Sunday 21 February 2021

இன்று தாய்மொழி தினம்

 

                                    தாய்மொழி தினம்  (21.2.2021)

இன்று தாய்மொழி தினம். உலகெங்கிலும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. ஒரே காரணம் எந்த மொழியானாலும் அந்த மொழி  பாதுக்கப்பட வேண்டும் என்பது தான்.

தாய்மொழி பயிலுவதில் தமிழராகிய நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு சில குளறுபடிகள் இருந்தாலும் தமிழ் மொழி சீராக எல்லாக் காலங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த காலத்திலும் அது தொய்வு அடைந்ததில்லை.

உலகளவிலும்  பெருமைப்படும் அளவிற்கு தமிழின் பயணம் தொடர்கிறது. தமிழர்கள் தங்களது மொழியை சிறப்பான முறையில்  பாதுகாக்கவே செய்கின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை, அன்றும் சரி இன்றும் சரி,  தோட்டங்களை நம்பியே தமிழ் மொழி இருந்தாலும் இன்றைய நிலையில் அதில் ஓரளவு மாற்றம் தெரிகின்றது. படித்தவர்களும் தாய்மொழி கல்வி தேவை என்பதை உணருகின்றனர். தமிழன் தமிழனாகத்தான் இருப்பான் அதில் மாற்றமில்லை! இது நாடறிந்த உண்மை!

இன்று இந்த தினத்தில் சங்கற்பம் எடுப்போம். என்றென்றும் தமிழைப் பேணிக் காப்போம்! அது போதும்! 

No comments:

Post a Comment