Tuesday 10 July 2018

பிறந்த நாள்!...இன்று பிறந்த நாள்!


இன்று (10-7-2018) நமது மலேசியப் பிரதமர், டாக்டர் மகாதீருக்கு பிறந்த நாள்.  93-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.

93 வயது என்றால் யார் தான் நம்புவார்? அவர் செயல்பாடுகள் அப்படி இல்லையே! சரியான நேரத்தில் காலையில் அலுவலகத்தில் இருக்கிறார். அவருடைய வேலையில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறார். அதிகாரிகளைச் சந்திக்கிறார். அயல் நாட்டவரைச் சந்திக்கிருக்கிறார்.  சில பிரச்சனைகள் குத்துகின்றன! சில பிரச்சனைகள் குதூகளிக்க வைக்கின்றன! எல்லாவற்றுக்கும் சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால்  ஊடகங்கள் பெரிது படுத்தும்! அல்லது சிறுமை படுத்தும்!

இது தான் அரசியல்! மனிதனை நிம்மதியாக இருக்க விடாது! ஆனால் இந்த தொண்ணூற்று மூன்று வயதில் இதனையெல்லாம் ஏற்றுக்கொள்ளுவது என்பது சாதாரண காரியம் இல்லை. முடங்கிக் கிடக்கும் வயதில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் டாக்டர் மகாதிர்!

அது எப்படி அவரால் முடிகிறது? ஒரு மனிதன் எந்த வேலையில் அதீத ஈடுபாடு உள்ளவனாக இருக்கிறானோ அவனால் அந்த வேலையை எந்த சோர்வில்லாமலும்  சோர்ந்து போகாமலும் அவனால் செயல் பட முடியும் என்பது மனோதத்துவம்.

டாக்டர் மகாதிர் அரசியலில் அதிக ஈடுபாடு உள்ளவர். அதிலும் மலாய்க்காரர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர். மலாய் இனத்தின் முன்னேற்றமே அவரது இலக்காகக் கொண்டு செயல்பட்டவர்.  அதற்காகவே பல பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர். கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் உயர வைத்தவர்.

முன்பு பிரதமராக இருந்த போது என்னன்ன திட்டங்கள் கொண்டு வந்தாரோ அதில் பல திட்டங்கள் தோல்வியில் போய் முடிந்தன.  திட்டங்களில் எந்தக் குறைபாடும் இல்லை.  லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட ஆரம்பித்தனர். அதனால் நாடு திவால் ஆகக் கூடிய நிலைமையில் .......

மீண்டும் டாக்டர் மகாதிர் பிரதமரானார்! அதுவும் தான் பிரதமராக இருந்த  ஆளுங்கட்சியை வீழ்த்திவிட்டு எதிர்கட்சியின் மூலம்  மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!

ஆது தான் டாக்டர் மகாதிர்!  உலகத்தில் எந்த நாட்டிலும் நடைபெறாத ஓர் அதிசயம் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது! இந்தப் புதிய அரசியல் பிரவேசம் மூலம் மலேசியாவை புதிய பாதையில் கொண்டு செல்லவிருக்கிறார்.

மீண்டும் மலேசியா வெற்றி பெறும்!  மகாதிர் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment