேசிய மொழியில் தேர்ச்சி பெறவில்லையாம். அந்தப் பெண் பள்ளிப்படிப்பை முடித்து, பல்கலைக்கழகம் போய் பட்டமும் பெற்று வந்துவிட்டார். ஒரு மாதக் குழந்தையாய் எப்போது வந்தாரோ அதிலிரிந்து வெளி நாடுகளுக்கு - ஏன் அருகிலிருக்கும் சிங்கபூருக்குக் கூட - அவரால் போக முடியவில்லை. அதனைக் காரணமாக வைத்து தனக்குக் குடியுரிமை கொடுக்கமாட்டார்களோ என்பதனால் அவர் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர்த்தார். பட்டதாரியானப் பின்னரும் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல். ஆனாலும் அதன் பின்னர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  அதன் பின்னரே பல முயற்சிகளுக்குப் பின் அவருக்குக் குடியுரிமைக் கொடுக்கப்பபட்டது எனத் தெரிந்து கொண்டேன்.

குடியுரிமை, அடையாள அட்டை என்பதெல்லாம் இந்தியர்களுக்குச் சாதாரண விஷயமல்ல. அதனால் எச்சரிக்கையாய் இருங்கள்!

வோங் நெய் சின்னுக்கு மீண்டும் நமது வாழ்த்துகள்!


3 comments:

  1. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
    நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
    வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
    உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
    சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
    நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
    குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
    எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

    ReplyDelete
  2. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
    நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
    வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
    உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
    சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
    நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
    குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
    எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

    ReplyDelete