Saturday 11 June 2022

கட்சித்தாவும் தவளைகள்

 

கட்சி தாவும் தவளைகளுக்கு மிக விரவில் ஆப்பு  அடிக்கப்படும் என நம்ப இடமிருக்கிறது!

ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தொடரில் கட்சி தாவல் தடைச்சட்டம் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் இது குறித்து வெகு விரைவில் பிரதமரைச் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கமும் எதிர்கட்சிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் கட்சித் தாவும் தடைச்சட்டம் முக்கியமானது என்று வர்ணிக்கப்படுகிறது.

உண்மையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இந்நேரம் இந்த கட்சி தாவும் தடைச்சட்டம் அமலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அம்னோ தரப்பினர் என்பது  தெளிவாகத் தெரிகிறது. பிரதமரும் அம்னோவோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் இழுபறி வேலையில் இறங்கியிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது!

அம்னோ கட்சியினர் ஏன் இந்த தடைச்சட்டத்தை  தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்?  எல்லாரும் அறிந்தது தான். சென்ற பொதுத் தேர்தலில்  பக்காத்தான்  வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது நாம் அறிந்தது தான். ஆனால் அந்த கட்சி ஆட்சியைத் தொடர விடாமல் தடைக்கல்லாக இருந்தவர்கள் அம்னோவினர்!  ஆளுங்கட்சியில் இருந்தவர்களைப் பண ஆசை காட்டி தங்களது கட்சிக்கு இழுத்தவர்கள் அம்னோ கட்சியினர்! அதனால் என்ன ஆயிற்று?  பக்கத்தான் அரசாங்கம் கவிழ்ந்தது!
 நாடாளுமன்றத்திலும் இது நடந்தது!  சட்டமன்றத்திலும் இது நடந்தது!  கடைசியில் பக்காத்தான் ஆட்சியை இழந்தது! ஒரு சில மாநிலங்களும்  கலைக்கப்பட்டன!  இதன்  பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்  அம்னோ கட்சியினர்!

ஏன்? நாட்டில் கட்சித்தாவல் என்கிற பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவர்களே அம்னோவினர் தான்! அறுபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் என்கிற முறையில் பணம் அவர்களிடம் கொட்டிக் கிடந்தது! அதனால் தங்களது சித்து விளையாட்டைக் காட்டிவிட்டனர்! அதற்கு முன்னர் கட்சித்தாவல் என்கிற கேள்வியே எழவில்லை!

இப்போதும் அம்னோ கட்சியினர் கட்சித்தாவல் பற்றி வாய் திறப்பதில்லை. காரணம் அடுத்த பொதுத் தேர்தல் எப்படி அமையும்  என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. ஒரு வேளை பிற கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்.........? என்று யோசிக்கின்றனர்! அதனால் அவர்கள் வெளிப்படையாக இந்த கட்சித்தாவல் சட்டத்தை ஆதரிக்கவில்லை!

இந்த முறை நாடாளுமன்றத்தில் கட்சித்தாவலைத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என நம்பப்படுகிறது! நாமும் நம்புவோம்!

No comments:

Post a Comment