Sunday 17 December 2023

மீண்டும் கோவிட்-19!

 


மீண்டும் கோவிட்-19  அல்லது கோரொனா,  நாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பெருந்தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிற  இந்த வேளையில்  மரண எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தான் போகிறது.

நாம்  பெருந்தொற்று காலத்தில்  முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம்.  முகக்கவசம் அணிந்துகொள்வதில் கொஞ்சம்  பாதுகாப்பும்  இருக்கிறது  அதனை ஏன் நாம் அலட்சியம் செய்ய வேண்டும்?

முகக்கவசம் பாதுகாப்பு என்றாலும் ஏற்கனவே நமக்குச் சொல்லப்பட்ட  அவைகளையும் நாம் பின்பற்றலாம்.  பெருங்கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்க்கலாம்.  

பாதுகாப்புக்காக முன்பு ஊசி போட வேண்டிய  கட்டாயம் இருந்தது. இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  அது இப்போது தேவை இல்லை. ஆனால் இரண்டாவது ஊசி போடாதவர்கள்  போட வேண்டிய நிலைமை வரும். ஊசி போடுவது பற்றி அப்படி இப்படி என்று பல விளக்கங்கள்  அப்போதே வெளியாயின.  நாம் சாதாரண மனிதர்கள்.  அரசாங்கM என்ன சொல்லுகிறதோ அதைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவரை டாக்டர்களும் அரசாங்கம் சொல்லுவதைத்தான் செய்கிறார்கள். அப்புறம் என்ன? 

ஊசி வேண்டாம் என்று சொல்லுபவர்கள் உண்டு.  தேவை இல்லை என்று சொல்லுபவர்கள் உண்டு.   குறைபாடுகள் உண்டு  என்று சொல்லுபவர்கள் உண்டு. ஆனால் ஏதொரு சம்பவம் ஏற்பட்டால் அப்போது நாம் என்ன சொல்வோம்?    நாம் அதனைச் செய்யவில்லையே, இதனைச் செய்யவில்லையே  என்று புலம்பிக் கொண்டிருப்போம்.   இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.  அதனால் அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ  அதனைக் காது கொடுத்துக் கேட்போம். அரசாங்கம் சொல்லுவதைக் கேட்போம். நல்லதோ, கெட்டதோ சுகாதார அமைச்சு சொல்லுவதைக் கடைப்பிடிப்போம்.

இடையில்  புகுந்து குழப்பம் விளைவிப்பவர்களை நம்ப வேண்டாம். இப்போதைக்குச் சுகாதார  அமைச்சு தான்  நமது உயிருக்கு உத்தரவாதம். அதனால்  யாரோ சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல்  சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அதை மட்டும்  கேட்போம்.

வியாதிகள் வரும் போகும். நாம் தான் எசரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment