Tuesday 24 July 2018

பாராட்டலாமே....!


பேரா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவைப் பாராட்டுகிறேன்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  அ.சிவநேசன் சொன்னதைச் செய்திருக்கிறார். மாநிலத்தில் 134 தமிழ்ப் பள்ளிகள்  இருக்கின்றன.  அவை பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன.

நாட்டில் உள்ள  பல தமிழ்ப்பள்ளிகள் போலவே பேரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் நிலப் பிரச்சனை,  கட்டடப் பிரச்சனை,  கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளைக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. 

இந்தப் பிரச்சனைகளைக் களைவதற்காக அ.சிவநேசன் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அரம்பித்து வைத்திருக்கிறார்.

இந்தக் குழுவில் கல்வி இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள், முன்னாள் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்,  த்மிழ்ப்பள்ளிகளின் ஆய்வு குழுவினர், நிலவள அதிகாரிகள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

நல்ல செய்தி. அது பேரா மநிலத்தில் மட்டும் தான் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. மற்ற மாநிலங்கள்? 

குறிப்பாக நெகிரி செம்பிலானில் இது நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.  நடப்பதாகவும் தெரியவில்லை! தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகள் எல்லா மாநிலங்களிலும் ஒன்று தானே! அப்புறம் ஏன் மற்ற மாநிலங்கள் இன்னும் "கப்சிப்" என்று இருக்கின்றன? 

நெகிரி செம்பிலானில் நாங்கள் இன்னும் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஒரு துணை சபாநாயகர் என்னும் அந்த மிதப்பிலேயே இருக்கிறோமோ!  இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது  ஏதோ மண்சரிவு ஏற்பட்டால் வருவார்கள், வெள்ளம் ஏறினால் வருவார்கள், நெருப்பு, தீ, என்று வரும் போது இவர்களைப் பார்க்கலாம்! அவ்வளவு தான்! மற்றபடி....தெரியாது!

ஆனால் இப்போது நிலைமை வேறு. எந்தச் சாக்குப் போக்கும் எடுபடாது! இன்னும் இவர்கள் களத்தில் இறங்கவில்லை என்றே தோன்றுகிறது.  நமது பிரச்சனைகள் என்ன ஒன்றா, இரண்டா! தோண்டத் தோண்ட நிறைய கழிவுகள்,  சாக்கடைகள் எல்லாம் வரும்! முந்தைய ஆட்சியில் ம.இ.கா.வினர் அவைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்!~ 

அதனால் காலம் கடத்த  வேண்டாம் நண்பர்களே! களத்தில் இறங்குங்கள்!  அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!

அது வரையில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனைப் பாராட்டுகிறேன்!

No comments:

Post a Comment