Tuesday 1 December 2020

அஸ்மின் அலி என்ன செய்கிறார்?

 இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்குக் காரணகர்த்தா என்றால் அது அஸ்மின் அலி தான்!

மற்றைய அரசியல்வாதிகளைப் போல அவ்ருக்கும் "ஏன், நான் பிரதமராகக் கூடாது?" என்கிற ஆசை தீடீரென அவருக்கு ஏற்பட்டிருக்கிறது!! அப்படி ஒரு ஆசை அவருக்கு இருக்கிறது என்பது அதற்கு முன்னர் யாருக்கும் தெரியவில்லை.

அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் உடன் கூடி இருக்க வேண்டிய சூழலலை அவர் ஏற்படுத்திக் கொண்டார். டாக்டர் மகாதிருக்கு,  அவருக்கு அடுத்து,   பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை அவர் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கைக்கு ஏற்ப அன்வாரை அவர் பெயரளவில் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது.  அஸ்மின் அலி, மகாதிர்-அன்வார்- ரிடையே ஏற்கனவே இருந்த பகமையை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர்களிடையே இருந்த விரிசலை ஊதி ஊதிப்  பெரிதாக்கி அவர்களின் பகமையை வளர்த்து விட்டார். அவர்களின் பகமையை வளர்த்து, தனது பிரதமர் ஆசையை டாக்டர் மகாதிரின் மூலமே வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்!

ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை! இனி மேலும் நிறை வேற வாய்ப்பில்லை! இடையே முகைதீன் யாசின் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி விட்டார்!  அவருக்கும் பிரதமர் ஆசை இருந்திருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை! குழம்பிய குட்டையில் அவர் பிரதமராகிவிட்டார்!

பிரதமர் பதவிக்கு எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அன்வார் இப்ராகிம் வழக்கம் போல பின்னுக்குத் தள்ளப்பட்டார்! அன்வாருக்குத்  தற்காலிக பிரதமர் என்பதில் ஆசை இல்லை. நிரந்தர பிரதமர் என்பதில் தான் அவர் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.

ஆமாம், அஸ்மின் அலியின் இன்றைய நிலை என்ன?  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய அமைச்சரவையில் அவர் அனைத்துலக தொழில்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இனி பிரதமராக வரும் அளவுக்கு அவரால் உயர முடியுமா என்று கேள்வி எழுந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் இப்போது மற்ற மலாய் கட்சிகள் அவரைப் புரிந்து கொண்டு விட்டனர்!  தங்களின் "பிரதமர்" ஆசைக்கு வேட்டு வைப்பவர் என்றே அவரைப் பற்றியான எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது! அதனால் அவர் பெரும்பாலும் வருங்காலங்களில் ஒதுக்கப்படுவார் என்று நாம் நம்பலாம்.

ஓர் ஆட்சி திறம்பட நடந்து கொண்டிருக்கும் போது அதனை ஒழித்துக்கட்டி ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியவர் அஸ்மின் அலி. அது ஒரு துரோகம் என்று அவர் அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அஸ்மின் அலி செய்ய வேண்டியதை செய்து விட்டார். இனி செய்ய ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment