Wednesday 29 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (30)

வியாபாரம் மந்தம் ஆகும் போது...!

வியாபாரம் மந்தம் ஆகும் போது நாம் என்ன செய்வோம்?  வியாபாரம் கீழ் நோக்கிப் போகும் போது நமது எண்ணங்களும் கீழ் நோக்கித் தான் போகும் என்பது தான் சராசரி மனநிலை.

முதலில் வேலையாள்களைக் குறைக்க முயற்சி செய்வோம். அது ஒரு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.  விளம்பரங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். அதன் மூலம் சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் மிச்சம் ஆகும்.  ஒரே வெளிச்ச மயம். தெனாகா நேஷனலுக்கு ஏன் தெண்டமாக காசு கட்ட வேண்டும் என்று நினைப்போம். 

இது தான் சராசரி மனநிலை என்பது. நாம் செய்தவை அனைத்தும் நமது தொழிலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறியாமல் செய்கிறோம். எதைச் செய்யக்கூடாதோ அதையே மிகவும் சாதாரணமாக எதையோ சாதித்துவிட்டது போல செய்கிறோம்!

தொழிற்சார்ந்த நிபுணர்கள் கூறுவது என்ன? நாம் மேலே செய்தவை அனைத்தும் தவறு என்று கூறுகின்றனர். ஆமாம் தொழில் மந்தம் அடைகின்ற நிலையில் நாம் மேலும் மேலும் பொருள்களைக் குறைத்து வியாபாரத்தையும் குறைத்துக் கொள்ளுகிறோம்!

நிபுணர்களின் அறிவுரை என்ன?  விளம்பரத்தை அதிகப்படுத்துங்கள் என்பது தான்.  அதனால் தான் வானொலி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒரு சில பொருள்கள் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன! முகநூல்களில் விளம்பரங்கள் வருகின்றன. நேரடியாக மின்னஞ்சல் அனுப்பபடுகின்றன.  வாட்ஸப் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. இன்னும் எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியுமோ அத்தனை வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.

விற்பனையை அதிகரிக்க விறபனையாளர்கள் ஊக்கப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா பயணங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இவைகளெல்லாம் வியாபாராம் மந்தமாக நடைபெறும் காலங்களில்  வியாபாரத்தைத் தூக்கி நிறுத்த செய்யப்படுகின்ற முயற்சிகள்.  அவர்கள் தான் வெற்றி பெறுகின்றனர். 

ஒவ்வொன்றையும் குறைக்க நினைத்தவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். 

வெற்றி தான் நமது இலக்கு.   வெற்றியாளர்களின் அறிவுரைகளை ஏற்று வெற்றி பெறுவோம்!

நமது இலக்கு மந்தம் அல்ல! வெற்றி மட்டுமே!

No comments:

Post a Comment