Tuesday 3 July 2018

புதிய அமைச்சரவை சரியா...?


பிரதமர் டாக்டர் மகாதிர் முழுமையான அமைச்சரவையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர்.  ஒரு வேளை துணை அமைச்சர்கள் இன்னும் இருக்கலாம். 

இப்போது புதிதாக பதவி ஏற்றிருக்கும் அமைச்சர்களைப் பற்றியும் இன்னும் ஒரு சிலருக்கு பதவி கிடைக்காதது பற்றியும் வெளியே எதிரொலிகள் எப்படி இருக்கின்றன?

குறிப்பாக ஜ.செ.க. வும், பி.கே.ஆரும் தங்களது அதிருப்தியைத்  தெரிவித்திருக்கின்றன.  நாடாளுமன்றத்தில் பி.கே.ஆர். அதிகமானத் தொகுதிகளை வைத்திருக்கும் கட்சி. அதனை அடுத்து ஜ.செ.கட்சி அதிகமான தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளுமே  அமைச்சரைவையில் தங்களது கட்சிகளுக்குக்  குறைவான இடமே ஒதுக்கப்பட்டிருப்பதாக குறைபட்டுக் கொள்கின்றன! 

ஆனாலும் ஒன்றை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது பிரதமர் எடுத்த முடிவு. அதுவும் தீர்க்க ஆராய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் நிகழ்காலத்துக்கான ஒரு முடிவாக நாம் இதனைக் கருதக் கூடாது. இது ஒரு நீண்ட காலத்துக்கான ஒரு திட்டம். அப்படித்தான் அது இருக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். அதில் தவறு இருப்பதாக நினைக்கத் தேவை இல்லை.

ஜனநாயக செயல் கட்சி எப்போதுமே இன அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு கட்சி. அது அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறது!  அமைச்சரவையில் அதிகமான சீனர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை. காரணம் அவர்களின் வாக்கு வங்கி என்பது எப்போதுமே சீனர்களின் பக்கமிருந்து தான் அதிகம்!  அவர்கள் மலேசியர்கள் என்று சொன்னாலும் அது சீனர்களைத்தான் குறிக்கும்!

டாக்டர் மகாதிர் மலாய் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்குக் காரணங்கள் உண்டு. வருங்காலங்களில் அம்னோ, பாஸ் கட்சியினரின் குறை கூறல்களைத் தவிர்க்க வேண்டும் அன அவர் நினைக்கலாம். மேலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் திறைமையானவர்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அமைச்சரவை  சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment