Saturday 30 March 2019

வறுமை! வறுமை!

நம் இந்திய சமூகத்தில் என்னன்னவோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறோம்.  அதிலே ஒன்று வறுமை! வறுமை! வறுமை! 

நாட்டில் மூன்றாவது பெரிய சமூகம். ஆனால் வறுமை என்று வரும் போது  நாம் தான் முதல் நிலையில் நிற்கிறோம்! பத்திரிக்கைகளைப்  படிக்கின்ற போது பல பல குறைபாடுகள்! என்னென்று சொல்லுவது. எதனை முன் நிறுத்துவது?

அப்பா இல்லாத குடும்பம், அம்மா இல்லாத குடும்பம்,  பாட்டியிடம் வளரும் குழந்தைகள், அப்பா அம்மாவுக்கு இனிப்பு நீர், பள்ளிக்குச் செல்ல முடியாத குழைந்தைகள்  - இப்படி ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம் பட்டினியால் வாடுகிறது என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தவுடன் அரசியல் கட்சிகள் அல்லது அரசு சாரா இயக்கங்கள் பல ஓடிச் சென்று அவர்களுக்கு உதவுகின்றன.  இதிலும் ஒரு அதிசயம்.  ம.இ.கா. வினர் கூட நாங்களும் உதவி செய்கிறோம் என்று பத்திரிக்கைகளில் படத்தைப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்!

 உதவி செய்கிறவர்கள் யாராக இருந்தாலும்அவர்களை நாம் ஒதுக்க வேண்டாம்.   வரவேற்போம்! ஆனால் இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு நாள் சாப்பாட்டுக்கு உதவி, ஒரு மாத சாப்பாட்டுக்கு உதவி என்கிற ரீதியில் இந்த உதவிகள் அமையக் கூடாது என்பது தான். இவர்களுக்கெல்லாம் ஓரு நிரந்தரத் தீர்வு தேவை. அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். அவர்களுக்குக் குடியிருக்க ஒர் இடம் வேண்டும். அவர்களுக்கொரு வேலை வேண்டும். தினசரி சாப்பாட்டுக்கு  வழி காட்ட வேண்டும்.

அவர்களுடைய தேவைகள் எல்லாம்  அரைகுறையாக அமையக் கூடாது. ஒரு நிரந்தரத் தீர்வு.  அவர்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்கோ ஒரு தப்பு நடந்திருக்கிறது. அதனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது அவர்களுடைய தேவைகள் எல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வு, அதன் மூலம் அந்தக் குடும்பங்கள் தலை நிமிர வேண்டும்.

இது ஒரு நாள் பிரச்சனையல்ல. நீண்ட நாள் பிரச்சனை.  அவர்கள் வாழ்வதற்கு வழி காட்டினால் போதும். அவர்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும். 

நாம் பிச்சை எடுக்கும் சமூகம் அல்ல. சொம்பேறி சமூகம் அல்ல. உழைக்கும் வர்க்கும். யாரோ செய்கின்ற தவறுகளினால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது குழைந்தைகளின் வறுமை! வறுமை ஒழிப்போம்!  வற்றாத ஜீவ நதியென வாழ்வோம்!

No comments:

Post a Comment