Saturday 22 August 2020

பொய் சொல்லிக் கோயில்களை உடைக்கலாமா?

 பொய் சொல்லுகின்ற வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பது இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு வழக்குமொழி தான்!

அப்படி போஜனம் கிடைக்காத பொய்யுரைத்தவனை  யாரையும் பார்த்திருக்கிறீர்களா?  இது பெரிய விஷயம் அல்ல.  நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும். பொய் சொல்லி வயிறு வளர்த்த எந்த அரசியல்வாதியாவது நிம்மதியாக சாப்பிடுகிறானா என்று பாருங்கள்! அது போதும்.

 இந்த வழக்குமொழி மூலம் பொய் சொல்லுபவனுக்குக் கிடைக்கும் பெரிய தண்டனையையே சுட்டிக் காட்டியிருக்கிறான் தமிழன்! 

அப்படியென்றால் பொய் சொல்லிக் கோயில்களை உடைத்தால் அவனுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன? 

பொதுவாக பொய் சொல்லுபவனுக்கு முதலில் நிம்மதி இல்லை. அதுவும் கோயில்கள் அல்லது எந்த வழிபாட்டுத்தளங்களாக இருந்தாலும் அதனை அழிப்பவனுக்கு, அவன், தன்னைத் தானே அழிப்பதற்குச் சமம். அழிப்பவன், தான் சார்ந்த வழிபாட்டுத்தளமாக இருக்கலாம் அல்லது பிற மத வழிபாட்டுத் தளமாக இருக்கலாம்.  ஆனால் அதன் முடிவு என்னவோ ஒன்று தான்!

வழிபாட்டுத்தளங்கள் என்றாலே அங்கே ஒரு சக்தி உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இங்கு நாம் அழிப்பதற்கு அல்லது உடைப்பதற்குக் காரணமானவனைப் பற்றித் தான் பேசுகிறோம். கூலிக்கு மாரடிப்பவனைப் பற்றி அல்ல.

ஒரு முறை கோயில் உள்ள சிலைகளை அகற்றுவதற்காக,  படித்த,  வழக்கரைஞன் ஒருவன் கம்பீரமாக யாரையும் பொருட்படுத்தாமல் வந்து சிலை மீது கை வைத்தான். அதே நிமிடத்தில் அவன் இடுப்பைப் பிடித்துக் கொண்டான்! அதன் பின்னர் பல மாதங்கள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை! கூட இருந்த,  அவன் கூட வந்த கூட்டம்,  அனைவரும் ஓடிப் போய்விட்டனர்!

அப்படி என்றால் பிற மதத்துவன் ஒருவன் இப்படிச் செய்தால் என்ன ஆகும்? எல்லாமே ஆகும்! அவனுக்கும் தண்டனைகள் உண்டு! அவன் மனநிலை பாதிக்கப்பட்டு சாவான் அல்லது சொல்ல முடியாது பிற நோய்கள் வந்து சாவான்!

அது நமக்குத் தெரிவதில்லை. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் என்ன நடக்கிறது என்பது தெரியும்! வெளியே நமக்குத் தெரியவில்லையே தவிர நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது! அவனவன் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறான்!

கோயில்கள் மட்டும் அல்ல எந்த வழிபாட்டுத்தளமாக இருந்தாலும்  உடைப்பது என்பது அவனது குடும்பத்தை உடைப்பது  போன்றது. அதனால் பொய் சொல்லி உடைப்பது என்பது மகா பெரிய பாவம்! மகா பெரிய அயோக்கியத்தனம்! உடைப்பதற்கு யார் காரணமோ அவனது மூளை முடங்கிப் போகும்

No comments:

Post a Comment