Saturday 28 April 2018

இலவச சவப்பெட்டி...!


இந்தியர்களுக்கு இலவச சவப்பெட்டி!  ஆம், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்  துணைப் பிரதமர் சைட் ஹமிடி.

அவருடைய நாடாளுமன்ற தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் இந்தியர்கள் அனைவருக்கும் சவப்பெட்டி இலவசமாகத் தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியிருக்கிறார்.  இதனைக் கூறுவதற்கே அவருக்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். ஆனால் அவர் கூறியிருக்கிறார்! ஏன், எதனால் எப்படி என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. 

இந்தியர்களைக் குறி வைத்து அவர் பேசியிருப்பது நம்மை அவமானப்படுத்துவது என்னும் நோக்கில் தான் அவர் பேசியிருக்கிறார் என்று நாம் நினைக்கத் தோன்றுகிறது. தேர்தல் பரப்புரையின் போது எல்லா இனத்தவர்கள் தான் கலந்துகொள்ளுகின்றனர்.  அவர் பொதுவாகப் பேசி இருந்தால்  யாரும் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏன், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அனைவரும் தானே சவப்பெட்டிகளைப் பயன் படுத்துகிறோம். அவர்கள் மட்டும் என்ன ரயில் பெட்டிகளையா  பயன்படுத்துகிறார்கள்! சவம், சவம் தான்! செத்தா பிணம் தான்! கடைசியில் எல்லாருக்குமே சவப்பெட்டிகள் தான் தஞ்சம்!  சைட் ஹமிடிக்கு மட்டும் என்ன 'சைட்' அடிக்கவா போகிறார்கள்! அல்லது 'சைட் டிஷ்' என்று சொல்லி பகிர்ந்து அளிக்கவா போகிறார்கள்!

அவர் சார்ந்த உள்துறை அமைச்சு தான் இன்றைய இந்தியர்களின் மிகவும் கேவலமான நிலைக்குக் காரணம் என்பதை அவர் அறியாதவரா? குடியுரிமைக் கொடுக்க மறுப்பதும், அடயாளக்கார்டுகள் கொடுக்க மறுப்பதும் - இந்தியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரது உள்துறை அமைச்சு தான் காரணம். அவர் இந்தியர்களை அவமதிப்பது மட்டும் அல்ல, இதுவும் ஒரு விதமான  பயமுறுத்தலாகவே நமக்குத் தோன்றுகிறது. 

அவருடைய தொகுதியில் அவருக்காக வாக்குச் சேகரிக்கப் போகும் நமது இந்திய சகோதரர்கள் கூடவே சவப்பெட்டியோடு செல்லவும்!

No comments:

Post a Comment