Wednesday 11 July 2018

ஜாகிர் நாயக் ஏன் பயப்படுகிறார்...?


ஜாகிர் நாயக் ஏன் பயப்படுகிறார்? அது தான் நமது கேள்வி. ஒரு தீங்கும் செய்யவில்லை என்று சொல்லும் அவர் ஏன் இந்தியாவுக்குப் போக பயப்படுகிறார். தனது சொந்த நாடு அவரை அழைக்கும் போது அவரால் ஏன் போக முடியவில்லை?  "மடியில் கனம் இருந்தால் மனதில் பயம்" என்பது நாட்டுப் பழமொழி. பயப்படுகிற அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? 

வேறு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் ஏன் இங்கு வந்து அடைக்கலம் தேடுகிறார்? மற்ற இஸ்லாமிய நாடுகள் எதனும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவரால் தொல்லை என்று மற்ற நாடுகள் நினைக்கின்றன. ஆனால் மலேசிய அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு நிரந்தரமாக தங்கும் தகுதியையும் அவருக்கு வழங்கியிருக்கிறது.

மற்ற இஸ்லாமிய நாடுகளில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் இல்லை;  நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ தேவாலயங்கள் இல்லை; நூற்றுக்கணக்கான புத்தக்கோயில்கள் இல்லை; நூற்றுக்கணக்கான சீனக்கோவில்கள் இல்லை. அது தான் ஜாகிர் நாயக்கின் பலம். அவர் எல்லாக் காலங்களிலும் இந்தியாவில் இருக்கும் போதே இந்து மதத்தை தவறாக விமர்சித்து வந்தவர். எல்லாம் தலைமறைவாக! அதே போல கிறிஸ்துவ மதத்தையும் கிண்டலும், கேலியும் செய்தவர். நேரடியாக இதனை அவரால் செய்ய முடியவில்லை. எல்லாம் இருட்டறையில் நடந்தன!

ஆனால் மலேசியா அவருக்கு,  அவரின் கொள்கைக்கு,  ஏற்ற நாடாக விளங்கியது.  இங்கு இந்து கோவில்களை ஆயிரக் கணக்கில் ஆங்காங்கே பார்க்க ஆரம்பித்ததும்,  ஒத்தக்கருத்துடைய அவரை போன்ற ஒரு சிலர் இங்கு இருந்ததால், அவருக்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விட்டது.  எத்தனை மதங்கள்: இருந்தாலும் இந்து மதத்தை விமர்சிப்பதும், தாக்குவதும் அவருக்கு அலாதியான இன்பம்! ஒரு வேளை அவரின் கடந்த கால கசப்புக்களாக இருக்கலாம். அந்தக் கசப்புக்களுக்குக் காரணமாகவும் அவரே இருந்திருக்கலாம்!

இன்றைய நிலையில் அவர் ஏன் இந்தியா போகப் பயப்படுகிறார்? இப்போது பாருங்கள், அவரைச் சுற்றி நான்கு  மெய்க்காப்பாளர்கள் உடன் வருகிறார்கள்! அவர் எல்லாக் காலங்களிலும் பய உணர்வோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அதுவே சான்று! மேலும் தீவிரவாதம் பேசும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களைச் சுற்றி யாரையாவது வைத்துக் கொள்ளுகிறார்கள்!

அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்: இந்தியா போனால் என்னை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்து விடுவார்கள் என்று! ஆக, தவறு செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். தவறு செய்தால் மலேசியாவில் தட்டிக் கொடுப்பார்கள் என அவர் தெரிந்து கொண்டார்! அது தான் அவரது பலம்! ஆனால் ஒன்றை அவர் மறந்து விடக்கூடாது. நஜிப் காலம் வேறு, மகாதிர் காலம் வேறு! நஜிப்,  அவரை எதிர்த்தால் மட்டுமே எதிரியை எரிக்கவும் துணிவார்! மகாதிர் நாட்டை விட்டு துரத்தவும் தயார் நிலையில் இருப்பவர்!

அதனால் ஜாகிர் நாயக் மீண்டும் மற்ற மதங்களை விமர்சிக்கத் துணிந்தால் அவர் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்படுவார் என்பது அவருக்கே தெரியும்!  அந்தப் பயம் இருந்தாலே போதும்!

No comments:

Post a Comment