Saturday 17 February 2018

தாய் மொழி தினத்திற்கு ஸ்டாலினா?


ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!  தாய் மொழி தினத்திற்கும் , தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? 

தமிழ் நாட்டில் தமிழை மட்டும் அல்ல, தமிழர் கலாச்சாரத்தையும் சேர்த்து அழித்ததில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழன் தனது சொந்த நிலத்திலேயே யார் யாருக்கோ அடிமையாக்கப்பட்டு விட்டான். இப்போது ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு நாளும் போராட்டம்  நடத்துகிறான். அனைத்துக்கு மூலக் காரணம் கலைஞர் தான்.  அவரின் நீட்சி தான் ஜெயலலிதா! யார் மறுப்பார்?

இன்று தமிழ் நாட்டில் தமிழன் நிலை என்ன? சாராயம் தான் தமிழனின் முதல் பொழுது போக்கு!  சாராய  விற்பனையில்லாமல்   தமிழகத்திற்கு வேறு வருமானம் இல்லை  என்று அரசாங்கம் கூறுகிறது! மதுபானக்கடைகள் எங்கெல்லாம் நடத்தப்படுகிறது?  பள்ளிகள் அருகே! கல்லூரிகள் அருகே! கோவில்கள் அருகே! மக்கள் கூடுகின்ற இடங்களின் அருகே!  சாராயம் குடிக்கா விட்டால் தமிழ் நாட்டை ஆள வழியில்லை என்று யார் கூறுகிறார்? கலைஞர் கருணாநிதி. சரி, அந்த சாராய ஆலைகளை நடத்துபவர்கள் யார்? கருணாநிதியின் குடும்பம்! இன்னொரு பக்கம் ஜெயலலிதா, சசிகலா கூட்டம்! 

சாரயாத்தின் மூலம் தமிழர்களைத் தொடர்ந்து அழித்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி. தமிழ் மண்ணில் நமது சொந்தத் தாய் மொழியானத் தமிழை கேவலமான ஒரு சூழலுக்கு இட்டுச் சென்றவர் யார்? கருணாநிதி தானே! தமிழைப் படிப்பது கேவலம் என்றும் ஆங்கிலம் படிப்பது கௌரவம் என்றும் ஒரு கேவலத்தை உருவாக்கியவர் யார்? கருணாநிதி தானே?

தலை நிமிர்ந்து வாழ வேண்டிய தமிழன் தனது சொந்த மண்ணில் இன்று தலைக் குப்புற கவிழ்ந்து கிடக்கிறான். கர்நாடகாவில் தமிழனை அடிக்கிறான். ஆந்திராவில் தமிழனை அடிக்கிறான். கேரளாவில் தமிழனை அடிக்கிறான். அடிக்கிற அத்தனை இனத்தவனையும் தமிழ் நாட்டில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறான் தமிழன்! இதென்ன பெருமையா?

தமிழன் தனது மொழியை இழந்தான். தமிழன் தனது கலாச்சாரத்தை இழந்தான். தமிழன் தனது சரித்திரத்தை இழந்தான். அத்தனைக்கும் முழு முதற் காரணம் கருணாநிதி!  தமிழ் நாட்டின் ஊழலக்குத் தலைமகன் கருணாநிதி! திருட்டு ரயில் ஏறி ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்த கருணாநிதி  இன்று  தமிழ் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்! அத்தனையும் ஊழல் பணம்! அதனையும் மன்னிக்கலாம். ஆனால் தமிழனுக்குக் குழி தோண்டினாரே, அவனை முக்கால் வாசி சாகடித்தாரே அதை எப்படி மன்னிப்பது?

ஆமாம்! ஸ்டாலின் என்றாலும் கருணாநிதி என்றாலும் தமிழனுக்கு ஒன்று தான்!

No comments:

Post a Comment