Saturday 5 August 2023

ஜ.செ.க. ஏன் வாய் திறப்பதில்லை?

 

மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி ஜ.செ.க. இந்தியத் தலைவர்கள்  இப்போதெல்லாம் வாய் திறப்பதில்லை!

எல்லாம் தெரிந்தது தான். ஆட்சியில் இருக்கும் போது இப்படித்தான் சில சங்கடங்கள் வரத்தான் செய்யும்! இத்தனை ஆண்டுகள் நியாய அநியாயங்களைப் பேசியவர்கள்  இப்போது வாய் திறப்பதில்லை! இத்தனை ஆண்டுகள் வாய் திறக்காதவர்கள்  இப்போது நியாய அநியாயங்களைப் பற்றி பேசுகின்றனர்!  இதனாலெல்லாம் சமுதாயம் விழிப்படைந்து விடுமா? பயன்தான் பெற்று விட முடியுமா? இருந்தாலும் வரவேற்கிறோம்!  யாராவது குரல் எழுப்புகிறார்களே!

ஜனநாயக செயல்  கட்சியினர் இப்போது ஏன் மெட் ரிகுலேஷன் பற்றி பேசுவதில்லை?.  முன்பு பேசியபோது அது அரசாங்கத்தைக் குறி வைத்துத்  தாக்கினார்கள்.  இப்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அவர்களே அங்கம் பெற்றிருப்பதால் அப்படியெல்லாம் பேச முடியவதில்லை. அப்படியே கேட்டாலும் அது சீனர்களுக்கு எதிராகப் போய் முடியும்! அவர்கள் முதலாளிகளே சீனர்கள் தான்! அவர்களை எப்படிப் பகைத்துக் கொள்வது?  பகைத்துக் கொண்டால் அடுத்த முறை தேர்தலில் போட்டி போட வழியில்லாமல் போய்விடும்!

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி அமைச்சு மெட் ரிகுலேஷனுக்காக  சுமார் 30,000 இடங்கள் ஒதுக்குகின்றது. அதில் மலாய் மாணவர்களுக்கு  90 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும். அதனைக் குறைக்க முடியாது. அதனைக் குறைத்தால் அரசாங்கம் மலாய்க்கரர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டி வரும். அடுத்து 10 விழுக்காடு. அதில் சீன மாணவர்களுக்கு  5.43 விழுக்காடு, இந்திய மாணவர்களுக்கு  3.72  விழுக்காடு மற்ற சிறுபான்மையருக்கு  0.85 விழுக்காடு. இதனை அடிப்படையாக வைத்துத் தான் மெட் ரிகுலேஷன் கல்விக்காக மாணவர்கள் எடுக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் நஜீப் காலத்தில் ம.இ.கா.வின் வேண்டுகோளின்படி இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது. பிறகு அது பக்காத்தான் இரண்டு ஆண்டு கால  ஆட்சியின் போது சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  அதன் பிறகு அந்தப் பிரச்சனையை யாரும் எழுப்பவில்லை. காரணம் அது சீன மாணவர்களுக்குச் சாதகமாக  அமைந்தது தான்.

இந்தப் பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் எழுப்புவதைவிட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வி அமைச்சு அதற்குச்  சரியான முறையில் தீர்வு காண வேண்டும்.

ஜ.செ.க. சீனர் நலன் நாடும் கட்சி என்பது நமக்குத் தெரியும் தான். அவர்களையும் குறை சொல்ல வழியில்லை. சீனர்களின் வாக்கை நம்பித்தான்  அந்த கட்சி இயங்குகிறது.  இங்குத்  தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுத்தால் பிரச்சனைகள் வராது. கோட்டா வையும் தள்ளி வைத்து விட முடியாது.

பிரதமர் அன்வார் வருங்காலங்களில் அதற்கான ஒரு தீர்வைக் காண்பார் என நம்புகிறோம்!

No comments:

Post a Comment