Wednesday 6 December 2017

பெண்களே! தமிழக ஆடவர்கள் வேண்டாமே!


மலேசியத் தமிழ்ப் பெண்கள் தமிழ் நாட்டு ஆடவர்களைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்!  இப்போது பத்திரிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தேவசூரியா. இவருக்குத் தமிழ் நாட்டில் என்ன நேர்ந்தது என்பதைப் பலர் அறிவர். 

பெற்றோர்களின் ஏற்பாட்டில்  நடபெறுகின்ற திருமணங்களைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை. தமிழ் நாட்டில் இருந்து இங்கு வேலை செய்ய வருபவர்களைத் திருமணம் செய்து கொள்வது - அதுவும் இந்துவாக இருந்தால் - முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இங்கு வேலை செய்ய வருபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள். வறுமை, ஏழ்மை என்னும் நிலையில் இருப்பவர்கள். இங்கு வேலை செய்ய வந்த அவர்களை "நாங்கள் காதலித்தோம்! திருமணம் செய்து கொண்டோம்!" என்றெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  உங்கள்  எதிர்காலம் தான் முக்கியம். அவர்கள்  இங்கேயே  தங்கி உங்களைக்  காப்பாற்ற  முடிந்தால் நமக்கும் மகிழ்ச்சியே. 

ஆனால் நேரம் வரும் போது அங்குப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டால் உங்களால் அங்கு சமாளிக்க முடியுமா என்பதை ஒன்றுக்கு நூறு தடவை யோசிக்க வேண்டும். அங்குள்ள கலாச்சாரம் வேறு. இங்கு உங்களுடைய மாமனார், மாமியார் பிடிக்கவில்லை என்றால் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் அவர்களைத் தள்ளி விடலாம்! அதற்கு உங்கள் கணவரும் தலையாட்டுவார்!  தமிழ் நாட்டில் இந்தக் கலாச்சாரம் நகர்ப்புறங்களில் உண்டு! ஆனால் கிராமப் புறங்களில் இன்னும் மாமியார்களின் ஆதிக்கம் தான்! பணத்தோடு போனால் வரவேற்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பிணமாகத்தான் வரவேண்டி வரும்!

இது தமிழக  அல்லது இந்திய இளைஞர்கள் மட்டும் அல்ல.  வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர்கள் - இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கும் இதே நிலைமை தான். இது சமயம் சார்ந்த நாடு என்பதால் இவர்கள் இங்கே நிரந்தரமாகத் தங்குவதற்குச் சலுகைகள் உண்டு. ஆனாலும் இவர்களும் தப்பித்தவறி வங்களாதேசமோ, பாக்கிஸ்தனுக்கோ சும்மா போய் பார்த்து வருகிறேன் என்று போனால் கூட    இவர்கள்  நாடு திரும்புவது என்பது சந்தேகம் தான்! இங்கு இருக்கும் வரை அவர்கள் நல்லவர்கள் தான். அங்கு போய்விட்டால் அப்புறம் மனிதம் பற்றியெல்லாம் அவர்களிடம் பேச முடியாது!

அதனால் பெண்களே! எச்சரிக்கையாய் இருங்கள். திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்றால் நாட்டைவிட்டு வெளியேறாதீர்கள். இங்கேயே இருந்து கொண்டு அரசாங்கத்திடம் மனு செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் வெற்றி பெறலாம். சாத்தியம் உண்டு. ஆனால் தமிழ் நாட்டில் போய் சாதிக்கலாம் என்று நினைத்து விடாதீர்கள்!

முடிந்தவரை தமிழக ஆடவர்களைத் தவிர்க்கப் பாருங்கள்! அதுவே சிறந்த வழி!

No comments:

Post a Comment