Thursday 28 January 2021

இது தாண்டா போலிஸ்!

 

காவல்துறையினரைப் பற்றிய குறைபாடுகள் ஏராளம்!  

ஏன் இந்த குறைபாடுகள் என்றால் நாம் செய்கின்ற குறைபாடுகளினால் வருகின்றவை தான் இவை பெரும்பாலும்!

ஆனால் தேவையான நேரத்தில் அவர்கள் பொது மக்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். 

அது தான் சமீபத்திலும் நடந்திருக்கிறது. தைப்பூச இரத ஊர்வலத்தின் போது காவல்துறையினர், ஆள் பற்றாக்குறையால்,  முருகப் பெருமானின்  சிலையை வெள்ளி இரதத்தில்  தூக்கி வைக்க  உதவியிருக்கின்றனர்.


இதனைப் பெரிதுபடுத்தி ஒரு சிலர் சர்ச்சையாக்குகின்றனர்.

அப்படியே காவலர்கள் உதவாத நிலை உருவாகியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம். குறைவான மக்கள். உதவ ஆளில்லை.  நடு ரோட்டில் அப்படியே வைத்துவிட்டு ஓடிவிட முடியுமா!

காவல்துறையினர் யாருக்கு உதவ வேண்டும், யாருக்கு உதவக்  கூடாது என்கிற நிபந்தனையெல்லாம் வைக்க முடியாது.  ஆபத்து அவசர வேளையில் காவல்துறை, எந்த சூழ்நிலையாக இருந்தாலும், உதவித்தான் ஆக வேண்டும்.

சமயம், இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்கள் கடமையை அவர்கள் செய்யும் போது ஒருசில விதண்டாவாதிகள் விவாதப் பொருளாக ஆக்கி விடுகின்றனர்! பொறுப்பற்ற ஜென்மங்கள் இவர்கள்! வேறு என்ன சொல்ல!

எது செய்தாலும் அதனை அரசியலாக்குவதில்  ஒரு சிலர் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்!

எது எப்படி இருந்தாலும் காவல்துறையினரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்திருக்கின்றனர்.அதில் கருத்து வேறுபாடில்லை!

மிகவும் இக்கட்டான நிலையில் காவல்துறையினர் "இது  தாண்டா போலிஸ்! நண்பன் டா!" என்பதைக் காட்டியிருக்கின்றனர்!

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment