Monday 23 July 2018

வாக்களிப்பு வயது குறையலாம்....!

வருங்கால பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கும் வயது குறையும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகவே  இருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் தனது கொள்கை அறிக்கையில் வாக்களிக்கும் வயதை  பதினெட்டாக குறைக்கும் என அறிவித்திருந்தது. இப்போது அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டதாகவே நமக்குத் தோன்றுகிறது.  சட்டத்துறையின் கையில் அது இப்போது, இன்றை நிலையில்.

ஏன் பதினெட்டு வயதினருக்கு மேல்  வாக்களிக்க வேண்டும்? ஒன்று இளைஞர் சக்தி.  எது நல்லது, எது கெட்டது என்பதை இளைஞர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.  வயதானவர்கள் செக்கு மாடுகள் போல!  "அந்தக் காலத்தில் அப்படி, இப்படி!" என்று கடந்த கால பெருமைகளை சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்!  இப்பொழுது நடக்கும் அநீதிகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  அந்த அநீதிகளையும் பெருமையாக நோக்கும் மனப்பக்குவத்தை அவர்கள் கொண்டிருப்பார்கள்!

ஆனால் இளம் வயதினர் பல வகைகளில் வித்தியாசப் படுகின்றனர். அவர்கள் நிகழ் காலத்தை உன்னிப்பவர்கள். தாங்கள் எதிர்நோக்கும் இன்றையப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துபவர்கள்.  தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்றால் வீறு கொண்டு எழுபவர்கள்!  அவர்களின் துணிச்சலைக் காட்டுபவர்கள்.  ஊழல்களை எதிர்ப்பவர்கள். இது தான் நமக்குத் தேவை. நாட்டிற்குப் பயன்படாத ஆட்சி நமக்குத் தேவை இல்லை.

அடுத்த பொதுத் தேர்தலிலேயே இந்த வாக்களிப்பு வயது பதினெட்டாகக் குறைக்கைப்படக் கூடிய  வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. 

இந்த வயது குறைப்பை  பிரதமரும் வரவேற்கிறார். இன்னும் பலரும் வர வேற்கின்றனர். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர், சைட் சாடிக்   இன்னும் அதிகமாகவே வர வேற்கிறார்!  இந்த நடவடிக்கையின் மூலம்  சுமார் 37 இலட்சம் புதிய வாக்காளர்கள் கிடைப்பார்கள் என நம்பப்படுகிறது. வயதைக் குறைப்பது மட்டும் அல்ல இளைஞர்கள் பதினெட்டு வயது ஆனதும் இயல்பாகவே அவர்கள் தேர்தல் ஆணையத்தினால் வாக்களர்களாகப் பதிவு செய்யப்பட்டு விடுவார்கள். இளைஞர்கள் தேர்தல் தினத்தன்று போய் வாக்களிக்க வேண்டியது தான் அவர்களின் வேலை!

அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment