மலேசிய இந்தியர் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக புள்ளியல் துறை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இது பற்றி சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இந்தியர்களின் கணக்கெடுப்பு சரியாக அமையவில்லை என்பதாகப்பேசப்பட்டது. அவ்வளவு தான். மேலும் அது பற்றிப் பேசினாலும் காது கொடுப்பார் யாருமில்லை!
Monday 13 May 2024
மக்கள் தொகையில் சரிவா?
Sunday 12 May 2024
ஆட்டுக்கறி விருந்து!
ம.இ.கா.வின் இது போன்ற அரசியலைத்தான் நாம் வெறுக்கிறோம்!
Saturday 11 May 2024
இடைத் தேர்தலுக்குப் பின்!
கோலகுபுபாரு இடைத்தேர்தல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!
Friday 10 May 2024
தேர்தல் அன்று!
கோலகுபுபாரு இடைத்தேர்தல் அன்று தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் காலை மணி 8.00 க்கு தயாராகிவிட்டன. அனைத்தும் மாலை மணி 6.00 வரை திறந்திருக்கும்.
சுமார் 30,269 வாக்களார்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் இரவு 10.00 மணி அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க காவல்துறை குவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு நான்கு முனை போட்டி என்றாலும் இரண்டு கட்சிகளே பிரதானமாகத் தோன்றுகின்றன. பிரதமர் தலைமையில் இயங்கும் பக்காத்தான் ஹராப்பானும் முன்னாள் பிரதமர் முகமது யாஸின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலும் முக்கியமானவை. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் போட்டியிடும் நான்கு பேருமே தொகுதியில் வாக்களிக்க தகுதி பெறவில்லை! அனைவருமே வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்!
பல்வேறு காரணங்களுக்காக இந்திய வாக்களார்கள் வாக்களிக்கமாட்டார்கள், சீனர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று சொன்னாலும் பின்னர் அவர்கள் அனைவருமே சமரசமாகி விட்டார்கள். மலாய், சீன வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கி விட்டாலும் இந்திய வாக்களர்கள் தாமதமாகத்தான் வாக்களித்திருக்கின்றனர். அன்று வேலை நாள் என்பதால் அந்தத் தாமதம்.
இந்திய வாக்களர்களைப்பற்றி பலவாறு குறைகள் சொன்னாலும் இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குச் சரியானதொரு பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். தொகுதியில் பல்வேறு பணிகள் உறுதியளித்தவாறு நடைபெறவில்லை. நடைபெறும் என்பதாக உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை, இந்தியர்கள், வாக்குச்சாவடிக்கு சும்மா ஓட்டுப் போட போகவில்லை. சில உறுதிமொழிகளுடன் தான் ஓட்டு போடுகின்றனர். இதனை நாம் ஓர் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம். வருங்காலங்களில் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பலாம்.
Thursday 9 May 2024
இடைத் தேர்தலுக்கு முன்!
iகோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கு முன் நடந்த சரித்திரபூர்வமான சம்பவங்கள்!
எல்லாத் தலைவர்களும் ஒன்று கூடினார்கள். ஒன்று சேர்ந்து கும்மியடித்தார்கள்!
"தேர்தலை புறக்கணியுங்கள்!" என்றது ஒரு கூட்டம். குறிப்பாக பெரிகாத்தான் நேஷனல். அப்படிப் புறக்கணித்திருந்தால் புதிய வருகையான முன்னாள் ம.இ.கா.வினருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்!
"தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்களியுங்கள். ஆனால் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்காதீர்கள்!" பின்னர் தொனியை மாற்றிக் கொண்டு இப்படி ஒரு பிரச்சாரம்!
"பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவா? கெடா மாநிலத்தைப் பார்த்தீர்களா? அத்தனை உரிமைகளும் பறிபோகும்!" இப்படி ஒரு தீர்க்கதரிசனம்!
"எதிர்கட்சிக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்! உங்களை அம்போ என்று விட்டுவிடுவார்கள்! எங்களை நம்புங்கள். எங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்!" என்று எல்லா தலைகளும் புருடா விட்டன!
இப்படி எல்லாம் பேசினால் யாருக்குத் தான் வாக்களிப்பது? குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் என்ன தான் பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை. இது நாள் வரை என்ன தான் குறை என்று அறிந்து தெரிந்து அதனைச் சரி செய்ய யாருக்கும் துணிவில்லை. வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஏற்கனவே சொல்லப்பட்ட, உறுதி கூறப்பட்டவைகள் எதனையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை. அந்தக் கட்சியினர் வியாதியால் துன்பப்பட்ட ஒருவரை அங்கே நிறுத்தியிருந்தனர். அதனால் எந்த வேலையும் ஓடவில்லை என்பது தான் உண்மை.
எப்படி இருந்தாலும் அந்தத் தொகுதி மக்கள் தான் அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்தனர். சும்மா இருந்தால் சோத்துக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தான் அத்தனை தலைகளும் பேச ஆரம்பித்தன! மீண்டும் மீண்டும் உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டன. பேசப்பட்டன. விவாதிக்கப்பட்டன.
அதன் பின்னர் தான் மக்கள் பஞாயத்தை ஏற்றுக் கொண்டனர். இது தான் தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை.
Wednesday 8 May 2024
இடைத் தேர்தலுக்கு ரெடியா?
நாடு எதிர்பார்க்கும் மிகப்பிரமாண்டமான இடைத்தேர்தல் என்றால் அது கோலகுபுபாரு இடைத்தேர்தல் தான்!
எப்போதும் அலட்சியமாக பார்க்கும் நமது அரசியல்வாதிகள் இப்போது நமக்கும் ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்! இப்போது அது வந்திருக்கிறது! ஒவ்வொரு அரசியல்வாதியும் குனிந்து குனிந்து வாக்கு அளிக்குமாறு கூனிக்குறுகுகிறான்!
இதில் நமது ம.இ.கா.வினரை நினைக்கும் போது தான் நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பேசுபவர்கள் அனைவருமே "அறுபது ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது செய்வார்களா?" என்கிற கேள்வி வரும் போதெல்லாம் அது அவர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியாமலா போகும்! என்ன செய்ய? அது தான் அரசியல் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! நாம் ஏன் ம.இ.கா.வின் மேல் இத்தனை அக்கறை காட்டுகிறோம்? காரணம் நம்மில் பெரும்பாலோர் முன்னாள் ம.இ.கா.வினர் தான். மற்றவர்கள் எப்படியோ நான் கட்சியின் கிளையோன்றில் செயலாளராக இருந்தவன்! எப்படியோ இருக்க வேண்டிய கட்சி......இப்படி ஆனதே என்பதில் வருத்தம் தான்!
அரசியல்வாதிகளுக்கு நாம் நினைவுறுத்துவது ஒன்று தான். அரசியலை வைத்துப் பணம் சம்பாதிக்க நினைத்தால் அது கடைசியில் சாபத்தைத் தான் கொண்டுவரும். இது தடித்த 'தோலர்' களுக்குப் பொருந்தாது! இப்போது பாருங்கள் வரிசையாக வழக்குகள். டாக்டர் மகாதிர், டைம் ஜைனுடின், முகைதீன்யாஸின் இப்படிப் பல பிரபலங்கள் இன்று அவமானப்பட்டு நிற்கிறார்கள்!
இன்றைய நிலையில் எந்த ஒரு கட்சியும் வீரவசனம் பேசும் நிலையில் இல்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஏமாற்று வேலையைத்தான் செய்கிறார்கள்! நம்மை ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள். நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை!
இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களிக்கட்டும். யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும். ஒரு வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை ஆண்டுகள் பிடித்தன? என்கிற கேள்விக்கு ஜ.செ.க. தான் பதில் சொல்ல வேண்டும்.
மக்களே! வாக்கு யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!
Tuesday 7 May 2024
ஹி! ஹி! பொறாமையா!
பிரதமர் அன்வார் சொன்ன ஒரு கருத்து வேடிக்கை என்று நினைத்தாலும் அது விஷமத்தனமான கருத்து என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
Monday 6 May 2024
மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!
கோலகுபுபாரு தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததில் நமக்கும் மகிழ்ச்சியே.
எல்லாகாலங்களிலும் இந்தியர்களை மடையர்களாக நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம். இந்தியர்கள் என்றாலே எப்படியாவது மடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு ஏற்பட்ட பிணக்கு என்பது பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டம் தான். சமீபகாலம் வரை அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனப்பெண்மணி. ஜ.செ.க. ஏழைகளின் நலனுக்கு பாடுபடும் கட்சி என்று சொன்னாலும் அவர்கள் ஏன் மௌனம் சாதித்தார்கள்? ஒரே காரணம் அங்கு ஏற்பட்டது இந்தியர்களின் பிரச்சனை. அதனால் தான் அவர்கள் அதனைச் செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜ.செ.க. சீனர்கள் கட்சி என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீனர்களின் பிரச்சனைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது அங்கத்துவம் என்பது சும்மா 'பல்லின கட்சி' என்று வெளியே காட்டிக்கொள்ளத்தான்! மற்றபடி நமக்கு எந்த மரியாதையும் இல்லை!
இப்போதும் கூட பார்த்தால் சீனர்களின் பிரச்சனைக்கு வாய் திறப்பார்களே தவிர இந்தியர்களின் பிரச்சனைக்கு 'கப்சிப்' அவ்வளவு தான்!
எப்படியோ இந்த வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், செயல்படுத்தியவர், வாதாடியவர், போராடியவர், என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமானவர் Parti Sosialis Malaysia கட்சியின் திரு.அருட்செல்வன் அவர்கள் தான் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
அருட்செல்வன் (PSM)Sunday 5 May 2024
ஏன் வாய் திறக்கவில்லை?
பிரதமர் அன்வார், இந்திய சமூகத்திற்கு நான் தொடர்ந்து செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்லி வருகிறார்.
Saturday 4 May 2024
இலஞ்சம் தவிர்!
இப்போது நம் கண் முன்னே இருப்பது கோலகுபுபாரு இடைத்தேர்தல் மட்டும் தான்!
அத்தொகுதியில் உள்ள மக்கள் தான் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்கிற முடிவை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அவர்களைப் பிரதிநிதித்தவர்கள் எத்தகைய சேவைகளைக் கொடுத்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
வெளியே இருந்து கொண்டு பல நூறு அவதூறுகளை அள்ளி வீசலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால் சிலாங்கூர் அரசாங்கம் ஏழைகளுக்குப் பல நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதில் இந்தியர்களும் பயன் பெறுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் நாம் பேசுவது அந்தத் தொகுதி அளவில் என்ன நடந்திருக்கிறது என்பது தான். நிச்சயமாக அதே தொகுதியில் மலாய்க்காரர்களும் சீனர்களும் கூடவே இந்தியர்களும் காலங்காலமாக வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர்.
நமக்குத் தெரிந்தவரை மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியாது. அது தானாகவே வந்து சேரும். சேராவிட்டால் அதன் பலனை அரசியல்வாதிகள் அனுபவிக்க நேரும்! அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் உண்டு . சீனர்களுக்கு அனைத்தும் 'உள்ளுக்குள்ளேயே' பேரம் முடிந்துவிடும். அவர்களை ஏமாற்றுவது கடினம்.
இதில் இந்தியர்கள் தான் வாயில்லா பூச்சிகள்! ஏமாற்றுவது எளிது. நமது தேவைகள் புறக்கணிக்கப்படுவது இயல்பு. நமது தேவைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிபண்ணுவது நமக்கு மட்டும் தான் நடக்கும்! இது தான் நமக்குக் கிடைக்கும் இலஞ்சம்! இதனைக் கொடுத்தே இந்திய சமுதாயத்தை சரிசெய்துவிடலாம் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு உண்டு!
நமது கோரிக்கை என்ன என்பதற்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அங்கு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாத ஒரு திட்டம் என்று கூறப்படுகிறது. அதனை நிறைவேற்றக் கூறி நாம் அழுத்தம் கொடுக்கலாம். இந்த நேரத்தில் அது நிறைவேற வாய்ப்புகள் உண்டு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் போராட வேண்டும்.
இத்தனை நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், பிரச்சாரங்கள், பல்வேறு கருத்துகளை அங்குள்ள தொகுதி தலைவர்கள் கேட்டிருப்பார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கும். யாரை நம்பலாம், யார் போலிகள் போன்ற விபரங்கள் இப்போது தெரிந்திருக்கும்.
நீங்களே யாருக்கு உங்கள் வாக்கு என்பதை முடிவு செய்யுங்கள். குடிமுழுகிப் போக ஒன்றுமில்லை. இலஞ்சம் தவிர் என்பதை மறந்து விடாதீர்கள்!
Friday 3 May 2024
வெறும் வார்த்தைகள் போதா!
அசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லையா? அதைத்தான் கேட்கிறோம் இந்த இடைத்தேர்தலில்! அதனை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் உருட்டல்களை நம்பித்தான் வாக்குகள் அளிக்கிறோம். பதவிக்கு வந்தவுடன் அவன் மேலே போகிறான் நாம் கீழே போய்விடுகிறோம்!
அது பற்றி நமக்குக் கவலையில்லை. அவனுக்கு இருக்கிற அதே உரிமை நமக்கும் இருக்கிறது. சில தேசிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. ஆனால் அந்தத் தொகுதி மக்கள் ஏமற்றப்பட்டிருக்கிறார்களே அது பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
அந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜ.செ.கட்சியைச் சேர்ந்தவர். மூன்று தவணைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் அவர் அங்கு நிலவிய வீடமைப்புத் திட்டத்திற்கு ஆதரவு தரவுமில்லை; முடிவுக்குக் கொண்டு வரவுமில்லை. அதனால் தான் இது நாள் வரை இத்தனை இழுத்தடிப்புகள். இழுத்தடிப்பு என்றால் ஜ.செ.க. செயல்படவில்லை என்பது தான் பொருள்.
என்ன காரணமாக இருக்கும்? வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது நிலம் சீனர்களுடையது வீடுகள் இந்தியர்களுக்கானது - என்று தான் இருக்க வேண்டும். அது தான் மலேசிய சூழல். சீனர்கள் என்னும் போது ஜ.செ.கட்சி செயல்படாது என்பது நமக்குத் தெரியும். இந்தியர்களுக்கு என்றால் ஜ.செ.க. அலட்சியம் காட்டத்தான் செய்யும்! அது தான் அவர்களது வாடிக்கை!
அதனால் தான் அங்குள்ள இந்தியர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். வீடமைப்புப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையென்றால் "எங்கள் வாக்கு எதிர்கட்சியினருக்கே!" என்கிற கோஷம் சரியானது தான்!
அரசாங்கம் நமது உரிமைகளுக்கு மரியாதை தரவேண்டும். கல்வி, வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான். அது தேசியப் பிரச்சனை. நமக்கு இந்தத் தொகுதியே இப்போதைய பிரச்சனை. கோலகுபுபாரு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்கிற உறுதிமொழி இருந்தால் பக்காத்தானுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம்.
Thursday 2 May 2024
அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!
பொதுவாக இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, அது இப்போது தான் நடந்திருக்கிறது. அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில் நடந்திருப்பது மேலும் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.