Thursday 16 February 2023

புதிய கட்சி உதயமாகுமா?

 

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதீனின்  இப்போதைய நிலைமை என்ன?

கைரி திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். அம்னோ அவரை முதுகில் குத்தியது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே அம்னோ, ம.இ.கா. அரசியல்வாதிகள் தங்களைவிட படித்தவர்கள் யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்! அது தான் கைரிக்கும் நடந்தது.

கைரி ஜமாலுதீன் இங்கிலாந்தில் படித்தவர்.  ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில்  பட்டம் பெற்றவர். இது ஒன்றே போதும் அம்னோ தலைவர்கள் ஏன் அவரைத் தள்ளி வைக்கிறார்கள் என்பது! இப்போதுள்ள அம்னோ தலைவர்களில் கைரி  மட்டுமே ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். 

இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கைரி அடுத்து என்ன செய்வார் என்பது எதுவும் தெளிவாக இல்லை. அவரிடம் உள்ள ஆற்றலுக்கு வேலை என்பது ஒன்றும் பிரச்சனையல்ல.

இப்போது தனியார் வானொலி நிலையமொன்றில் அறிவிப்பாளராக சேர்ந்திருக்கிறார். வாரத்திற்கு ஒரு நாள், திங்கள் கிழமை,  அறிவிப்புப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.  அதே சமயத்தில் ஜொகூர் மாநிலத்தின் இளைஞர் குழுவிற்கு ஆலோசகராகவும்  காற்பந்து சங்கத்தின் இயக்குனர்களின் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்த சூழலில் கைரி புதிய அரசியல் கட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டா என்று பார்த்தால் வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது.  புதிய  அரசியல் கட்சி என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. மேலும் கைரிக்கு அம்னோ கட்சியில் மட்டும் தான் ஈடுபாடு உண்டு என்று சொல்லலாம்.  அவர் வேறு எந்தக் கட்சிக்கும் மாறலாம் என்பதெல்லாம் வெறும் ஊகம் மட்டும் தான்.

என்னதான் அவர் தற்காலிகமாக வேலை செய்தாலும் அவருக்கு  அரசியலில் தான் ஈடுபாடு அதிகம். அதுவும் அம்னோ அரசியலில் மட்டும் தான்.  வேறு கட்சிகளில் அவருக்கு ஈடுபாடு இல்லை.

புதிய கட்சி தொடங்குவார் என்பது சாத்தியமில்லை!

No comments:

Post a Comment