Thursday 12 January 2023

பண அரசியல் வேண்டாம்!

 

சமீபத்திய  இளைஞர் அம்னோ மாநாட்டில்  கட்சியின்  துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் கவனித்தக்கது.

காலங்கடந்து சொல்லப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் அது சொல்லப்பட வேண்டிய விஷயம். சொல்ல வேண்டிய இடத்தில் பேராளர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்!

அம்னோ கூட்டத்தில்  சொல்லப்பட்டிருந்தாலும் அது இந்தியர்களைப் பிரதிநிதிக்கும்  ம.இ.கா.வுக்கும் பொருந்தும். பொதுவாக இது போன்ற விஷயங்களில் ம.இ.கா. 'கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது'  என்று பூனையைப் போல யோசிப்பது தான் வழக்கம்! ஒரு சிலர் தாங்கள் தேர்ந்துடுத்த பாதையை விட்டு விலகுவதை விரும்புவதில்லை! தலைவன் காட்டிய பாதையை விட்டு விலகமாட்டார்கள்!

முகமட் ஹாசான் அப்படி என்ன தான் சொன்னார்? "பண அரசியலைக் கொன்றுவிடுங்கள்! இல்லையேல் அது அம்னோவைக் கொன்றுவிடும்!" 

புரியும் என நினைக்கிறேன். அரசியல்வாதிக்குப் புரியாததா! அம்னோவினர்  அரசாங்கத்தைக்  கொள்ளையடித்தனர். ம.இ.கா. வினர் இந்தியர்களைக் கொள்ளையடித்தனர். அது தான் வித்தியாசம். கடந்த இரண்டு தேர்தல்களிலும்  அம்னோவினருக்குப்  பலத்த அடி.  இந்த தேர்தலில் மக்கள் அவர்களைப் பாய் போட்டு படுக்க வைத்துவிட்டனர்! ம.இ.கா. வினருக்கும் அதே கதி தான்! அம்னோவினர் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டனர்.  ஆனால் ம.இ.கா.வினர் ஒப்புக்கொள்ளவில்லை! "நாங்கள் செய்த சாதனை என்ன, எங்களை விட்டால் எவன் உங்களுக்கு உதவப் போறான் அதையும் பார்ப்போம்!" என்கிற சவடால் தனம் அவர்களிடம் இன்னமும் உண்டு.  

என்ன தான் கத்தோ கத்து என்று கத்தினாலும் ம.இ.கா.வின் மேல் இந்தியர்களுக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! சரியான ஏமாற்றுக் கும்பல் என்கிற ஒரு மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்! இப்போது ம.இ.கா.வினர் என்ன நினைக்கிறார்கள்?  அவர்களிடம் திருந்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. இனி இந்தியர்களின் முகத்தில் விழிக்கப் போவதில்லை!  ம.இ.கா.வினர் முகத்தில் மட்டுமே விழிப்போம் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்! நல்லது, நாம் என்ன செய்யமுடியும்?

இந்தியர்களின் பிரச்சனைகளை நல்லபிள்ளை  போல அப்படியே தூக்கி நம்பிக்கைக் கூட்டணியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்! "இனி உங்கள் பொறுப்பு!" இனி ஹாயாக தங்களது  'பணிகளைச் செய்யலாம்! அதென்ன பணி?  அப்படியென்ன தெரியாமலா போய்விடும்? சீக்கிரம் தெரியவரும்!

அம்னோவின் துணைத் தலைவர் சொன்னதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இனி பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் காண்பிக்க முடியாது! எந்தக் கட்சியாக இருந்தாலும் சரிதான். அம்னோ மட்டுமல்ல, பெரிகாத்தான் கூட்டணியாக இருந்தாலும் சரி "பண அரசியல்" ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே நம்புகிறோம்!

No comments:

Post a Comment