Monday 9 September 2019

செல்வாக்கு உயருகிறதா...?

இஸ்லாமிய சமயப் போதகர், ஸாகிர் நாயக்கின் செல்வாக்கு உயருகிறதா என்று கேட்டால் "ஆம் உயருகிறது!" என்று அடித்துச் சொல்லலாம்!

வருங்காலங்களில்  அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக  இருப்பதாகவே நம்பலாம்1  அப்படி அவர் அரசியலில் ஈடுபட முடியுமா என்கிற கேள்விகள் தேவையில்லை.

இப்போது அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் அரசியல்வாதிகள் செய்கின்ற காரியங்கள் தான்!   அரசாங்கத்தின் அனுமதியோடு தானே அவர் செய்கிறார்.  அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் போது  அவர் அரசியல்வாதியாவதை அவர்கள் ஏன் தடுக்கப் போகிறார்கள்? 

நாட்டுக்கு நல்லது என்று அரசாங்கம் நினைத்தால் அது நடப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே! நல்லது என்றால் நடக்கட்டும்!

ஆனால் ஸாகிர் நாயக்கைப் பற்றி இரு வித கருத்துக்கல் இருக்கின்றன. அவர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்  என்பதாக ஒரு கருத்து. அதே சமயத்தில் மத துவேஷத்தை வளர்ப்பவர் என்பதாகவும் கூறப்படுகின்றது.

மத துவேஷம் என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம்.  கிளந்தான் மாநிலத்தில் நடைப்பெற்ற ஒரு கூட்டத்தில் இந்து மதத்தைப் பற்றி இந்துக்களைப் பற்றியும் அவர் சாடிப் பேசியதை காணொளிகளில் கண்டோம். இதற்கு முன்னரும் இந்து மதத்தைப் பற்றி தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காரணம் அவர் இஸ்லாமிய அறிஞர் தானே தவிர இந்து சமய அறிஞர் அல்ல. 

தீவிர வாதம் என்பது இந்தியா அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அத்தோடு  கோடிக்கண்க்கான பண பரிமாற்றம்.   தீவிரவாதம் பேசுவதன் மூலம்  அவருடைய கல்லாப்பெட்டி  நிறைகிறது!   இளைஞர்களையும் தீவிரவாதத்திற்கு இழுத்துச் செல்லுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. 

மற்ற நாடுகளில் அவர் செய்த தவறுகள் நமக்குத் தெரியவில்லை.  ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. ஸாகிர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார்!  அவருடைய பேச்சாற்றல் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துச் செல்லுகிறது. இனங்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்துகிறார். 

அவர் மேல் நாம் சுமத்துகிற குற்றச்சாட்டுகள் இப்படித்தான் போகிறது.  ஆனால் இவைகள் எல்லாம் ஸாகிர் நாயக்கின் பலமாக பார்க்கின்றவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் தீவிரவாதம் பேசுவதில்லை. ஆனால் பேசும் ஸாகிர் நாயக்கை ஆதரிக்கிறார்கள்.! நாட்டில் கலவரத்தை இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. ஸாகிரால் முடியும் என்பதால் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

இவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றாலும்  இவர்கள் வகிக்கின்ற பதவிகள் ஸாகிருக்கு பலமாக இருக்கின்றன. அவருக்குச் செல்வாக்கைக் கொடுக்கின்றன.  அவருடைய செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஸாகிர் எல்லாக் காலங்களிலும் குழப்பங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்!  குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்! கலவரம், தீவிரவாதம் இதெல்லாம் அவருக்குப் பிடித்தமான கலை!

அவருடைய உயரம்இன்னும் எவ்வளவு தூரம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment