நூறு மீட்டரைச் சுருக்கி எழுபது மீட்டராக மாற்றியமைத்த ம.இ.கா.வினர் என்ற செய்தியைப் படித்த போது வேறொன்றும் எனது ஞாபத்திற்கு வந்தது!
"ஆமாம்! நாங்கள் எல்லாம் நூறு மீட்டர் ஓடி இன்னும் திருடனாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்! எப்போது நூறு மீட்டர் ஓடினோமோ, எங்களது கெட்ட நேரம், இன்னும் அகப்படாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்!"
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். கொள்ளையடிப்பதற்கு வேறொன்றும் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்தையும் விட்டு வைக்கவில்லை! கல்வியுலும் கை வைத்தார்கள்! என்ன சொல்லுவது! பணத்திற்காக எதனையும் விட்டுக் கொடுக்கத் தயார்! அப்புறம் என்ன கல்வி! கத்தரிக்காய்!
பொதுவாக கல்வி என்றால் அதில் கை வைக்க யாராக இருந்தாலும் பயப்படுவார்கள். காரணம் அது கல்வி. கல்வி என்றால் அது சரஸ்வதி என்பது நமது மரபு.
சரி! அந்தக் கல்வியில் கை வைத்தவன் யார்? எல்லாம் அரைகுறைகள்! ஆனால் பதவியில் உள்ளவர்கள். அவனது பதவி எல்லாவற்றிலும் அவனை கை வைக்கச் சொல்லுகிறது. இவன் படித்ததே அரைகுறை. அவன் பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பைப் படிக்க வேண்டுமென்று அப்பன் பிள்ளைக்காகத் திருடுகிறானாம்! பையன் எப்படிப் படிப்பான்? அவனும் எப்படித் திருடுவது என்று தானே படிப்பான்! அவன் படித்தாலும் கொள்ளையடிப்பது எப்படி என்று தானே அவன் மூளையும் வேலை செய்யும்! காரணம் அவன் அப்பன் அப்படித் தானே மகனை வளர்த்திருப்பான்!
ஓ! இந்தச் சமுதாயத் துரோகிகளை நினைத்தாலே நமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒன்றா! இரண்டா! எத்தனை துரோகச் செயல்கள்! இதென்ன! கொள்ளையடிப்பதையே பரம்பரைத் தொழிலாகக் கொண்டவர்களா! தமிழர்களிலேயே கொள்ளைக்காரர்கள் என்பதாக ஏதேனும் ஒரு சமூகம் இருக்கிறதா? அல்லது தமிழர்களிடையே வேறு ஏதேனும் ஒட்டுக்கட்டி மாற்றப்பட்டிருக்கிறதா! ஒன்றுமே புரியவில்லை!
புலம்புவது நாமாக இருந்தாலும் கலங்குவது நாமாக இல்லை! தீய சக்திகளை ஒழித்தே தீருவோம்!
No comments:
Post a Comment