Wednesday 24 May 2017

கேள்வி - பதில் (47)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வரத்தான் வேண்டுமா?

பதில்

வரத்தான் வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தமிழர்கள் இருகரங்கூப்பி அவரை வரவேற்ற போது அவர் தமிழர்களை எட்டி உதைத்தார். இப்போது உங்களுக்கு வயாதாகிவிட்டது அரசியல் வேண்டாம் என்கிற போது 'நான் வருவேன்!'  என்று அடம் பிடிக்கிறார்!

ஒரு காலக் கட்டத்தில் "இந்தத் தமிழ் நாட்டை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது!"  என்று சொன்னவர். அப்போது நீங்கள் வந்து காப்பாற்றுங்கள் என்று மக்கள் கெஞ்சினர். அப்போது அவர் கண்டு கொள்ளவில்லை.

அப்போது தமிழகத்தின் மீது அவரின் பார்வை வேறு விதமாக இருந்தது. இப்போது அவரின் பார்வை வேறு விதமாக மாறி விட்டது!

அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வலுவானக் காரணங்கள் இருக்க வேண்டும். அப்படி அரசியலுக்கு வர வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் அதற்கான அடிப்படை வேலைகளை அவர் எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதனையுமே செய்யவில்லை. ஓர் அந்நியராகவே வாழ்ந்து கொண்டு சினிமாவில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இப்போது மக்கள் கேட்பதெல்லாம்: அவர் ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்தாரா?  நெடுவாசலுக்குக் குரல் கொடுத்தாரா?  ஏன்? கடைசியாக பாகுபலி சத்தியராஜ் பிரச்சனையில் குரல் கொடுத்தாரா? ஒன்றுமே இல்லை! தன்னைத் தமிழராக எந்த இடத்திலும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.

இப்போது ஏன்? அவருக்கு என்ன பிரச்சனை? அவர் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவர்கள் யார்? இப்போது அவருக்கு எதிர்ப்பு தமிழர்களிடமிருந்து தான் கிளம்புகிறது. தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அவரை ஆதரிக்கிறார்கள். காரணம் உண்டு. தமிழர்கள் தமிழகத்தை ஆட்சி புரிவதை இந்தத் திராவிடப்பிரிவனர் விரும்பவில்லை. வழக்கம் போல தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள். அத்தோடு தமிழகப் பிராமணர்களும் ரஜினியே ஜெயலலிதாவுக்குச் சரியான மாற்று என்று அவர்களும் ரஜினி வருவதை விரும்புகிறார்கள்.

சரி! நான் தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரியில் பிறந்தேன் என்கிறார். அதனால் நான் தமிழன் என்கிறார். அதுவும் சரி. ஆனால் அவர் பிறந்த கிராமத்திற்கு இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? ஏதாவது பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்திருக்கிறாரா? அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? ஒன்றுமே இல்லை! சொந்த, பிறந்த மண்ணுக்கே ஒன்றும் செய்யாதவர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்?

அவருக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்று ஒரு மண்ணும் இல்லை! அவர் ஒரு நோயாளி என்பது அனைவருக்கும் தெரியும். வயதானக் காலத்தில் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் வெளி நாடுகளில் இலவச சிகிச்சை பெறலாம். அப்படியும் இல்லாவிட்டால் பெரும் பெரும் மருத்துவ நிபுணர்களை தமிழ் நாட்டுக்கு வரவழைத்து சிகிச்சைகள் பெறலாம். இதைக் கண்கூடாக ஜெயலலிதா விஷயத்தில் நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி சொல்லுவதற்கும் காரணங்கள் உண்டு. என்னதான் ரஜினி கோடிகணக்கில் பணம் சம்பாதித்தாலும் அவரின் மனைவி, பிள்ளைகள் கையில் தான் கஜானா இருக்கிறது! பணம் உள்ளே போகுமே தவிர, பணம் வெளியாக வாய்ப்பே இல்லை! அவர் படித்த பள்ளிக்கே அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்றால் அவர் என்ன அந்த அளவுக்கு ஈரம் இல்லாத மனிதரா?  ஆனால் அவர் குடும்பத்தினர் செய்கின்ற தவறுகளுக்கு அவர் தான் குற்றம் சாட்டப்படுகின்றார்!

வயதான காலத்தில் அவரும் இந்த இலவசங்களுக்கு ஆசை படுகின்ற நிலைமை அவரது குடும்பம் அவருக்கு ஏற்படுத்திவிட்டது என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அவர் அரசியலுக்கு வரத்தான் வேண்டும் என்கிற நிலைமையை அவருடைய சுற்றுப்புறங்கள் உருவாக்குகின்றன.  ஆனால் சராசரி தமிழன் "இந்தச் சினிமா நடிகர்களால் நாம் ஏமாந்தது போதும்!" என்று நினைக்கிறான். அவர் நல்ல நடிகராகவே இருக்கட்டும்!  அது தான் நமது ஆசை!

இனி மேலும் இனி மேலும் சினிமா நடிகர்கள் தமிழர்களை ஆட்சி செய்ய நினைப்பது தவிர்க்கப்பட வேண்டும்!





No comments:

Post a Comment