Saturday 25 February 2023

குறை கூறுவதற்கு என்ன காரணம்?

 

ஒற்றுமை அரசாங்கம் எப்படி உருவாக்கம் பெற்றது என்பது நமக்குத் தெரியும்.

தமிழர்கள் ஏன் அரசாங்கத்தை இன்னும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள்?  இந்த அரசாங்கமும் சென்ற அரசாங்கங்களைப் போல நம்மை  ஓரங்கட்டுமோ என்கிற ஐயம் தமிழர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கேற்றாற் போல அரசாங்கமும் மெதுநடை போடுவதால்  நாளுக்கு நாள் நமக்கும் தளர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

இந்தியரின்  கோரிக்கை தான் என்ன?  "எங்கள் பிரச்சனைகளைக் கலைய ஒரு குழு அமைத்துச் செயலபட வேண்டும்" என்பது தான் அவர்களது கோரிக்கை.

கடந்த அறுபது ஆண்டளவாக  ஒரே மாதிரியான ஒரு  முறைமையைக் கடைப்பிடித்து  வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களை மாற்றுவது என்பது  உடனடியாக நடக்கக் கூடிய காரியம் அல்ல.  அங்கு ஒரு இடைவெளி ஐருக்கத்தான் செய்யும்.  இந்திய அதிகாரிகள்  என்றால் நமது பிரச்சனைகளைப் புரிந்து கொள்வார்கள் என்பது தான் அவர்களது எண்ணம். மற்ற இனத்தவர் என்றால் நாம் சொல்லவருவதை அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதாக நாம் நினைக்கிறோம். ஒரு மலாய்க்காரர் அலுவலகத்திற்குப் போனால் அனைவரும் மலாய்க்காரர்கள். ஒரு சீனர் அலுவலகத்திற்குப் போனால்  அனைவரும் சீனர்கள்.  அங்கு போய் அவர்களிடம் நமது பிரச்சனைகளைக் கூறுவது  அது இயல்பாக இருக்க நியாயமில்லை.

அதனால் தான் இந்தியர்கள் என்றால் எங்களது பிரச்சனைகளைக் கொண்டு செல்ல அனுகூலமாக இருக்கும் என்று அவர்கள் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இப்போது நாங்கள் சொல்ல வருவது தான் என்ன? பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். கல்வி பிரச்சனை, தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனை, குடியுரிமை பிரச்சனை,  அரசாங்க/தனியார் துறை வேலை வாய்ப்புகள்,  பொருளாதார வாய்ப்புகள், சிறு சிறு வியாபாரங்களை ஊக்குவித்தல் - இப்படி அனைத்தும் ஒரே இடத்தில் பேசி, தீர்க்கக்கூடிய வகையில்  அமைய வேண்டும். பிரதமர், இந்திய அதிகாரிகள் என்னும் போது அதுவே அரசாங்கத்தின் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். இப்போது எதுவும் காணப்படவில்லை. அதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.

பிரதமர் மீது குறைசொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை.  இந்தியர்கள் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. ஆனால் அரசாங்க இயந்திரம் நகரவில்லை என்கிற ஆதங்கம் இந்தியரிடையே உள்ளது. அவர்களின் வேகத்திற்கு  அரசாங்கத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!

இப்போது நடப்பது முழுமையான நம்பிக்கைக் கூட்டணியின் அரசாங்கம் அல்ல. இது ஒற்றுமை அரசாங்கம். அதனால் மெது மெதுவாகத்தான் நகர முடியும். அதுவரை பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment