Friday 8 June 2018

இந்தியர் விவகாரம் வடிவம் பெறுகிறது! (1)


இந்தியர் விவகாரம் வெகு விரைவில் வடிவம் பெறுகிறது. அதற்கான வேலைகள் ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப் படுவதாகவும்  கூடிய விரைவில் இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் எனவும் பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்திருப்பது நல்ல செய்தி.

இந்தியர் விவகாரம் பற்றி நாம் அவசரப்படுவதும் அது பற்றி எழுதுவதும் இன்றியமையாத ஒன்று. காரணம் நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். அதுவும் நமது தலைவர்களாலேயே நாம் சுரண்டப்பட்டிருக்கிறோம்; நசுக்கப்பட்டிருக்கிறோம்.

இப்போது நேரம் காலம் கனிந்திருக்கிறது. இதற்காகத்தானே நாம் இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம். இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு முதன்மையான ஆலோசனை.

வேலை வாய்ப்பு:  இந்த வேலை வாய்ப்பு என்பது நமது முதல் பிரச்சனை. வெறும் தனியார் துறை மட்டும் அல்ல அரசுத்துறையும் சேர்த்துத் தான் இங்குக் சொல்லப்படுகிறது. நாட்டில் நமது மக்கள் தொகை கிட்டத்தட்ட எட்டு (8%) விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையான கணக்கெடுப்பு அல்ல. குறைந்த பட்சம் பத்து விழுக்காடு நாம் இருக்க வேண்டும். 

பத்து விழுக்காடு வைத்துத் தான் நாம் நமது வேலை வாய்ப்புக்களைப் பெற வேண்டும். அரசுத் துறையில் இனி வருகின்ற வேலை வாய்ப்புக்களில் நமது பங்காக பத்து விழுக்காடாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இனி மேலும் சாக்குப்போக்குகள் வேண்டாம். பொது அரசாங்கத் துறைகள், காவல்துறை, இராணுவத்துறை அனைத்திலும் பத்து விழுக்காட்டை நாம் பெற வேண்டும். அடுத்து தனியார் துறையிலும் இது நாள்வரை நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். மலாய்க்காரர்கள் மட்டும், சீனர் மட்டும் என்று சொல்லியே  இந்தியர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. நமக்குப் பிழைக்க வழியில்லாமல் தான் குண்டர் கும்பல்களை அதிகம் வளர்த்து விட்டிருக்கிறது அரசாங்கம். இதில் அரசாங்கம் தான் குற்றவாளி.

இன்னும் பல பிரச்சனைகள் நமக்கு இருக்கிறது என்றாலும் இப்போது வேலை வாய்ய்ப்புக்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

அடுத்து நாளை...!

No comments:

Post a Comment