Sunday 1 September 2019

பக்காத்தான் ஆதரவு சரிகிறதா...?

இன்றைய நடப்பு பக்காத்தான் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு சரிகிறதா என்கிற கேளவி அடிக்கடி எழுப்பப்படுகிறது. 

பொதுவாக பார்க்கும் போது மக்களின் எண்ணங்கள் பக்காத்தான் அரசாங்கத்தின் மீது சரியாக தீர்மானிக்க முடியாதபடி தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 

காரணம் இவர்கள் சொன்னது போல்  செயல்படவில்லை என்னும் குற்றச் சாட்டு தான் இன்னும் இருக்கிறது.  அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட நிதி நெருக்கடி பற்றி  மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது அரசாங்கத்தின் வேலை. அதற்காக மக்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்னும் எண்ணம் தான்  மக்களிடையே  நிலவுகிறது.

விலைவாசி ஏற்றத்தைத் தான் மக்கள்  பெரிய சுமையாகக் கருதுகிறார்கள்.   பெரிய அளவில் ஏற்றம் இல்லை என்றாலும் விலைவாசி குறையவில்லை  என்பது தான் அரசாங்கத்தின் மேல் உள்ள குற்றச்சாட்டு. பெட் ரோல் விலை கட்டுப்பாட்டில் உள்ளதால்  விலைவாசி ஏற்றம் என்பதும் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போதுள்ள  நாட்டிலுள்ள பல பலவீனங்களுக்கும் டாக்டர் மகாதிர் தான் காரணம் என்பதாக சாதாரணமாக  மக்களிடையே  பேசப்படுகிறது என்பதும் உண்மை தான். 

சென்ற தேர்தலின் போது நாட்டை காப்பாற்ற வந்த மாமனிதர் என்று நினைத்த நினைப்பெல்லாம் போய் இப்போது நாட்டிற்கு வந்த சாபக்கேடு என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது!

ஒரு பிரச்சனையையும் அவரால் தீர்க்க முடியவில்லை. பழையபடி அவர் முருங்கை மரம் ஏறி விட்டாரோ என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!  அவர் போக்கு ஏதோ பழைய அம்னோ ஆட்சியைக் கொண்டு வருகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது! முன்னாள் ஆட்சியின் நீட்சி தான் இது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. இந்திய வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. ஜாகிர் நாயக் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு அனுப்பினால் நீதி கிடைக்காது என்கிறார் அவர்!  வர்த்தகர் ஜோ லோவை மலேசியாக்குக் கொண்டு வர முடியவில்லை. மலேசியாவில் நீதி கிடைக்காது என்கிறார் இவர்!

நாடு சரியான பாதையில் செல்லுகிறதா என்று கேட்டால் "இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  பிரச்சனைகள் தீர வேண்டுமானால் டாக்டர் மகாதிர் பதவி விலக வேண்டும்.  அவர் விலகுவதாகத் தெரியவில்லை. ஏதோ தமாஷாக காலங் க்டத்திக் கொண்டிருக்கிறார்!

மக்கள் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டுமானால் டாக்டர் மகாதீர் அவரது பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும்.  வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை! டாக்டர் மகாதிர் வயது மூப்பின் காரணமாக  சரியாக செயல்பட முடியவில்லையோ என்று தான் நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

மக்களின் ஆதரவு சரியும் முன்னே இந்த பதவி ஒப்படைப்பு நடைபெற வேண்டும்.  ஆனால் டாக்டர் மகாதீர் என்ன நினைக்கிறாரோ! ஆண்டவனுக்கே வெளிச்சம்!

No comments:

Post a Comment